Skip to main content

'என்னைவிட அவருக்கு தான் நல்ல பாட்டு போட்டிருக்கார்' - இளையராஜாவை சீண்டிய ரஜினி !

Published on 04/02/2019 | Edited on 04/02/2019
rajini

 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்த 'இளையராஜா 75' நிகழ்ச்சி இரண்டு நாட்களாக கோலாகலமாக நடந்தது. இரண்டாம் நாளான நேற்று நிகழ்ச்சிக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம், சூர்யா, உள்ளிட்ட பலரும், இயக்குனர்கள் மணிரத்னம், ஷங்கர், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது மேடையேறிய ரஜினிகாந்த் இளையராஜாவின் இசை தனக்கு எந்த அளவுக்குப் பிடிக்குமோ அதே அளவுக்கு இளையராஜாவின் ஆன்மீகமும் தனக்குப் பிடிக்கும் என்று கூறினார். அதனால்தான் தான் இளையராஜாவை எப்பொழுதும் சாமி சாமி என்று அழைப்பதாகவும் கூறினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சுஹாசினி மேடையில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள் இருக்கிறார்கள் ஒருவர் நடிப்பில் சூப்பர் ஸ்டார் இன்னொருவர் இசையில் சூப்பர் ஸ்டார் என்று கூற அதை மறுத்த இளையராஜா மேடையில் இருக்கிறோம் என்பதற்காக இப்படி எல்லாம் பேசக்கூடாது  என்று சுஹாசினியை அன்பாக கண்டித்து தமிழ் சினிமாவில் என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான் என்று உறுதியாகக் கூற மைதானம் ரசிகர்களின் உற்சாகக் கூச்சலால் அதிர்ந்தது. 

 

 

பின்னர் சுஹாசினி இளையராஜாவின் இசையில் உங்களுக்கு பிடித்த பாடல் என்ன என்று கேட்க...அதற்கு ரஜினி... "எத்தனையோ பாடல்கள் இருக்கு. அதில் எதை சொல்வது முரட்டு காளையில் பொதுவாக என் மனசு தங்கம், ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாளும், ஊர தெரிஞ்சிகிட்டேன், காதலின் தீபம் ஒன்று என பல அருமையான பாட்டுக்கள் போட்ருக்கார். இருந்தாலும் என்னைவிட கமல்ஹாசன் படங்களுக்கு நல்ல பாட்டு போட்டிருக்கார்". அதற்கு இளையராஜா ராஜா.... "எனக்கு எல்லாரும் ஒண்ணுதான், ராமராஜன் படங்களுக்கு போடலையா, மோகனுக்கு மைக் மோக்ன்னே பேர் வெச்சாங்க" என்றார். உடனே ரஜினி...."சாமி நான் கமலுக்கும் எனக்கும் நடுல சொன்னேன்" என்றார். அதற்கு ராஜா... "இல்ல சாமி, நமக்கு பாட்டுல வித்தியாசமே பாக்கறதில்ல. என இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டது அரங்கத்தையே உற்சாகத்தில் ஆழ்த்தி கைத்தட்டல்களால் அதிரச்செய்தது.

 

 

சார்ந்த செய்திகள்