Skip to main content

பீச்சில் ஜோடியாக செல்பி எடுத்த பிக்பாஸ் காதல் ஜோடி ஓவியா - ஆரவ் 

Published on 21/11/2018 | Edited on 21/11/2018
oviya arav

 

 

 

பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா - ஆரவ் காதல் விவகாரம் அவ்வப்போது தலையை எட்டிப்பார்த்தவண்ணம் உள்ளது. இருவரும் தற்போது சகஜமாக பழகிவரும் நிலையில் இவர்கள் பொது இடங்களிலும் ஒன்றாக கலந்து கொள்ளும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில்  தற்போது ஓவியாவும், ஆரவ்வும் மீண்டும் நெருக்கமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ஆரவ் பிறந்த நாள் நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக எடுத்துக்கொண்ட படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இப்போது மீண்டும் கடற்கரையில் ஜோடியாக நின்று செல்பி எடுத்து வெளியிட்டு இருக்கிறார்கள். மேலும் இருவருக்கும் மீண்டும் காதல் மலர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

"இருட்டு அறையில் முரட்டு குத்த ஓட வைக்கலன்னா 90 ml வந்துருக்குமா?'’ (வீடியோ)

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சேரனின் இயக்கத்தில் திருமணம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் மற்றும் உறவுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து , 90ml போன்ற திரைப்படங்களின் மேல் இருக்கும் கோபத்தையும் இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.