Skip to main content

விஜய் சேதுபதி, ஜி.வி. பிரகாஷை தொடர்ந்து எம்.எஸ். பாஸ்கருக்கு பட்டம் கொடுத்த பிரபல இயக்குநர்!

Published on 07/10/2021 | Edited on 07/10/2021

 

M. S. Bhaskar

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சீனு ராமசாமி, நடிகர் ஜி.வி. பிரகாஷ் நாயகனாக நடிக்கும் ‘இடிமுழக்கம்’ படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ள படக்குழு, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது. இப்படத்தில் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன் படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு இயக்குநர் சீனு ராமசாமி, பட்டம் கொடுப்பது வழக்கம். அந்த வகையில், நடிகர் எம்.எஸ். பாஸ்கருக்கு தற்போது ‘நடிப்புச் சித்தர்’ என்ற பட்டத்தை சீனு ராமசாமி வழங்கியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "இறைவனுக்கு சித்தர்கள்போல நடிப்புத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த நடிப்புச் சித்தர் என்று அண்ணன் எம்.எஸ்.பாஸ்கரை கூறினால் அது மிகையாகாது. அவரது திறமை கண்டு அன்று தர்மதுரை படத்திலும், இன்று நான் இயக்கிய இடிமுழக்கம் படத்திலும் உணர்ந்து வியந்தேன். நினைத்த கணத்தில் கண்ணீர், கோபம், அன்பு, பாசாங்கு, கருணை, தயை, கழிவிரக்கம் போன்ற திறன்களை நொடிப்பொழுதில் நேர்த்தியாக வெளிப்படுத்தக்கூடிய நடிகர் இவர். இளைய தலைமுறையினர் இவரிடம் இருந்து கற்றுக்கொள்ள நல்ல முன்மாதிரி. மெத்தட் ஆக்டிங் மற்றும் இயல்பின் நடிப்பு இரண்டையும் வெளிப்படுத்தக்கூடிய சிறந்த நடிகர். அதுமட்டுமல்ல முழு காட்சி முடியும்வரை, ஏன் நாள் முழுக்க கேமரா இவர் பார்வை படும் தூரத்தில் இருப்பார். "பாஸ்கர் அண்ணன கூப்புடுங்க" என்பேன். "தம்பி நான் ரெடி என்பார்". அரை மணி நேரத்திற்கு முன்பே களத்திற்கு, அன்று வழங்கப்பட்ட உடையுடன் நிற்பார். மேக்கப் இல்லண்ணே என்பேன். கன்னத்தில் விரல் அழுத்தி "இல்லை தம்பி" என்பார். நடிகர் திலகத்தை தன் குருவாக நினைக்கும் சீடர். படப்பிடிப்பில் 16 செல்வங்களையும் அனைவரும் பெற வேண்டி அதை வரிசைப்படுத்தி பாடல் பாடி வாழ்த்தினார். நான் இந்த அர்ப்பணிப்பான பெரிய மனிதனின் ஆசிகளாக அதை மனதார ஏற்றுக்கொண்டேன். படப்பிடிப்பு களத்தில் அவர் பகுதி நிறைவுநாளில்  அவருக்கு பிறந்தாள் வந்தது. கேக் வெட்டி வாழ்த்தினோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னதாக நடிகர் விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தையும், ஜி.வி. பிரகாஷிற்கு ‘வெற்றித்தமிழன்’ என்ற பட்டத்தையும் சீனு ராமசாமி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேரு போல அசஞ்சு வந்தவளே...’ - குத்தாட்டம் போடும் ஜி.வி. பிரகாஷ்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Idimuzhakkam first single released

ஜி.வி. பிரகாஷ் நடிகராக இடி முழக்கம், 13, கள்வன், டியர், கிங்ஸ்டன் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக தங்கலான், அமரன், சூர்யாவின் 43வது படம் என ஏகப்பட்ட படங்களில் பணியாற்றுகிறார். 

இதில் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் உருவாகி வருகிறது. கலைமகன் முபாரக் தயாரிக்கும் இப்படத்தில் காயத்ரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். என்.ஆர். ரகுநந்தன் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் கடந்த மாதம் நடந்த பூனே சர்வதேசத் திரைப்பட விழாவில் இந்திய சினிமா பிரிவில் திரையிடப்பட்டது. 

இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாடலாக  ‘அடி தேனி சந்தையில்...’ என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இப்பாடலைத் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். வரதன் எழுதியுள்ள இப்பாடலை அந்தோனி தாசன் மற்றும் மீனாட்சி இளையராஜா இணைந்து பாடியுள்ளனர். திருவிழாவில் நடக்கும் குத்து பாடலாக இப்பாடல் அமைந்துள்ள நிலையில், பாடலுக்கேற்ற குத்தாட்டம் போட்டுள்ளார் ஜி.வி. பிரகாஷ்.

Next Story

“என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி” - எம்.எஸ். பாஸ்கர் உருக்கம்

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
ms bhaskar movie akkaran release update announced in vijayakanth memorial

அருண் கே பிரசாத் இயக்கத்தில் எம்.எஸ். பாஸ்கர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘அக்கரன்’. குன்றம் ப்ரொடக்‌ஷன் மற்றும் சிவானி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கபாலி விஷ் வந்த், வெண்பா, ஆகாஷ் பிரேம்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். எஸ்.ஆர்.ஹரி இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியானது.

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மார்ச் மாதம் வெளியிடவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை விஜயகாந்த்தின் நினைவிடத்தில் பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. பின்பு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எஸ். பாஸ்கர், “எனக்கு வாய்ப்பளித்தவர் என்னுடைய அண்ணன் விஜயகாந்த். எனக்கு நடிகர் சங்க கார்டு வாங்கி கொடுத்ததே அவர்தான். அதை வச்சுதான் இன்றுவரையிலும் நடிப்பு துறையில் இருந்துக்கிட்டு இருக்கேன். அப்படி இருக்கும்போது, இதை செய்வது நன்றிக் கடன். ஆனால் அது சாதரணமான வார்த்தை. அவருக்கு என்னுடைய இதயத்தையே அவரது காலடியில் வைக்கிற மாதிரி.

எங்கள் படக்குழு அனைவரும், அண்ணனுடைய பாதத்துக்கிட்ட வச்சுதான் இந்த படத்தோட பெயரை அறிவிக்கணும் என முடிவெடுத்தோம். அதுதான் எல்லாருடைய ஆசையும் கூட. அண்ணன் உயிரோடு இருந்திருந்தால், அண்ணியோடு சேர்ந்து பட அறிவிப்பை வெளியிட்டிருப்பார். அவர் இல்லை எனச் சொல்ல முடியாது. எல்லார் இதயத்திலும் இருக்கார். இறைவனாக இந்த இடத்தில் இருக்கார். அவருடைய ஆசீர்வாதம் எல்லாரிடத்திலும் இருக்கும்” என உருக்கமுடன் முடித்தார்.