Skip to main content

சூர்யாவுக்கு ஓப்பனிங் கொடுத்த ஜி.வி, அனிருத்... இணையத்தில் ட்ரெண்டாகும் 'வாடா தம்பி' பாடல் !

Published on 15/12/2021 | Edited on 15/12/2021

 

Etharkkum Thunindhavan movie first song released

 

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ், தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'வாடா தம்பி' என தொடங்கும் இப்பாடலை விக்னேஷ் சிவன் வரிகளில் ஜி.வி பிரகாஷ் மற்றும் அனிருத் இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.  நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் சூர்யா கிராமத்து கதையில் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல் தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்