Skip to main content

சூர்யா பட நடிகை திடீர் திருமணம்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

vfjgujg


 
தமிழில் ‘உதயன்’, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது ஹிந்தியில் 'பூஜ்: தி ப்ரைட் ஆஃப் இந்தியா' மற்றும் 'ஹங்கமா 2' ஆகிய படங்களில் நடித்துவரும் நிலையில், தனது நீண்டநாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை ப்ரணிதா சுபாஷ் திடீர் திருமணம் செய்துகொண்டார்.

 

நேற்று (30.05.2021) நடந்த திருமணத்தில் இருவீட்டார், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இத்திருமணத்தை தொடர்ந்து கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன் இவர்களது திருமண வரவேற்பை நடத்த ப்ரணிதா தம்பதியினர் திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்த திடீர் திருமணத்திற்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அழகான பெண் குழந்தைக்கு தாயானார் நடிகை ப்ரணிதா!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

actress pranitha welcome baby girl

 

தமிழில் ‘உதயன்’, கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாஸ்’, ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ப்ரணிதா சுபாஷ். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்த இவர் தனது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் நிதின் ராஜு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 

 

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த ப்ரணிதா சில மாதங்களுக்கு முன்பு தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் நடிகை ப்ரணிதாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், என் பிரசவத்தை எளிமையாகிய மருத்துவர்களுக்கு நன்றி. இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

Next Story

அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018
Pranitha



அரசுப் பள்ளியை தத்தெடுத்த நடிகை பிரணிதா முதல் கட்டமாக அப்பள்ளிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார். 
 

பிரபல கன்னட நடிகை பிரணிதா, தமிழில் உதயன், சகுனி, மாசு என்கிற மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியை அவர் தத்தெடுப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி முதல் கட்டமாக அந்த பள்ளியின் மேம்பாட்டிற்கு ரூ.5 லட்சம் நிதியை, அரசு பள்ளிகள் பாதுகாப்பு குழு தலைவர் அனில்ஷெட்டியிடம் பெங்களூருவில் புதன்கிழமை வழங்கினார்.
 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரணிதா, மாற்றத்திற்காக கற்பித்தல் என்ற அமைப்பில் சேர்ந்து, அரசு பள்ளியில் பாடம் நடத்தியிருக்கிறேன். அப்போது தான், அரசு பள்ளிகள் மிக மோசமான நிலையில் இருப்பதை கண்டேன். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு என்று தனியாக கழிவறை கிடையாது. இதனால் பெண் குழந்தைகள் பள்ளிக்கு வர தயங்கினார்கள். அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் அரசு பள்ளியை தத்தெடுக்க முடிவு செய்தேன் என தெரிவித்தார்.