Skip to main content

“ரகசிய மனைவியாக வா, மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன்” - பிரபல நடிகையை அழைத்த தொழிலதிபர்

Published on 14/07/2022 | Edited on 14/07/2022

 

Neetu Chandra said businessman offered her 25 lakh per month salaried wife

 

பிரபல பாலிவுட் நடிகை நீத்து சந்திரா மாதவன் நடிப்பில் வெளியான 'யாவரும் நலம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் ஆதிபகவன், சேட்டை உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி என பிற மொழி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனிடையே இரண்டு ஹாலிவுட் படத்திலும் நீத்து சந்திரா நடித்துள்ளார். 

 

இந்நிலையில் நடிகை நீத்து சந்திரா தன்னை ஒரு தொழிலதிபர் மாதம் ரூ. 25 லட்சத்திற்கு ரகசிய மனைவியாக இருக்கும் படி கேட்டுக் கொண்டதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், “ஒரு வெற்றிகரமான நடிகையின் தோல்விக் கதைதான் எனது வாழ்க்கை. என்னுடைய சினிமா வாழ்க்கையில் இதுவரை 12 தேசிய விருதுகள் பெற்ற நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். ஆனால் இப்போது வேலை இல்லாமல் தவிக்கிறேன். அதனால் ஒரு தொழில் அதிபர் என்னிடம் மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன் ரகசிய மனைவியாக இருக்க முடியுமா என்று கேட்டார். அவர் அப்படி கேட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. தற்போது பணமும், வேலையும் இல்லாததால் மிகுந்த கவலையில் இருக்கிறேன்.

 

சமீபத்தில் முன்னணி இயக்குநர் ஒருவர் படத்தின் ஆடிஷனுக்காக  அழைத்திருந்தார். ஆனால் அந்த இயக்குநர் ஆடிஷன் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள் என்னை நிராகரித்தார். என்னை திட்டமிட்டே நிராகரிப்பதாக உணர்கிறேன். இதனால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். சில முறை தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட வந்திருக்கிறது” என்றார். நீத்து சந்திராவின் இந்த பரிதாபமான நிலையை நினைத்து அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உண்மை சம்பவ கதை - பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரசன்னா 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
prasanna as Abhinandan in Ranneeti: Balakot & Beyond and make his bollywood debut

ஹீரோவாக அறிமுகமாகி வில்லனாகவும் கவனம் ஈர்த்தவர் பிரசன்னா. கடைசியாக உதயநிதி நடிப்பில் வெளியான கண்ணை நம்பாதே படத்தில் நடித்திருந்தார். தமிழைத் தாண்டி தெலுங்கிலும் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா மலையாளத்திலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த இரண்டாவது படமான கிங் ஆஃப் கொத்தா கடந்த ஆண்டு ஆகஸ்டில் வெளியானது. 

இந்த நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் கவனம் செலுத்தி வந்த பிரசன்னா தற்போது இந்தியில் நடித்துள்ளார். அங்கு சந்தோஷ் சிங் இயக்கத்தில் ஜிம்மி ஷெர்கில், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் வெப் தொடரில் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. 

இத்தொடர் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது, அதிலிருந்த போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை பாகிஸ்தான் ராணுவம் தனது காவலில் எடுத்துக்கொண்டு, பின்பு விடுவிக்கப்பட்ட சம்பவத்தை மைய்யமாக வைத்து உருவாகியுள்ளதாக தெரிகிறது. மேலும் அபிநந்தன் கதாபாத்திரத்தில் பிரசன்னா நடித்துள்ளதாக தெரிகிறது. ரனீதி: பாலகோட் அண்ட் பியோண்ட் (Ranneeti: Balakot & Beyond) இத்தொடர் ஏப்ரல் 25ஆம் தேதி தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஜியோ சினிமாஸ் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தொடரின் ட்ரைலரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரசன்னா, “நான் பதிவிட்டு கொஞ்ச நாளாகிவிட்டது. ஆனால் நீண்ட காலமாக நேசித்த ஒன்றைப் பகிர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்தியில் எனது முதல் அறிமுகம்” என குறிப்பிட்டு ரசிகர்களின் ஆதரவை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

Next Story

ஜோதிகாவின் இந்தி படத் தலைப்பு மாற்றம் 

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
jyothika bollywood movie update

ஜோதிகா தமிழில் கடைசியாக அவரது 50-வது படமான 'உடன்பிறப்பே' படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக 'காதல் - தி கோர்' படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு நவம்பரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து இந்தியில் அஜய் தேவ்கன், மாதன் நடிப்பில் கடந்த 8ஆம் தேதி வெளியான சைத்தான் படத்தில் நடித்திருந்தார். இப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. 

இதனிடையே இந்தியில் ஸ்ரீ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆந்திராவைச் சேர்ந்த பார்வையற்ற பிரபல தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகிறது. இதில் ராஜ்குமார் ராவ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க துஷார் ஹிராநந்தனி இயக்கியுள்ளார். பூஷன் குமார், கிரிஷன் குமார் மற்றும் நிதி பர்மர் ஹிராநந்தானி ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படம் மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

jyothika bollywood movie update

இந்த நிலையில் இப்படத்தின் தலைப்பு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீ எனத் தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஸ்ரீகாந்த் என மாற்றப்பட்டுள்ளது. விரைவில் டீசர், ட்ரைலர், மற்றும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.