Skip to main content

மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருகிறார்கள் - விநியோகஸ்தர் கே. ராஜன் மகிழ்ச்சி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

K Rajan Latest Speech

 

காசிமேடு கேட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவோடு நடிகர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர் கே. ராஜன் கலந்து கொண்டார்.

 

நிகழ்வில் கே. ராஜன் பேசியதாவது, “நான் பிறந்து வளர்ந்த இடம் காசிமேடு. காசிமேடு மக்கள் மிக அருமையான மக்கள். யாருக்கும் கெடுதல் செய்யமாட்டார்கள். வாத்தியாராக வேலை செய்து வந்த நான், எம்.எல்.ஏ தேர்தலில் போட்டியிட்டு 700 வாக்குகளில் தோல்வியடைந்தேன். என்னை மட்டுமல்லாமல், பல லட்சம் குழந்தைகளை காமராஜர் படிக்க வைத்ததால் அவருடைய பெயரில் கல்வி நிறுவனம் தொடங்கினேன். அவரால் பல பிற்படுத்தப்பட்ட மக்கள் டாக்டர், ஐஏஎஸ் என்று பல பதவிகளுக்கு வந்தார்கள். நான் தொடங்கிய பள்ளி இன்றும் நடைபெற்று வருகிறது. 

 

காசிமேடு பகுதி மீனவர்களுக்கு எந்த கள்ளங் கபடமும் தெரியாது. கோபம் இருந்தால் கூட யாரையும் பழிவாங்க மாட்டார்கள். காசிமேடு கேட் படத்தில் நிறைய மசாலா இருக்கிறது. அதற்கென்று தனி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்குமார், ராம் கோபால் வர்மாவிடம் அசிஸ்டெண்டாக பணியாற்றியவர். இப்போது மற்ற மொழி தயாரிப்பாளர்கள் தமிழுக்கு வருகிறார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு சென்று தமிழ்நாட்டுக்கு தொழில்களை ஈர்த்து வருகிறார். அந்த நேரத்தில் இங்கு வேலை இல்லாத ஒருவர் அதை விமர்சிக்கிறார்.

 

தமிழ்நாட்டின் தொழில் வளம் பெருக வேண்டும். அனைவரும் நம்பிக்கையோடு தமிழ்நாட்டுக்கு வரலாம். அனைத்து மாநிலத்தவரும் நம் சகோதரர்கள் தான். இன்னும் நிறைய படம் எடுங்கள். தமிழ் மக்கள் நிச்சயம் உங்களை வரவேற்பார்கள். கேஜிஎஃப் படம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கதை வளம் கொண்ட படங்களைத் திட்டமிட்டு சரியான முறையில் எடுத்தால் அனைத்து மாநிலங்களிலும் வெற்றி பெறும். தமிழர்கள் எப்போதும் நல்லவற்றைப் பாராட்டுவார்கள். 

 

சிவாஜி கணேசனுடன் ஒரு படத்தில் நான் வக்கீலாக நடித்தபோது என்னுடைய முடியை சரிசெய்து கொள்ளச் சொன்னார். இப்போது நிறைய தாடி வைத்துக்கொண்டு நடிக்கின்றனர். மக்கள் ஏற்றுக்கொள்வதற்காக அனைத்து தவறுகளையும் நாம் செய்யக்கூடாது. டக்கர் என்கிற படத்தில் ஹீரோயின் சிகரெட் குடிப்பது போலவும் மது குடிப்பது போலவும் காட்சிகள் உள்ளன. ஆண்கள் கெட்டுப் போய்விட்டார்கள். இயக்குநர்கள் தாய்மார்களையும் இந்த தீய பழக்கங்களுக்கு ஆளாக்காதீர்கள். காசிமேடு கேட் படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிபெறும்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் நடிகர்கள் இறக்கிறார்கள்” - ‘உழைப்பாளர் தினம்’ பட இயக்குநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
uzaippaalar dhinam movie director speech in his movie audio launch

சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘உழைப்பாளர்கள் தினம்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். சந்தோஷ் நம்பிராஜன் பேசுகையில், “இந்த படத்தின் கதையை நான் பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால், வெளிநாட்டு உழைப்பாளர்களைப் பற்றிய படம் இங்கு எப்படி ஓடும், வெளிநாடுகளில் ஓடிடி வந்துவிட்டதே, அவர்கள் இதை எப்படி பார்ப்பார்கள் என்று சொன்னார்கள். ஆனால், உழைப்பாளர் தினம் என்ற தலைப்பை சொன்ன உடன் சிங்கப்பூர் துரைராஜ், ராஜேந்திரன், எங்க அண்ணன் நம்பிராஜன், கடலூர் ஜான், பொண்ணுசாமி புருஷோத்தமன், பாண்டுதுரை, சரஸ் என அனைவரும் குழுவாக சேர்ந்து இந்த படத்தை தயாரித்திருக்கிறோம்.

தற்போதைய தமிழ் சினிமா எப்படி இருக்குனா, ஒரு நகைச்சுவை நடிகரோட ஒரு நாள் சம்பளம் 10 லட்சம், அவரோட உதவியாளருக்கு 30 ஆயிரம் ரூபாய், அதில் 2 ஆயிரத்தை மட்டுமே அவருக்கு கொடுத்துவிட்டு, மீதியை அந்த நடிகரே எடுத்துக்கொள்வதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம், 10 ஆயிரம் ரூபாய் இல்லாமல் சேசு என்ற நகைச்சுவை நடிகர் இறந்து போகிறார். கடந்த ஆண்டு போண்டா மணி என்ற ஒரு நடிகர் இறந்து போகிறார். ‘அங்காடித் தெரு’ பட நடிகைக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது. இது மிகவும் வருத்தமளிக்கிறது. நடிகர் சங்கம் இருக்கிறது, இன்று சங்கத்திற்கான கட்டிடம் கட்டும் பணியில் ஈடுபடுகிறார்கள். செங்கலையும், சிமெண்டையும் கொண்டு எழுப்பும் கட்டிடத்தை விட மனித உயிர் தான் முக்கியம், ஒரு நடிகரின் வாழ்க்கையை காப்பாற்றாத சங்கம் எதற்கு. இது மிகவும் வருத்தப்படக்கூடிய விசயம். 

லோகேஷ் கனகராஜ், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், மாரி செல்வராஜ், பா.இரஞ்சித், வெற்றிமாறன் போன்ற திறமையான இயக்குநர்கள் அனைவரும் சிறிய படங்கள் மூலம் தான் தங்களை நிரூபித்துக்காட்டினார்கள். ஆனால், அவர்களுடைய அடுத்தடுத்த படங்களில் சிறிய நடிகர்களுடன் பணியாற்றாமல் பெரிய பெரிய நட்சத்திர ஹீரோக்களுடன் பயணிக்கிறார்கள். இது சொம்பு தூக்குற மாதிரி, பல்லக்கு தூக்குற மாதிரி இருக்கிறது. வசூல் பின்னால் போனால் அவர்களுடைய வாழ்க்கை நிலையாக இருக்க முடியாது. இதே பாரதிராஜா சாதாரண ஒரு வளையல் கடையில் இருந்தவரை ஹீரோவாக்கினார். தமிழ் தெரியாமல் கர்நாடகாவில் இருந்து வந்தவரை பாலச்சந்தர் நடிக்க வைத்து சூப்பர் ஸ்டாராக்கினார். அதனால் தான் இவர்கள் பற்றி இன்னமும் பேசப்படுகிறது. இந்த விசயத்தை நான் இங்கு பேசுவதற்கு காரணம் என்னுடைய இயக்குநர் தான். அவர் எந்தவித பொருளாதார நிலையையும் எதிர்பார்க்காமல் என்னை ஹீரோவாக்கினார்.  இங்கு ஹீரோவுக்கு தான் அதிகம் செலவு செய்கிறார்கள். இதே நிலை நீடித்தால் தமிழ் சினிமா இதைவிட மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும். 

இங்கு யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் அது தவறில்லை. ஆனால், சினிமாவில் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிட்டு, சக நடிகர்களுக்காகவோ, கலைஞர்களுக்காகவோ எந்தவித சமூக சீர்திருத்தங்களையும் செய்யாமல், அரசியலுக்குள் நுழைகிறார்கள் என்றால், 1000 கோடி ரூபாய் நோக்கி அவர்கள் நகர்கிறார்கள் என்று தான் அர்த்தம். 500 கோடி ரூபாயில் திரையரங்க நகரம் தேவையில்லை, அதற்கு பதில் 50 நகரங்களை தேர்ந்தெடுத்து 50 திரையரங்கங்களை உருவாக்க வேண்டும். சிறிய அளவிலான திரையரங்கங்களை திறக்க வேண்டும். திரையரங்கு மூலமாக அரசுக்கு ரூ.10 முதல் ரூ.12 கோடி வரை வருவாய் கிடைக்கும். பேருந்து நிலையங்களில் வைக்கலாம், பேருந்துக்காக காத்திருப்பவர்கள் படம் பார்ப்பார்கள். பார்க்கிங், கேண்டீன் என மிகப்பெரிய வியாபாரம் இருக்கிறது. இப்படி அரசு திரையரங்கம் திறக்க வேண்டும் என்று சொன்னதும், திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் பயப்பட வேண்டாம். பிறகு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணம் கொடுத்து இதுபோன்ற திட்டங்களை கிடப்பில் போட்டுவிடுவார்கள். அரசுப் பள்ளியால் தனியார் பள்ளிக்கு பாதிப்பில்லை, சமூக நலக்கூடங்களால் திருமண மண்டபங்களுக்கு பாதிப்பில்லை, ரேஷன் கடைகளினால் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பாதிப்பில்லை, அப்படி தான் அரசு திரையரங்கத்தால் மற்ற திரையரங்கிற்கு எந்த பாதிப்பும் வராது” என்றார். 

Next Story

குழந்தைகளைக் கவர்ந்த டபுள் டக்கர்

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
double takkar response update

நடிகர் தீரஜ் ஹீரோவாகவும் ஸ்ம்ருதி வெங்கட் கதாநாயகியாகவும் நடித்துள்ள படம் டபுள் டக்கர்.  இப்படத்தில், கோவை சரளா, எம்.எஸ்.பாஸ்கர், யாஷிகா ஆனந்த், காளி வெங்கட், கருணாகரன்,முனிஷ்காந்த், சுனில் ரெட்டி, ஷாரா ஆகியோருடன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இரண்டு அனிமேஷன் கதாபாத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சேது ராமலிங்கம் நிர்வாக தயாரிப்பாளராக தயாரிக்கும் இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா வெளியிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்படம் கடந்த 5 ஆம் தேதி வெளியானது. ஃபேன்டசி ஆக்ஷன் திரைப்படமாக வெளியான இப்படம் ரசிகர்களைக் கவர்ந்தது. குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் ஒரு கோடி ரூபாய் வசூல் செய்து தற்போது வெற்றிகரமாக 2வது வாரத்தில் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.