Skip to main content

காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்திருக்க முடியும் - காஜல் நம்பிக்கை 

Published on 18/05/2018 | Edited on 19/05/2018
irumbu thirai.jpeg

 

 

kajal agarwal


கடந்த ஆண்டு காஜல் அகர்வால் நடிப்பில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 'கைதி என் 150' படமும், விஜய்யின் 'மெர்சல்' படமும் பெரிய வெற்றி பெற்றதனால் தன் மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொண்டார் காஜல். இப்படி பெரிய நடிகர்களுடன் நடித்த வெற்றி பெற்றாலும் தொடர்ந்து இளம் கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது 'குயீன்' தமிழ் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கும் காஜல் தன் எதிர்கால படங்களை பற்றி பேசும்போது...."நான் அழகாக இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்கள். அதற்கு ஏற்றமாதிரி இருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறேன். பல வருடங்களாக சினிமாவில் நடிக்கிறேன். நல்ல கதைகள், கதாபாத்திரங்கள் அமைகின்றன. அதிர்ஷ்டம் இல்லாமல் இதெல்லாம் நடக்காது. என் திறமையை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்துகிறேன்.தமிழ், தெலுங்கு மொழிகளில்தான் அதிக படங்கள் வருகின்றன. இந்த இரு மொழி ரசிகர்களுமே என்னை வட இந்திய நடிகையாக பார்க்காமல் தங்கள் சொந்த மாநிலத்து பெண் போல நேசிக்கின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது 'பாரிஸ் பாரிஸ்' என்ற தமிழ் படத்தில் நடிக்கிறேன். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற 'குயின்' படத்தின் தமிழ் பதிப்பாக இது தயாராகிறது. மேலும் சர்வானந்த் ஜோடியாக தெலுங்கு படமொன்றில் நடிக்கிறேன். இளம் கதாநாயகன் சர்வானந்த். இப்போதுதான் வளர்ந்து வருகிறார். அவரோடு ஜோடி சேர்வது உங்கள் தகுதிக்கு சரியானதா... என்று பலரும் கேட்கின்றனர். காலத்துக்கு ஏற்ப மாறினால்தான் நிலைத்து இருக்க முடியும். இப்போதைய கதாநாயகிகள் திறமையை காட்ட புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். நானும் அப்படித்தான். கதை பிடித்து இருந்தால் இளம் நடிகர்களுடன் ஜோடி சேர தயாராக இருக்கிறேன்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

நரேந்திர மோடியால் காஜல் அகர்வாலுக்கு வந்த சோதனை 

Published on 09/04/2019 | Edited on 09/04/2019

பிரதமர் நரேந்திர மோடி வாழ்க்கை படமான 'பி.எம்.நரேந்திரமோடி' படத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாதென தேர்தல் கமிஷனை வற்புறுத்தின.

 

kajal

 

ஆனால் இந்த படத்திற்கு இதுவரை எந்த தடையும் விதிக்காததால் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதற்கிடையே இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. இதை பார்த்த நடிகை காஜல் அகர்வால் ..."விவேக் ஓபராயின் தோற்றத்தை என்னால் நம்ப முடியவில்லை. படத்தை பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். நரேந்திர மோடி படம் கண்டிப்பாக நன்றாக ஓடும்" என்று நரேந்திர மோடி படத்தை வரவேற்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதற்கு சமூக வலைத்தளத்தில் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. அவரை பலர் கண்டித்து வருகின்றனர். ஆனால் விவேக் ஓபராய் மற்றும் பா.ஜனதா கட்சியினர் காஜல் அகர்வாலை பாராட்டி வருகின்றனர்.

 

Next Story

மாரத்தான் போட்டிக்கு அழைக்கும் காஜல் அகர்வால்

Published on 31/12/2018 | Edited on 31/12/2018
kajal agarwal

 

 

'குயீன்' படத்தின் தமிழ் ரீமேக்கான 'பாரீஸ் பாரீஸ்' படத்தை அடுத்து தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடிப்பதற்காக தயாராகி வரும் நடிகை காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போட்டிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்ட அவர் டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் 16வது முறையாக வரும் ஜனவரி 20ஆம் தேதி மும்பையில் நடத்தும் மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு ட்விட்டரில் விடுத்துள்ளார். அதில்.... "இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.