Skip to main content

"வரலாற்றுக்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது.." - லதா சரவணன் எழுதும் 'அந்த மைக்ரோ நொடிகள்' #1

Published on 03/06/2020 | Edited on 04/06/2020

 

ிர


அந்த அதிகாலை விடியலின் ஒளி கூட ஒட்டுமொத்த உலகிற்கும் நிரூபிப்பது முதல் மைக்ரோ நொடிக்குள் தான்! ரகசியங்களை ரகசியமாகவே சுமந்த உலகின் இருள் சொரிந்த பக்கங்கள் அனுபவித்த சுகங்களும், பாரங்களும், துயரங்களும் அந்தக் கணத்தில் நிகழ்ந்தவையே. நிறை சூல் பெண்ணின் அடிவயிற்றை முட்டி மோதி தன் பிறப்பை உறுதி செய்யும் அந்த மைக்ரோ நொடிகள் தான் ஒரு உயிரின் ஜனனம்.
 


ஆகச் சிறந்த காதலின் பேரில் யாரோ ஒருவனின் மகளின் உன்னதத்தை ருசி பார்க்கும் அந்தக் காதலனின் அணைப்பில் அவள் மயங்குவதும் அந்த மைக்ரோ நொடிகளே! வாள் முனையைக் கூர் செய்து தன் எதிரியின் தலைசீவும் மாவீரனின் வெற்றிக் கனியும், இரவு முழுவதும் இலக்கியத்துடன் கலவி புரிந்த கவிஞன் அதிகாலையில் அவசர கதியின் கவிதைக் குழந்தையைப் பிரசவிப்பதும், ஒரு நொடிக்குள் தனக்கே நெருப்பு வைத்துக் கொள்ளும் மெழுகு வர்த்தியும்தான் இங்கே மைக்ரோ விநாடிகள், அதன் இருட்டைப் போக்கும்திறனே ஹாட்ரிக் முடிவுகள்.

60 தினங்களின் தொடக்கத்தில் நாளைய விடியல் என்னும் கேள்விக்குறியைச் சுமந்த சாமானியனின் மூளையில் பிரேக்கிங் நியூஸூம் லூடோக்களும் நிறைந்த ஒரு வெறுமையான வாழ்க்கைக்கு நம்மைத் தள்ளிய ஹூவான் நகரின் கடல் வியாபார சந்தையின் இறால்களுக்கு இடையில் பிறந்த கரோனாவுக்கும் ஆழங்கள் தேடித் திரியும் அலைகளின் நுனியில் சிக்கிய நுரைகளைப் பின்தொடரும் மணல் துகள்களுக்குள் கண்ணாமூச்சு காட்டும் நண்டுகளின் மண் மறைவிலும் அந்த நொடிகளின் தாக்கம் இருந்திருக்கிறது. அந்த மைக்ரோ விநாடி சிந்தனைகளும் முடிவுகளும் மனிதன் மூளையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதைதான் அந்த மைக்ரோ நொடிகள் சொல்லப் போகிறது."
 

ப

 


இதயக் கீழ் அறை நோக்கி தமனிகள் சுமந்து செல்லும் உயிர்வளிக் குருதியைப் போல பல தகவல்களையும் அது சுமந்து செல்கிறது. இள ரத்தம் அதான் இத்தனை சுறுசுறுப்பு என்று நம் தமிழ் சினிமாக்களில் டயலாக் கேட்டு இருப்போமே அதைப் போலத்தான். கட்டளைகளின் வீரியத்தை அதன் செயல்பாடுகளைச் சரியானது என்னும் மன நிலைமையை மூளைக்கும் இதயத்திற்கும் கொண்டு செல்லும் ஒரு நிலை. மூளையின் மையப்பகுதியில் காணப்படும் டோபமைன் என்னும் இராசாயன அளவு இவ்வகை மனிதர்களிடம் அதிகம் இருக்குமாம். அவர்கள்தான் சைக்கோக்கள் என்று நம்மால் அழைக்கப்படுகிறார்கள்.

அது சரி சைக்கோ எப்படியிருப்பார்கள், இரத்தச் சிவப்பில் கண்களுடன், எப்போதும் கையில் ஒரு கூர்மையான ஆயுதத்துடன் யாரைக் கொல்லலாம் என்ற நினைப்போடு சுற்றிக் கொண்டு இருப்பார்கள் என்று நினைத்தால் நிச்சயம் அவர்கள் இல்லை. மக்களுடன் மக்களாக நம்முடனே பயணிப்பவர்கள் அவர்களின் மனம் சட்டென பிறழும் அந்தத் தருணத்தில் ஏற்படும் மாற்றமே சைக்கோத்தனம். நாவின் உணவுச்சுரப்பிகளின் சுவைமொட்டைப் போல அவர்களுக்கு தாங்கள் செய்யும் குற்றங்களின் சுவை பிடித்துப் போகுமாம். குறிக்கோள்கள் அற்ற உணர்ச்சிகள் அற்ற மனநிலையை உடையவர்கள். பிறரின் வலி அவர்களுக்கு இனிமையாக இருக்கும். பலவீனமானவர்கள்தான் இவர்களின் இலக்கு. பெற்றோர்களின் வன்முறைகளுக்கு ஆளாகும் குழந்தைகள் கூட அதற்கு உதாரணம். தன் கை ஓங்கியதும் குழந்தை பயந்து சுவரோடு மண்டிக் கொண்டு நிற்கும் போது பெற்றோரின் கண்களில் தோன்றும் அதீத ஒளி கூட சைக்கோத்தனத்தின் ஆரம்பம்தான்.

 

பர


வலியின் உச்சம் குருதியின் வெளிப்பாடு என்பதை மறுக்கும் படியாக சர்வாதிகார மனப்பான்மையை ஊக்குவிக்கும் வீடியோ கேம்கள். சோழவந்தானில் பாட்டியே பெண் குழந்தைக்குக் கள்ளிப்பால் ஊற்றி தரையில் அடித்துக் கொன்ற கொடூரம். இவை கூட ஒருவகையில் சைக்கோத்தனத்தின் வெளிப்பாடுகள்தான். மனித உடலின் டிராகுலாச் செல்கள் நாடெங்கும் நடத்திய தொடர் கொலைகள்தான் அந்த 'மைக்ரோ நொடிகள்'. வரலாற்றிற்கும் இந்த நொடிகளுக்கும் அநேகத் தொடர்புகள் இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின் இறுதியில் சிங்கப்பூரின் மாபெரும் வீழ்ச்சி என்று கருதப்பட்ட பசுபிக் போரின் ஒரு பகுதியாக 1942 இல் நடைபெற்ற போர். பிரிட்டிஷ் அரசாங்கம் தங்களை எதிர்ப்பவர்களையும், போராட்டக்காரர்களின் தலையையும் பிரிட்ஜின் மேல் உள்ள வளைவுகளில் கட்டி தொங்கவிட்டு இருப்பார்களாம்.
 

http://onelink.to/nknapp


அதைப்பார்க்கும் போது தங்களை எதிர்க்க யாருக்கும் தைரியம் வராது என்பது அன்றைய அரசின் நோக்கமாக இருந்தது. அதே சிங்கப்பூரில் 1986ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சைக்கோ கொலைச் சம்பவம் தான் வரும் தொடரின் முதல் அத்தியாயம். வரும் வாரத்தில் இருந்து....! குழந்தைகள் கூடி விளையாடும் பார்க் ஒன்றின் படரும் செடிகளுக்காக அமைக்கப்பட்டு இருந்த வளைவுகளில் இரத்தத் தீற்றலோடு ஒரு மனிதத் தலை உயிரற்ற ஒரு சிரிப்பை உதிர்த்தபடி......!

நொடிகள் விரியும்.......!


 

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் பறிபோன இளைஞரின் உயிர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
  life of the youth lost due to the negligence of the highway department!

கள்ளக்குறிச்சியில் இருந்து ஏமப்பேர், காரனூர் செல்லும் சாலையில் ஜெ.ஜெ நகர் என்ற இடத்தில் சாலை சீரமைப்பு பணிக்காக நெடுஞ்சாலைத்துறையினரால் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுபோன்ற நெடுஞ்சாலைத்துறை பணிகள் நடைபெறும் இடத்தில் முன்னெச்சரிக்கை விளம்பரங்கள் வைப்பது வழக்கம்.ஆனால்  தற்போது அதையெல்லாம் பல இடங்களில் முன்னெச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை என நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த நிலையில் சாலை சீரமைப்பு பணி நடந்து வரும் ஜெ.ஜெ நகர் பகுதியில் முன்னெச்சரிக்கை பலகை வைக்காததால் பரிதாபமாக ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குதிரைச்சந்தலை பகுதியைச் சேர்ந்த நடேசன் மகன் ராசு(30) நேற்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் பாலம் வேலை நடைபெறுவது குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாததால் சாலையில் அடுக்கப்பட்டிருந்த பாறையில் அவரது இரு சக்கர வாகனம் மோதி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே ராசு பரிதாபமாக உயிரிழந்தார். நெடுஞ்சாலைத் துறையின் அலட்சியத்தால் தான் ராசு உயிரிழந்துள்ளார் என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.