Skip to main content

நான்கு ரூபாய்க்கு தினசரி தரமான உணவு வழங்கும் ரோஜா!

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 
 

roja

 

 

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,23,328 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34,005 ஆக அதிகரித்துள்ளது. உலகளவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,51,991 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1024 லிருந்து 1071 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1022 இந்தியர்கள், 49 வெளிநாட்டினர் என மொத்தம் 1071 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் 100 பேர் குணமடைந்துள்ளனர். 

இந்நிலையில் நடிகையும், ஆந்திராவின் நகரி தொகுதி எம்.எல்.ஏவுமான ரோஜா தனது ட்ரஸ்டிலிருந்து தினசரி 5000ஆம் பேருக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளார்.

கடந்த ஒரு வருடமாக நகரி அரசு மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு தனது ட்ரஸ்ட்டின் மூலம் தரமான உணவை ரூ. 4 க்கு வழங்கி வருகிறார். தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் நகரி மற்றும் புத்தூர் ஆகிய பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், பணியாளர்களுக்கு உதவிடும் வகையில் தனது ட்ரஸ்ட்டில் மேலும் 5000 பேருக்கு உணவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதேபோல இந்நேரத்தில் முடிந்தவர்கள் முடியாதவர்களுக்கு உதவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்