Skip to main content

"படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை, ஆனால்" -பார்த்திபன் வேண்டுகோள்

Published on 11/11/2020 | Edited on 11/11/2020
oththa serupu

 

 

இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஒவ்வொரு படத்தையும் வித்தியாசமாக தருபவர்.  ஹவுஸ் புல், ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்',  போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இவர் கடைசியாக ஒத்த செருப்பு  படத்தை எழுதி இயக்கியிருந்தார். 

 

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்திருந்த இப்படத்தை, அவரே தயாரித்திருந்தார். உலக சினிமா வரலாற்றில், இதற்கு முன்பு ஒருவர் மட்டுமே  நடித்து வெளிவந்த படங்கள் வெறும் பனிரெண்டுதான். பார்த்திபனின் இந்த முயற்சி, ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றது மட்டுமில்லாமல் பல்வேறு  விருதுகளை வென்றது.

 

கரோனாவினால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள்  நேற்று முதல் திறக்கப்படுகின்றன. ஆனால் புது படங்கள் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே வெளியாகிய படங்கள், மீண்டும் திரையிடப்படுகின்றன. அந்த வரிசையில், பார்த்திபனின் ஒத்த செருப்பு படம் மீண்டும் தீபாவளியன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது.  ஒத்த செருப்பு படம் எந்தெந்த திரையரங்குகளில் வெளியாகும் என இன்று அறிவிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ள பார்த்திபன், படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை, ரசிகர்கள் தங்கள் உடல்நலனை பாதுகாத்துக்கொள்ள வேண்டும்  என கேட்டுக்கொண்டுள்ளார்.

 

பார்த்திபன் அந்த ட்விட்டில்,
                     

                     "தீபாவளிக்கு வாழ்த்துகள்!
                      திரைக்கு ‘ஒத்த செருப்பு’
                      திரையரங்குகள் இன்று உறுதியாகும்.
                      சமூக இடைவெளியோடு முகக் கவசம் அணிந்தபடி 
                      கை சுத்த திரவமுடன் 
                      சர்வ சாக்கிரதையாகபடம் பார்க்க வரவும்.
                      படம் பார்க்க வராவிட்டாலும் பரவாயில்லை.

                      உங்கள் உடல் நலனை கவனமாகக் காக்கவும்!! என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்