Skip to main content

'எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது' - மனம் திறந்த ஓவியா 

Published on 04/01/2019 | Edited on 04/01/2019
oviya

 

 

'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் நட்பை வளர்த்து வரும் ஆரவ் மற்றும் ஓவியா விரைவில் திருமணம் செய்யப் போவதாக சமீபத்தில் வெளியான செய்தி குறித்து ஓவியா பேசியபோது.... ''ராஜ பீமா' படத்தில் நான் ஓவியாவாக ஒரு கவுரவ வேடத்தில் நடிக்கிறேன். நானும் ஆரவ்வும் ஆடிய பாடலை, ஆரவ்தான் பாடி இருக்கிறார். என்னை புகழ்ந்து எழுதப்பட்டுள்ள பாடல் அது. ‘பிக்பாஸ்’ சமயத்துல் எனக்கும், ஆரவ்வுக்கும் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தது. இப்போது நாங்கள் சமாதானமாகி விட்டோம். எனக்கும் ஆரவ்க்கும் திருமணம் ஆகிவிட்டது, லிவிங் டு கெதர்ல வாழ்கிறோம் என பல்வேறு வதந்திகள் வருகிறது. அவை எல்லாமே பொய். ஆரவ் என் நண்பர், எனக்கு ஆதரவாக இருக்கிறார். தவிர எனக்குக் கல்யாணத்தில் நம்பிக்கை கிடையாது. ஆனால் வாழ்க்கை நம்மை எங்கே கொண்டுபோய்ச் சேர்க்கும் என்று தெரியாது. நான் சின்ன வயதில் இருந்தே சுதந்திரமாக வளர்ந்த பெண் எனபதால் கல்யாணம் எனக்கு எந்தவிதத்துல் செட் ஆகும் என்று தெரியவில்லை" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிக்பாஸ் ஆரவ்வுக்கு திருமணம்! பொண்ணு ஓவியா இல்லையாம்!!

Published on 27/08/2020 | Edited on 27/08/2020
shs

 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஆரவ், சரண் இயக்கத்தில் வெளியான 'மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். இதையடுத்து 'ராஜபீமா' படத்தில் நாயகனாக நடித்துவரும் அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகும் நடிகை ராஹியை ஆரவ் மனக்கவுள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட காலமாக காதலித்துவரும் ஆரவ் - ராஹி இருவரும் வரும் செப்டம்பர் 6-ம் தேதி சென்னையில் திருமணம் செய்யவுள்ளதாகவும், கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் தமிழ்த் திரையுலகினருக்காக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தவும் ஆரவ் - ராஹி ஜோடி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே பிக்பாஸ் மூலம் காதலர்கள் எனக் கூறப்பட்ட ஆரவ் - ஓவியா இருவரும் ஒரே வீட்டில் வசிப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.


 

Next Story

"இருட்டு அறையில் முரட்டு குத்த ஓட வைக்கலன்னா 90 ml வந்துருக்குமா?'’ (வீடியோ)

Published on 07/03/2019 | Edited on 07/03/2019

சேரனின் இயக்கத்தில் திருமணம் திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குடும்பம் மற்றும் உறவுமுறையின் முக்கியத்துவத்தைப் பற்றி இந்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார். இருட்டு அறையில் முரட்டு குத்து , 90ml போன்ற திரைப்படங்களின் மேல் இருக்கும் கோபத்தையும் இந்த நேர்காணலில் வெளிப்படுத்தியுள்ளார்.