Skip to main content

கர்ப்பமான புன்னகை அரசி... வாழ்த்தும் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள்...

Published on 23/08/2019 | Edited on 23/08/2019

தமிழ் சினிமாவில் புன்னகை அரசி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகை சினேகா. இவர் கடந்த 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.
 

sneha

 

 

இதனையடுத்து உடனடியாக பல படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல்ஹாசனுடன் 'வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் 'வசீகரா', அஜித்துடன் 'ஜனா', விக்ரமுடன் கிங்', சுர்யாவுடன் 'உன்னை நினைத்து', தனுஷுடன் 'புதுப்பேட்டை', சிம்புவுடன் 'சிலம்பாட்டம்',  உள்ளியிட்ட படங்களில் நடித்தார். ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம், போன்ற படங்கள் சினேகாவிற்கு பெரும் புகழை பெற்று தந்தது.
 

2009ஆம் ஆண்டு வெளிவந்த 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நடிக்கும்போது அப்படத்தின் நாயகன் பிரசன்னாவை காதலித்தார் சினேகா. பின்னர் மூன்று ஆண்டுகள் கழித்து பிரசன்னாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.  அதையடுத்து கடந்த 2015ல் இந்த தம்பதிக்கு விஹான் என்ற மகன் பிறந்தார். குழந்தைக்காக சிறிது காலம் சினிமாவில் ஒதுங்கியிருந்த சினேகா பின்னர் மீண்டும் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினர்.
 

இந்நிலையில் சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அறிந்த பரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் பிரசன்னா சினேகா தம்பதியினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் பட்டாஸ் படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா நடித்து வருகிறார். மேலும் கன்னட படமான குருக்‌ஷேத்ரா படத்தில் திரௌபதியாக நடித்துள்ளார். இந்த படம் அண்மையில் வெளியானது. 

 

 

சார்ந்த செய்திகள்