Skip to main content

ராஜமௌலி படத்தில் வில்லனாக நடிக்கும் சமுத்திரக்கனி...?

Published on 27/01/2019 | Edited on 27/01/2019
rrr

 

 

'பாகுபலி' புகழ் ராஜமௌலி தற்போது ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் புதிய படத்தை மிக பிரமாண்ட இயக்கிவருகிறார். சுமார் 300 கோடி செலவில் உருவாகும் இப்படத்திற்கு தற்சமயம் 'ஆர்ஆர்ஆர்' என தலைப்பு வைத்துள்ளனர். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக ஒரு புதிய தகவல் கசிந்துள்ளது. அப்படி நடக்கும் பட்சத்தில் சமுத்திரக்கனியின் முதல் தெலுங்கு படமாக இது அமையும். இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தற்போது சண்டிகர் விரைந்துள்ளது. அங்கு சில முக்கிய காட்சிகளில் நடிக்கும் சமுத்திரக்கனி அதை முடித்து விட்டு மீண்டும் தான் இயக்கியிருக்கும் நாடோடிகள் 2 படத்தின் ரிலீஸ் பணிகளை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக 'நாடோடிகள்' படத்தை பார்த்த ராஜமௌலி, சமுத்திரக்கனியை பாராட்டியதுடன் மட்டுமல்லாமல் தன் வீட்டிற்கும் அழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடியை கிண்டல் செய்த மல்லிகார்ஜுன கார்கே; சிரிப்பலையில் மூழ்கிய மாநிலங்களவை 

Published on 14/03/2023 | Edited on 14/03/2023

 

Mallikarjuna Kharge taunted PM Modi in Rajya Sabha

 

உலக அளவில் சினிமா துறையின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது பெற்ற ஆர்.ஆர்.ஆர் மற்றும் 'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' இரு படக்குழுவினருக்கும் மாநிலங்களவை இன்று தொடங்கியதும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அப்போது முதலில் பேசிய மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  'தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படத்தின் மூலம் இரண்டு பெண்கள் இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது பெற்றுக் கொடுத்திருப்பது பெருமைக்குரியது எனத் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “ஆஸ்கர் விருது பெற்ற இருதரப்பினரை வாழ்த்துவதில் நானும் இணைந்து கொள்கிறேன். விருது பெற்ற இருவரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். அது பெருமையாக உள்ளது. ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துக் கொள்கிறேன். இந்த வெற்றியை பாஜகவினர் உரிமை கொண்டாடிவிடக் கூடாது. நாங்கள் தான் தயாரித்தோம் என்றோ, நாங்கள் தான் பாடல் எழுதினோம் என்றோ, நாங்கள் தான் கதை எழுதினோம் என்றோ, குறிப்பாக மோடிதான் இந்த படங்களை இயக்கினார் என்று நீங்கள் சொல்லிவிடக் கூடாது. இது இந்திய நாட்டின் பங்களிப்பு” என்றார். இது மாநிலங்களவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

அதன்பிறகு பேசிய நரசிம்ம ராவ், “ஆர்.ஆர்.ஆர் படம் தெலுங்கில் எடுத்த படம். அவர்களுக்கு விருது கிடைத்ததை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்” என்று கூற, அடுத்து பேசிய மதிமுக தலைவர் வைகோ, “தமிழ்நாட்டை சேர்ந்த ஏ.ஆர்.ரகுமானுக்கு பிறகு இந்தியாவிற்கு ஆஸ்கர் விருது வாங்கி கொடுத்தவர்களுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

 

 

Next Story

ஆஸ்கரில் வரலாறு படைத்த இந்தியா - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Oscar winning 'The Elephant Whispers' - Chief Minister M.K.Stal's greetings

 

உலக திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதானது சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டின் 95வது ஆஸ்கர் விருதுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறும் ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன. 

 

அதில், சிறந்த ஆவணக் குறும்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ (The Elephant Whisperers) வென்றுள்ளது. தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ் குறும்படம், தமிழ்நாட்டின் முதுமலையில் இரு யானைக்குட்டிகளை பராமரிக்கும் முதுமலை பாகன் தம்பதி குறித்த ஆவணப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Oscar winning 'The Elephant Whispers' - Chief Minister M.K.Stal's greetings

 

இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்தியத் தயாரிப்பிற்காக முதன்முதலில் ஆஸ்கார் விருதை இரண்டு பெண்கள் கொண்டு வந்ததை விட சிறந்த செய்தி இல்லை. ‘தி எலிஃபெண்ட் விஸ்பெரர்ஸ்’ இன் பொறுமையான உருவாக்கம் மற்றும் நகரும் கதை அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானது” என்று குறிப்பிட்டுள்ளார். 

 

அதேபோல், ஆஸ்கர் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கரை வென்று முதல் இந்திய மற்றும் ஆசிய பாடல் ஆஸ்கர் வென்றது எனும் வரலாற்றை படைத்துள்ளது” என்று குறிப்பிட்டு, பாடலின் இசை அமைப்பாளர் உள்ளிட்டவர்களைக் குறிப்பிட்டுள்ளார்.