Skip to main content

'என் இதயமே நொறுங்கிடுச்சி...!' - நடிகர் நகுல் வேதனை

Published on 12/11/2018 | Edited on 12/11/2018
nakul

 

ட்ரிப்பி டர்ட்டில் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் மன்னு தயாரித்திருக்கும் திரைப்படம் செய். இந்த படத்தில் நகுல், அன்ஷால் முன்ஜால், பிரகாஷ்ராஜ், நாசர், அஞ்சலி, ப்ளாரன் பெரைரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ராஜ்பாபு இயக்கியுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் நகுல் பேசியபோது...

 

 

 

"இந்த படத்தை நவம்பர் 16 ஆம் தேதியன்று வெளியிடலாம் என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் எங்களுக்கு அனுமதி கடிதம் கொடுத்தது. நாங்கள் இந்த படத்தை கேரளாவிலும் வெளியிடுவதால் அங்கு இதற்கான விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தோம். அதை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தோம். அப்போது, எங்களுக்கு ஒரு குறுஞ்செய்தி கிடைத்தது. அதில் ‘செய் ’திரைப்படம் திட்டமிட்டபடி நவம்பர் 16 ஆம் தேதி வெளியாகும். ஆனால் 150 ஸ்கீரின்களுக்கு பதிலாக 60 அல்லது 70 ஸ்கிரீன்களில் தான் வெளியாகும் என்றிருந்தது. இதையறிந்ததும் ஒட்டுமொத்த படக்குழுவினரும் அதிர்ச்சியடைந்தோம். என் இதயமே நொறுங்கிவிட்டது. ஏனெனில் நாங்கள் படத்தை கடந்த மார்ச் மாதத்திலேயே வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால் அப்போது திரைத்துறையில் வேலை நிறுத்தம் நடைபெற்றதால் நாங்கள் சரியான தேதிக்காக காத்திருந்தோம். அதன் பிறகு தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் ஒழுங்குமுறை குழுவின் அனுமதிக்காக காத்திருந்தோம். நாங்கள் சங்கத்தின் விதிமுறைகளை பின்பற்றுவது என்றும் தீர்மானித்தோம். அதன் பிறகு நாங்கள் தயாரிப்பாளர் சங்கத்துடன் பேசி, நவம்பர் 16 ஆம் தேதி ‘செய்’ படம் வெளியாகும் என்றும், தமிழகத்தில் 150 ஸ்கிரீனில் வெளியாகும் என்றும் உறுதியளித்தார்கள். நாங்கள் அதனை ஏற்றுக்கொண்டு விளம்பரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வந்தோம். ஏனெனில் படத்தின் தயாரிப்பாளர் புதிது. இயக்குநரும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். அதற்காக யாருடைய மனதும் புண்படுத்தவேண்டாம் என்று காத்திருந்து, நவம்பர் 16 ஆம் தேதியை ஒப்புக்கொண்டோம். 

 

ஆனால் இன்று எதிர்பாராத வகையில் நவம்பர் 16 ஆம் தேதியன்று விஜய் அண்டனி நடித்த ‘திமிரு புடிச்சவன் ‘என்ற படமும் வெளியாகும் என்றும் சொன்னார்கள். இதனால் நாங்கள் அதிர்ச்சியடைந்திருக்கிறோம். திட்டமிட்டப்படி, செய் 150 ஸ்கிரீனில் வெளியாகுமா? ஆகாதா? என்ற மன உளைச்சலுக்கும் ஆளாகியிருக்கிறோம். எங்களுடைய படத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து வெளியீட்டிற்கான அனுமதி கடிதம் அளித்திருக்கிறார்கள். ஆனால் அந்த படத்திற்கு இதுவரை வழங்கவில்லை என்று கேள்விப்படுகிறோம். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவர்கள் எங்களுடைய படத்திற்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறார். எங்களுடைய படமான ‘செய் ’படத்தை திட்டமிட்டபடி வெளியிட உதவுங்கள் என்று திரையுலகில் உள்ள அனைவரிடம் அன்பான வேண்டுகோளை முன்வைக்கிறோம்.’ என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘சிம்பு ஜெயிக்கனும்ன்ற வெறியோடதான் வருவாரு’ (வீடியோ)

Published on 30/11/2018 | Edited on 30/11/2018

’செய்’ ரிலீஸ், டிவி சேனலில் ஒரு டான்ஸ் ஷோ... என எப்போதும் போல, சுறு சுறுப்பாக, துறு துறுப்பாக இருக்கிறார் நகுல். பேலியோ டயட் எல்லாம் வருவதற்கு முன்பே, 120 கிலோ எடையை குறைத்து ஸ்லிம் ஆகி, எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்தவர். ’செய்’ பட ரிலீசில் நடந்த பிரச்சனைகள், தயாரிப்பாளர் சங்கம் மீதான ஆதங்கம், தன் சினிமா வாழ்வின் மறக்க முடியாத விசயங்கள் என அனைத்தையும் பகிர்ந்துகொண்டார். தன் க்ளாஸ் மேட் சிம்புவுடனான சுவாரசிய தருணங்களையும் சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார்...

Next Story

ஏர்வாடி தீ விபத்தை வைத்து என்ன செய்திருக்கிறார்கள்? செய் விமர்சனம்

Published on 23/11/2018 | Edited on 23/11/2018
sei

 

ஒரு மனநல காப்பகம் தீப்பற்றி எரிந்து அதில் இருந்த மன நோயாளிகள் அனைவரும் இறப்பது போல் படம் ஆரம்பிக்கின்றது. இந்த தீ விபத்துக்கு அமைச்சர் தலைவாசல் விஜய் தான் காரணம் என அனைவரும் குற்றம் சாட்ட அவர் பதவியை ராஜினாமா செய்து விடுகிறார். அவருடைய உதவியாளரும் பத்திரிகையாளருமான அஸ்கர் அலியிடம் இது தொடர்பாக இருக்கும் வீடியோ ஆதாரத்தை கைப்பற்ற முயற்சி செய்து வில்லன் கும்பல் தலைவாசல் விஜயையும் பத்திரிகையாளர் அஸ்கர் அலியையும் கொன்று விடுகின்றனர். இன்னொரு பக்கம் சினிமாவில் பெரிய நடிகராக ஆசைப்படும் நகுல் ஊரை ஏமாற்றி பணம் சம்பாதித்துக்கொண்டு வெட்டித்தனமாக ஊரை சுற்றி வருகிறார். இவரை சினிமாவில் இயக்குனராக ஆசைப்படும் நாயகி ஆஞ்சல் முஞ்சால் பின்தொடர்ந்து நகுலின் கதையை படமாக எடுக்க ஆசைப்படுகிறார். இதனை அறிந்த நகுல் நாயகியை காதலிக்கிறார். நாயகி ஒரு கண்டிஷன் போட, நகுல் என்ன செய்தார்... மனநல காப்பக தீ விபத்திற்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதே 'செய்' படத்தின் கதை.

 

sei

 

நாயகன் நகுல் மிகவும் துருதுருவென்று நடித்துள்ளார். ஆரம்பத்தில் அது ரசிக்கும்படி இருந்தாலும் பிற்பகுதியில் சற்று எரிச்சலூட்டும்படியாக உள்ளது. இருந்தும் பல காட்சிகளில் அவருடைய டைமிங் சென்ஸ் மிகவும் அருமையாக உள்ளது. நகைச்சுவை காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார். நகுல் கதைத் தேர்வில் கொஞ்சம் கவனமாக இருந்தால் வெற்றி வாய்ப்புகள் எளிதாகும். நாயகி ஆஞ்சல் முஞ்சால் நாயகன் நகுலை தூரத்திலிருந்தே காதலிக்கிறார், டூயட் பாடுகிறார். மற்றபடி அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி பெரிய வேலை இல்லை. முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நாசர், தலைவாசல் விஜய், பிரகாஷ்ராஜ், அஸ்கர் அலி போன்றவர்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.

 

sei

 

ஏர்வாடி தீ விபத்தை ஞாபகப்படுத்தும்படியாக ஒரு மனநல காப்பக தீ விபத்தில் படத்தை ஆரம்பித்து பின் சினிமா, காதல், டூயட் என கமர்ஷியல் பார்முலாவில் கதையை நகர்த்தி பின் திரில்லர் வகை ஜானரில் படத்தை முடித்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் ராஜ் பாபு. ஆரம்பத்தில் தொய்வில்லாமல் ஆரம்பிக்கும் கதையோட்டத்தைக் கொடுத்து எதிர்பார்ப்பை எகிறச் செய்த இயக்குனர் பிற்பகுதியில் படத்தை வெவ்வேறு திசையை நோக்கி பயணிக்கச் செய்து அயர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். என்னதான் கதையோட்டம் அவ்வப்போது சுவாரசியமாக இருப்பது போல் தோன்றினாலும் காட்சிகளில் அழுத்தம் குறைவாக இருப்பது ஏமாற்றத்தை தந்துள்ளது. மேலும் நாசர், பிரகாஷ்ராஜ், போன்ற ஜாம்பவான்களை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு காட்சிகளை வேகமாகக் காட்ட உதவியுள்ளது. நிக்ஸ் லோபஸின் பின்னணி இசை நன்று.

 

 

செய்... நல்ல மேசேஜ் இருக்கிறது, ஆனால் அது போதுமா? என்றாலும் பார்த்ததற்காக வருத்தப்பட வைக்காத படம்தான்.