Skip to main content

சசிகலா தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி வைத்த பாக்யராஜ்!

Published on 16/02/2021 | Edited on 16/02/2021

 

vsdvdv

 

திரைத்துறை தன் இயல்பு நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில், அதற்கு வலுசேர்க்கும் வகையில் சாதிக்கத் துடிக்கும் அனைவருக்கும் ஒரு வாய்ப்பைத் தரும் தளமாக உருவாகியுள்ளது சசிகலா தயாரிப்பு நிறுவனம். இந்த நிறுவனம் இளம் இயக்குனர்கள், புதிய தயாரிப்பாளர்கள், வெப் சீரிஸ், குறும்பட இயக்குனர்கள் ஆகியோருக்கு உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் படத் தயாரிப்பு சார்ந்த அனைத்து வகையான வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும் இது இளம் மாணவ இயக்குனர்கள் மற்றும் அறிமுக இயக்குனர்களுக்குப் புரொடக்சன் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகளுக்குத் தேவையான உதவிகளையும், அதோடு மேலும் சில சிறப்பு சலுகைகளையும் செய்யத் தயாராக உள்ளது என்பதை இதன் நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார். 

 

சினிமா துறை சார்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் ‘Freedom of Film making’ எனும் தாரக மந்திரத்துடன் விரைவில் இதன் பணிகள் துவங்கவுள்ளன. இதனைப் பிரபல இயக்குனர் கே.பாக்யராஜ் அவர்கள், நடிகை சாய் தன்ஷிகா, நடிகர் இசையமைப்பாளர் அம்ரிஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.  இதில் இயக்குனர் பாக்யராஜ் பேசும்போது... "இது வாய்ப்புக்காகக் காத்திருக்கும் கலைஞர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். இந்தத் தயாரிப்பு நிறுவனம் தரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது என்பது அதன் கட்டமைப்பிலேயே புரிகிறது. மேலும் இந்நிறுவனத்திலிருந்து பல தரமான கலைஞர்கள் வெளி வருவார்கள்" எனக் கூறியிருந்தார். 

 

நடிகை தன்ஷிகா பேசுகையில்... "நாம் படங்களின் விமர்சனங்களை ஒரு நொடியில் விவரித்து விடுகின்றோம். ஆனால் திரைக்குப் பின் பல கலைஞர்கள் உழைக்கின்றனர். அத்தகைய கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம் இந்நிறுவனம் அமைந்திருப்பது சிறப்பு" எனக் கூறினார். இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசுகையில்... "குட்டி ஏவிஎம் விரைவில் உருவாக்கப்படும்" எனக் கூறினார். இந்த நிறுவனம் விரைவில் தனது அடுத்தப்  படம் பற்றிய அறிவிப்பை வெளியிடவுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

த்ரில்லர் படத்தில் மிரட்டும் நான்கு கதாநாயகிகள்

Published on 04/12/2021 | Edited on 04/12/2021

 

sai dhanshika and srushti dange satrring new thriller movie

 

அறிமுக இயக்குநர் கிரிதரன் இயக்கத்தில் சாய் தன்ஷிகா, சிருஷ்டி டாங்கே, மனிஷா ஜஸ்னானி, சந்திரலேகா ஆகிய நான்கு கதாநாயகிகள் இணைந்து நடிக்கவுள்ளனர். த்ரில்லர் கதையை மைய்யமாக வைத்து உருவாகும் இப்படத்தை சங்கர் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கிறார். கார்த்திக் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு அசோக் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.ராமர் படத்தொகுப்பையும், எஸ்.ஜே.ராம் கலை இயக்குனராகவும் பணியாற்றுகிறார்கள்.

 

ad

 

இந்நிலையில் படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில், இதில் மாநாடு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

"அப்பா ரொம்ப ஃபீல் பண்ணாரு... சாரி!" - கரோனாவில் பாக்யராஜ்! சாந்தனு விளக்கம்!

Published on 08/05/2021 | Edited on 08/05/2021

 

dgxdbdb

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை ஏற்படுத்திய தாக்கத்தால், பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிகரிக்கும் மரணங்கள், மருத்துவமனைகளில் நிலவும் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகளின்மை ஆகியன மத்திய, மாநில அரசுகளுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன. அதே நேரத்தில், கரோனா தொற்றில் இருந்து மீண்டு வருவோரின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துவருவது சற்று ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது.

 

இந்த நிலையில், பிரபல நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ், அவரது மனைவி நடிகை பூர்ணிமா பாக்யராஜ் இருவருக்கும் தற்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவருடைய மகன் நடிகர் ஷாந்தனு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நேற்று (07.05.02021) பதிவிட்டார். அதில், தன் பெற்றோர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் வீட்டுத் தனிமையில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், அவரது பெற்றோர்களுக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் குறித்து சாந்தனு தற்போது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"Dear wellwishers

அப்பா compulsory ஓய்வுல இருக்கணும்னு Dr’s அட்வைஸ், அதான் phone’la யார்கிட்டயும் பேச முடியல.
நான் பேசலேன்னு கால் பண்ணவங்க feel பண்ணுவாங்கன்னு அப்பா ரொம்ப feel பண்ணாரு. Sorry, புரிஞ்சுக்குவீங்கன்னு தெரியும். ரெண்டு பேரும் நலமா இருக்காங்க. We will return ur calls soon" என பதிவிட்டுள்ளார்.