Skip to main content

பாகுபலி 2 வசூலை முறியடிக்க காத்திருக்கும் கே.ஜி.எஃப்!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

 

கடந்த டிசம்பர் மாதம் ஐந்து மொழிகளில் வெளியான கன்னட படம் கே.ஜி.எஃப். கோலார் தங்க வயலை வைத்து புனைவாய் எடுக்கப்பட்ட இந்த படத்தில் கன்னட ஸ்டார் யஷ் நடித்தார். படம் வெளியான அனைத்து மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்றது. கன்னட சினிமாவில் பெரும் செலவில் எடுக்கப்பட்டு, பல திரைகளில் வெளியான படம் இதுதான். படம் வெளியான முதலிலிருந்து, இது பாகுபலியை விட வேர லெவலில் இருக்கிறது என்று சொல்லப்பட்டது. பாலிவுட்டில் ஷாரூக் கான் நடிப்பில் வெளியான ஜீரோ படத்துடன் போட்டிப்போட்டு, ஹிந்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் கன்னட பாக்ஸ் ஆபிஸில் 129 கோடி வசூல் வேட்டை செய்துள்ள படம் என்று பார்த்தால் பாகுபலி 2ஆக இருக்கிறது.  தற்போதைய நிலவரப்படி கேஜிஎஃப் வெளியாகி 28 நாட்களாகியும் படம் வெற்றிகரமாக கர்நாடகாவில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை 125 கோடி கர்நாடகாவில் மட்டும் வசூல் செய்துள்ளது. இந்த வார இறுதியிலேயே பாகுபலி 2 சாதனையை முறியடித்துவிடுமாம்.

சார்ந்த செய்திகள்

Next Story

அரிசிக்கொம்பனை தொடர்ந்து களமிறங்கிய  ‘பாகுபலி’; மக்கள் கவலை

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

'Baahubali' followed by Arisikkomban; People worry

 

கடந்த 7 நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானையான அரிசிக்கொம்பன் சில நாட்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்த நிலையில் யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்தது. தொடர் முயற்சியின் பலனாக ஒரு வழியாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு யானை பிடிக்கப்பட்டது. அரிசிக்கொம்பன் யானை ஒரு வழியாகப் பிடிபட்டு களக்காடு வனப்பகுதியில் விடப்பட்டது மக்களை நிம்மதி பெருமூச்சு விட வைத்துள்ளது.

 

இந்நிலையில் தமிழ்நாட்டின் கவனத்தை தேனி மீது குவிக்க வைத்த அரிசிக்கொம்பன் யானை பிடிக்கப்பட்ட உடன் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை, விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாழ்படுத்தி வருவதால் அதை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கோடை வெப்பம் அதிகரித்துள்ள காரணத்தால் வனப் பகுதியில் உள்ள விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும் உணவுகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் பாகுபலி என்ற யானை ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளில் பாகுபலி யானை பலமுறை ஊருக்குள் புகுந்துள்ளது. நெல்லிமலை மற்றும் கள்ளார் வனப்பகுதிகளில் பாகுபலி யானையின் நடமாட்டம் காணப்படும்.

 

இரு காடுகளுக்கும் இடையே யானை குடிபெயரும் போது ஊருக்குள் செல்வது வழக்கம். ஆனால் தற்போது வறட்சி காணப்படுவதால் உணவு தேடி விவசாய நிலத்திற்குள் யானை புகுந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில தினங்களாகவே பாகுபலி யானை அதிக அளவு விவசாய நிலங்களுக்குள் சுற்றி வருகிறது. தகவல் அறிந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விட முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொடர் முயற்சியின் காரணமாக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இன்று அதிகாலை யானையானது குடியிருப்புகள் வழியாக கள்ளார் வனப்பகுதிக்குச் சென்றுள்ளது. இதையும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். 

 


 

Next Story

பாகுபலி குறித்து பொன்னியின் செல்வன் மேடையில் பேசிய மணிரத்னம்

Published on 24/04/2023 | Edited on 24/04/2023

 

maniratnam about bahubali

 

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியான பொன்னியின் செல்வன் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூலிலும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகம் போலவே தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

 

அண்மையில் கமல் குரலில் ஒரு முன்னோட்ட வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தியா முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள் படக்குழுவினர். அந்த வகையில் ஹைதராபாத்தில் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மணிரத்னம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது இயக்குநர் மணிரத்னம் பேசுகையில், "முதலில் தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கு நன்றி. அவர் இல்லையென்றால் பொன்னியின் செல்வன் உருவாகியிருக்காது. தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கும் நன்றி. நான் ஏற்கெனவே சொல்லி இருக்கேன். இருப்பினும் சொல்கிறேன் ராஜமெளலிக்கு நன்றி. பாகுபலி படம் இரண்டு பாகங்களாக உருவாக்காவிட்டால் பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்காது. பாகுபலி படம் நிறைய வரலாற்று கதைகளை எடுக்க முடியும் என்ற நம்பிக்கையை சினிமாத்துறையில் பலருக்கும் கொடுத்தது" என்றார்.