Skip to main content

மலை பாம்புடன் படமெடுத்த காஜல் அகர்வால் !

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
kajal

 

 

 

ஹிந்தியில் வெற்றிபெற்ற 'குயின்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரிஸ் பாரிஸ்' படத்தில் தன் போர்ஷனை சமீபத்தில் முடித்த காஜல் அகர்வால் அடுத்ததாக ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து சென்றுள்ள காஜல் அங்குள்ள வனஉயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளுடன் விளையாடினார். அப்போது மலைபாம்பு ஒன்றை தனது தோளில் தூக்கி வைத்துக் கொண்ட காஜல், அந்த அனுபவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்...."இந்த உணர்வு அற்புதமாக இருக்கிறது. பாம்பின் தசைகள் அசைவதை என்னால் தெளிவாக உணர முடிகிறது. பாம்பின் மெல்லிய சத்தமும் எனக்கு கேட்கிறது. இது ஒரு ஸ்வாரஸ்ய அனுபவம்" என்று மெய்சிலிர்த்து கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நரேந்திர மோடியால் காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை படமான 'பி.எம்.நரேந்திரமோடி' படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாதென தேர்தல் கமிஷனை வற்புறுத்தின.

 

kajal

 

ஆனால் இந்த படத்திற்கு இதுவரை எந்த தடையும் விதிக்காததால் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த நடிகை காஜல் அகர்வால் ..."விவேக் ஓபராயின் தோற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நரேந்திர மோடி படம் கண்டிப்பாக நன்றாக ஓடும்" என்று நரேந்திர மோடி படத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை பலர் கண்டித்து வருகின்றனர். ஆனால் விவேக் ஓபராய் மற்றும் பா.ஜனதா கட்சியினர் காஜல் அகர்வாலை பாராட்டி வருகின்றனர்.

 

Next Story

மாரத்தான் போட்டிக்கு அழைக்கும் காஜல் அகர்வால்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
kajal agarwal

 

 

'குயீன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தை அடுத்து தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போட்டிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 16வது முறையாக வரும் ஜனவரி 20ஆம் தேதி மும்பையில் நடத்தும் மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு ட்விட்டரில் விடுத்துள்ளார். அதில்.... "இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.