Skip to main content

"வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற யோசனையை முதன்முறை அறிமுகப்படுத்தியவர் இவரே" - நடிகர் ஜி.எம் குமார் அறிவுரை!

Published on 17/05/2021 | Edited on 17/05/2021

 

sfsgdgdg

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன.

 

இந்த நிலையில், கரோனா சமயத்தில் மக்கள் வீட்டிலேயே இருப்பது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் ஜி.எம். குமார். அதில்... "ஆமை தன் வீட்டை முதுகிலேயே எங்கு சென்றாலும் சுமந்து செல்கிறது. மிக அவசியமான காரியங்களுக்கு மட்டும் தன் தலையை வெளியே தள்ளி, வேலையை முடித்துவிட்டு மீண்டும் தலையை தன் வீட்டிற்குள் இழுத்து கொள்கிறது. (Work from home) வொர்க் ஃப்ரம் ஹோம் என்ற யோசனையை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தியவர் Mr. ஆமையார்" என பதிவிட்டு கரோனா ஊரடங்கு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இயக்குநரும், நடிகருமான ஜி.எம் குமார் மருத்துவமனையில் திடீர் அனுமதி

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

GM Kumar suddenly admitted to hospital

 

1986 ஆம் ஆண்டு அறுவடை நாள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஜி.எம் குமார், அடுத்தாக பிக்பாகெட், உருவம், இரும்பு பூக்கள் என்று அடுத்தடுத்த  படங்களை இயக்கியுள்ளார். இதனிடையே சில படங்களுக்கு கதை ஆசிரியராக இருந்த ஜி. எம் குமார்  பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கேப்டன் மகள் படத்தின் மூலம் திரையுலகில் நடிகராகவும் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து  அவன் இவன், குருவி, வேலையில்லா பட்டதாரி, கர்ணன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

 

ad

 

இந்நிலையில் நடிகர் ஜி.எம் குமார் உடல்நலக்குறைவு காரணமாக  சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.