Skip to main content

இரு வேடங்களில் நடிக்கும் ஜெயம் ரவி... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் 'ஜே.ஆர் 28'

Published on 07/01/2022 | Edited on 07/01/2022

 

tanya ravichandran joining jr28 film

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி அடுத்தாக இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'பூலோகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைத்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நிமிர்ந்து நில், ஆதி பகவான் ஆகிய படங்களில் நடிகர் ஜெயம் ரவி இரு வேடங்களில் நடித்திருந்த குறிப்பிடத்தக்கது.

 

ஆக்ஷன் த்ரில்லர் காட்சிகளில் உருவாகும்  இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஏற்கனவே பிரியா பவானி சங்கர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமான நிலையில் தற்போது மற்றோரு கதாநாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கதைய சினிமா மாதிரி காட்டியுள்ளனர்” - முதல்வர் புகைப்படக் கண்காட்சி கண்ட பின் ஜெயம் ரவி

Published on 11/05/2023 | Edited on 11/05/2023

 

"They have shown a narrative cinema model" said Jayamravi after seeing the Chief Minister's photo exhibition

 

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் வாழ்க்கையை எடுத்துக்கூறும் விதமாக சென்னையில் அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வடசென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் 'எங்கள் முதல்வர்; எங்கள் பெருமை' என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்த புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவண்ணாமலையில் இந்த புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி கலந்து கொண்டார்.

 

புகைப்படக் கண்காட்சிக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அமைச்சர் வேலு அழைப்பில் தான் இங்கு வந்துள்ளேன். திருவண்ணாமலைக்கு வருவது இது முதல் தடவை இல்லை. கோவிலுக்கும் படப்பிடிப்பிற்கும் அதிக முறை வந்துள்ளேன். அப்பாவின் நண்பர் இவர். அந்த அன்புக்காக வந்துள்ளேன். இம்மாதிரியான ஒரு புகைப்படக் கண்காட்சியை வேறு எங்கு பார்க்க முடியும். மிக அழகாக வடிவமைத்துள்ளார்கள். இந்த புகைப்படக் காட்சியை மிக சிறப்பாக கொண்டு வந்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இதுபோல் வேறு எங்கும் பார்த்ததில்லை. ஒரு கதையை சினிமா போல் கண் முன் காட்டியுள்ளார்கள். ஒரு சகாப்தத்தை கண் முன் காட்டியுள்ளார்கள்.

 

முதலமைச்சர் மேயராக இருந்தபோதே அவரை நமக்கு தெரியும். அவர் என்ன சாதனைகளை செய்துள்ளார் என்றும் தெரியும். அதை எடுத்து சொல்வது போலவும் அவரது குண நலன்களையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள்.  நம்ம என்ன கலர் சட்ட போட்டாலும் மனம் வெள்ளை தான். அது தான் முக்கியம். இந்த தூய்மையான மண்ணிற்கு வந்தது மிகுந்த சந்தோஷம். முதல் தடவை என் மனைவியும் திருவண்ணாமலை வந்துள்ளார். அவர் இதுவரை வந்ததில்லை. தற்போதைய ஆட்சியின் சிறப்புகள் நான் சொல்ல வேண்டியதில்லை. நல்ல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்னும் அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும் என்பதே ஆசை” எனக் கூறினார்.

 

 

Next Story

இந்தியப் பெருங்கடலின் அரசன்... கவனம் ஈர்க்கும் ஜெயம் ரவி பட ஃபர்ஸ்ட் லுக்

Published on 12/02/2022 | Edited on 12/02/2022

 

jayam ravi starring agilan movie first look poster released

 

இயக்குநர் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து முடித்துள்ள ஜெயம் ரவி, அடுத்து இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான 'பூலோகம்' திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தற்காலிகமாக 'ஜே.ஆர் 28' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்து வருகிறார். சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இந்நிலையில் படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் இப்படத்திற்கு அகிலன் என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் தலைப்பின் கீழ் இந்தியப் பெருங்கடலின் அரசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜெயம் ரவி கப்பலில் பணியாற்றும் உடையில் தோன்றியுள்ள இந்த போஸ்டர் பலரின் கவனத்தை பெற்று வருகிறது.