Skip to main content

மூன்று தலைமுறைக்கு செல்வம் நிலைக்க முத்தான பரிகாரங்கள்! 

Published on 13/10/2023 | Edited on 13/10/2023

 

 Remedies to keep wealth for three generations!

 

செல்வம் மட்டும்தான் நம்மை வறுமை என்னும் தீமையினின்று காப்பாற்றும். பணத்தைவிட உயர்ந்தவை பலவுள்ளன என்றாலும், அவற்றைப் பெற பணமே தேவை. "பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை' என்பதே உலகப் பொதுமறை. ஆற்றில் நீர் இருக்கும் சமயத்தில் படகில் சென்றால் நினைத்த இடம் போய்ச் சேரலாம். அதுபோல வாழ்விலும் செல்வத்தைப் பயன்படுத்தி மட்டுமே நினைத்ததைப் பெறலாம். அந்த செல்வத்தைத் தீர்மானிப்பது நம் வருமானம்.

 

‘வருமானம்’ என்ற சொல் மனிதருக்கு பொருள் (செல்வம்) எவ்வளவு முக்கியமானது என்பதை விளக்கும் பொருள்பொதிந்த சொல். வருமானம் இருந்தால் மானம் (தன்மானம்) வரும்; இல்லையென்றால் மானம் போகும்.

 

வரவேற்றால் வருபவள் ஸ்ரீதேவி; அழைக்காமல் வருபவள் மூதேவி என்பதே உண்மை. திருமகள் வந்தால் அழகு; தவ்வை (மூதேவி) போனால் அழகு. மகாலட்சுமியை மனமுருக வேண்டியும், சிலருக்கு செல்வியின் அருட் கடாட்சம் கிடைக்காமல் போகிறது. இதற்குக் காரணம், மூதேவி உள்ளவரை ஸ்ரீதேவி அந்த இடத்திற்கு வரமாட்டாள் என்பதே ரகசியம். மனதின் அழுக்காகிய பொறாமையும், இருப்பிடத்தின் அசுத்தமாகிய ஒட்டடை, தூசி, எருக்கன் செடி போன்றவையும் இருக்குமிடத்தில் செந்தாமரைச் செல்வி வாசம் செய்யமாட்டாள்.

 

● ஒருவர் ஜாதகத்தில் ராஜ கிரகங்களான சூரியன் மற்றும் சந்திரனின் நிலை பலமாக இருந்து, லக்னமும் வலிமை பெற்றால் அவருக்கு தனயோகம் அமைந்துவிடும்.

 

●ஒரு ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 2, 6, 10 ஆகிய வீடுகள் அர்த்த திரிகோணம் எனப்படுகின்றன. அர்த்த திரிகோணாதிபதிகளின் பலமான தொடர்புகள் தொழில்மூலம் வரும் நிரந்தர வருவாயைக் குறிக்கிறது.

 

●குரு ஆட்சி, உச்சம் பெற்று, அசுபர்களின் தொடர்பு அல்லது பார்வை பெறாமல் வலுத்திருந்தால் ஜாதகரை வறுமை அணுகாது.

 

●இரண்டாம் அதிபதியும், பதினோறாம் அதிபதியும் இணைந்து லக்னம் அல்லது லக்னாதிபதியின் தொடர்பிலிருந்தால், செல்வம் தரும் யோக அமைப்பு உருவாகும்.

 

● பணபர ஸ்தானங்களான லக்னத்திற்கு 2, 5, 8, 11 ஆகிய வீடுகள் வலுவடைந்தாலும் செல்வத்திற்குக் குறைவிருக்காது. ஜாதகத்தில் பணபர ஸ்தானங்கள் வலுவடைந்து நவாம்சமும் வலுப் பெற்றால் மட்டுமே தனலட்சுமி தாண்டவமாடுவாள் என்று சொல்லிவிட முடியாது. இந்து லக்னம் (மகாலட்சுமி ஸ்தானம்) வலுப்பெற்றால் மட்டுமே செல்வத்தின் சேர்க்கையால் கோடீஸ்வர யோகத்தைத் தரும்.

 

இந்து லக்னம் என்பது சூரியனின் அடிப்படையிலான லக்னத்தையும், சந்திரனின் அடிப்படையிலான ராசி யையும் இணைத்து ‘கிரக களா பரிமாணம' என்ற முறையில் கணிக்கப்படுகிறது. சூரியன்-30, சந்திரன்-16, சுக்கிரன்- 12, குரு-10, புதன்-8, செவ்வாய்-6, சனி-1. ஜாதகத்தில் லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியின் எண்ணையும், ராசிக்கு ஒன்பதாம் வீட்டு அதிபதியின் எண்ணையும் கூட்டினால் வரும் எண்ணை, பன்னிரண்டால் வகுத்தால் வரும் மிகுதியை ராசியிலிருந்து எண்ணினால் அது எந்த வீட்டில் முடிகிறதோ அதுவே அவருடைய இந்து லக்னமாகும். இந்து லக்னாதிபதி இந்து லக்னத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெறுவதே சிறப்பு.

 

திருமகளை நம் இல்லத்திற்கு வரவேற்று நிலைபெறச் செய்வதற்கும், இல்லாமை இல்லாமல் போகவும், வளமை நம்மை வலம் வரவும் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: ஒட்டடை, அசுத்தங்களை அகற்றி, நம் இருப்பிடத்தை ஒளிமயமாக வைத்துக் கொள்வதால், வாழ்க்கை ஒளிமயமாகும். தினமும் வீட்டின் முன்வாசலைக் கழுவிக் கோலமிடுவதே திருமகளை வரவேற்பதாகும்.

 

ஸ்ரீதேவி முன்வாசல் வழியாக வருவாள்; மூதேவி பின்வாசல் வழியாக வருவாள் என்பதால், மாலை நேரத்தில் பின்வாசலை அடைத்துவிடுதல் நல்லது. கிழிந்த ஆடைகளை அணிவதைத் தவிர்ப்பதே வறுமையை விலக்கும் வழி. உடைந்த கண்ணாடி, பின்னமான விக்கிரகங்களை அப்புறப்படுத்துவதால் தீமை விலகும். வெள்ளிக்கிழமைகளில், தாமரைத் திரியிட்ட ஐந்துமுக விளக்கில் மகாலட்சுமியை தியானம் செய்து வழிபடுவது, சகல ஐஸ்வரியங்களையும் தரும்.

 

காஞ்சி காமாட்சியம்மன் சந்நிதியில் தரப்படுகிற குங்குமப் பிரசாதத்தை, காயத்ரி மண்டபத்திலுள்ள அரூப லட்சுமியின் மேல் வைத்துவிட்டு, அவளையும் வணங்கி பிரசாதத்தை எடுத்துச் செல்வதால், குறையாத செல்வம் பெறலாம். சிவபெருமான் திருஞானசம்பந்தருக்குப் பொற்கிழி அளித்த, திருவாவடுதுறை சென்று கோமுக்தீஸ்வரரை வணங்கினால் செல்வம் சேரும்.

 

வெள்ளிக்கிழமைகளில், பசுவுக்கு அகத்திக்கீரையை உணவாகத் தந்து வணங்கினால், மூன்று தலைமுறைகளுக்கு வறுமை நெருங்காது. பணப்பெட்டியில் மகாவில்வம் வைத்து வழிபட்டால் செல்வத்தின் ஓட்டம் வற்றாது. புறாக்களுக்கு நவதானியத்தை உணவாகத் தந்தால் வறுமை பறந்து போகும்.

 

- வைபவ சாஸ்திர ஜோதிடர் குடந்தை சிவராமன்

 

 

Next Story

மண வாழ்க்கை நிம்மதியாக இருக்க... - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 murugu-balamurugan-jothidam-3

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

திருமண வாழ்க்கை பற்றி பேசும்பொழுது பொதுவாக ஜோதிடம் என்பது ஒரு கடல். நிறைய கருத்துக்கள் இருந்தாலும் தற்காலத்திற்கு ஏற்றவாறு அன்றைய சூழ்நிலைக்கேற்றவாறு அனுபவ கருத்துதான் மிக மிக முக்கியம். புத்தகங்கள் இருந்தாலும் ஜோதிடர்கள் பல நேயர்களிடம் கேட்கக்கூடிய உரையாடலின் மூலமாக அவர்கள் சொல்லும் கருத்துக்கள் தான் மிக முக்கிய அனுபவம். அப்படி ஆண் பெண் ஜாதகம் எப்படிப்பட்ட கிரக அமைப்புகள் இருந்தால் மண வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்பதை பார்க்க வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி நல்ல ஸ்தானத்தில் இருந்தால் மண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதிலும் ஜென்ம லக்னத்தில் இருந்து ஏழாம் வீட்டில் களத்திர ஸ்தானம் திருமண வாழ்க்கை குறிக்கக்கூடிய ஸ்தானம் என்று சொல்லலாம். அது மட்டுமல்லாமல் இரண்டாம் வீடு என்பது குடும்ப ஒற்றுமையை குறிக்கக்கூடிய ஸ்தானம். எந்த ஒரு ஜாதகத்தில் ஏழாம் அதிபதி கேந்திர திரிகோண ஸ்தானம் என்று சொல்லக்கூடிய ஒன்று நாலு ஏழு பத்தில் ஏழாம் அதிபதி அமைய பெறக்கூடிய ஜாதகமும் அதுபோல ஏழாம் அதிபதி ஒன்னு ஐந்து ஒன்பதில் அமையக்கூடிய ஜாதக நேயர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். அதுபோல இரண்டு ஏழு பாவ கிரகங்கள் இல்லாமல் இருப்பது ரொம்ப சிறப்பு. ஆண்கள் ஜாதகத்தில் சுக்கிரன் என்பவர் களத்திரக்காரர் என்பர் அந்த களத்திரக்காரர் சுப கிரக சேர்க்கையோடு இருக்க வேண்டும்.

பெண்கள் ஜாதகத்தில் செவ்வாய் என்பவர் களத்திரக்காரர். அவர் சுப கிரக நட்சத்திரங்களோடு அமைவது, சுப கிரக சேர்க்கையோடு அமைவது மிக சிறப்பு. ஒரு ஆணின் ஜாதகத்தை எடுத்தாலும் சரி பெண்ணின் ஜாதகம் எடுத்தாலும் சரி இரண்டு, ஏழுக்கு அதிபதி பலமாக இருந்தால் மண வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண காலத்தில் நடக்கக்கூடிய தசாபுத்திகள் சுபகிரக தசா புத்தியாக இருக்க வேண்டும். ஒரு நல்ல கிரகத்துடைய தசா புத்தி ஆக இருந்தால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். 

நவக்கிரகங்களில் சுப கிரகம் என்பது குரு, சுக்கிரன் சுபசேர்க்கை பெற்ற புதன், வளர்பிறை சந்திரன் ஆகியவை சுப கிரகங்கள் ஆகும். அந்த சுப கிரகங்கள் ஏழில் அதிபதி அமைவதோ அல்லது ஏழாம் சேர்க்கை பெறுகிறதோ அடுத்த இரண்டாம் வீட்டிலோ அல்லது இரண்டாம் சேர்க்கை பெறுவதும், சுக்கிரன் எனும் சுப கிரக நட்சத்திரத்தில் அமைவதும், சுப கிரகங்களுடைய தசா புத்திகள் நடைபெற்றால் குறிப்பாக திருமண வயதில் அடுத்த 10 - 15 வருடங்களுக்கு நடக்கக்கூடிய அமைப்பு என்பது மன வாழ்க்கை ரீதியான பலனை ஏற்படுத்தக் கூடியது.

Next Story

உறவுகள் ஒற்றுமையாக இருக்க கிரகங்கள் எவ்வாறு அமைய வேண்டும்? - பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் விளக்கம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
murugu-balamurugan-jothidam-2

ஜாதகம் தொடர்பான பல்வேறு விதமான தகவல்களை நம்மோடு பிரபல ஜோதிடர் முருகு பாலமுருகன் பகிர்ந்து கொள்கிறார்.

ஜோதிடத்தில், குடும்ப ஒற்றுமை பற்றி அறிய இரண்டாம் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜோதிட ரீதியாக குடும்ப ஒற்றுமையை விளக்கக்கூடிய ஸ்தானமாக விளங்குவது ஜென்ம லக்னத்தில் இருந்து இரண்டாவது இடம். இது ஒரு பாலருக்கும் பொருந்தும்.  இரண்டாம் எண் என்பது குடும்ப ஒற்றுமை குறிப்பது.  இரண்டில் சுப கிரகங்கள் அமையப்பெற்றிருந்தால் அதாவது குரு, சுக்கிரன், புதன், வளர்பிறை சந்திரன், சுப சேர்க்கை பெற்றிருந்தால் குடும்ப ஒற்றுமை மிக மிக நன்றாக இருக்கும். 

அதுபோல குரு போன்ற கிரகங்கள் அதனுடைய பார்வை இரண்டாம் இடத்தில் இருந்தால் குடும்பத்தில் நல்லது.  பாவ கிரகங்கள் சனி ராகு கேதுவாக இருக்கிறார்கள். சூரியன், செவ்வாய் பாவகிரகங்கள் என்றால் அது பாதிப்பை கொடுப்பதில்லை. அதாவது  ஒருவர் ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் சனி, ராகு போன்ற பாவ கிரகங்கள் அமைவது அவ்வளவு நன்றல்ல . லக்னத்தில் சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி, ராகு அமைவதும் அவ்வளவு நல்லஅமைப்பு என்று சொல்ல முடியாது. மேலும் அந்த சனியுடைய திசை இரண்டாம் வீட்டை நோக்கி வந்தாலும், இரண்டில் ராகு இருந்தாலும், ராகு திசை கடந்தாலும், அந்த ஜாதகருடைய குடும்பத்தில் ஒரு ஒற்றுமை குறைவு உண்டாக்கிவிடும். அதற்காக இரண்டாவது இடத்தில் சனி ராகு இருந்தால் முழுமையாக பாதிப்பென்று இல்லை. அதனுடைய திசை வரும் போது மட்டும் கொஞ்சம் பாதிப்பை உண்டாக்கலாம். குழந்தை பருவத்தில் இரண்டாம் வீட்டில் ராகு திசை நடக்கிறது என்றால் தந்தையோடு  இருக்க முடியாத நிலை உண்டாகும். ஒரு சில இடங்களில் தாத்தா பாட்டி அல்லது உறவினர்களுடன் வளரும் நிலை கூட உண்டாகிவிடும். 

அதேபோல இரண்டாம் வீட்டில்  சனி இருக்கும் பொழுது அந்த வீட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாவது, வாக்குவாதங்கள் நடப்பது, நிம்மதி குறைவு, படிப்பு நிமித்தமாக அந்த ஜாதகர் வெளியிடங்களில் போய் தங்கும்  நிலை போல ஏற்படும். 25 வயதில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இரண்டாம் இடத்தில் ராகு திசை ஆரம்பித்தால் திருமணம் நடைபெறுவதே ஒரு பெரிய கேள்விக்குறையாகிவிடும். அல்லது கணவனும் மனைவியும் பிரிந்து இருப்பது , அதாவது திருமணமாகிவிட்டாலும் ஒன்றாக சேர்ந்து வாழ்வது கடினம் ஆகிவிடும். ராசியில் இரண்டாம் வீட்டிலோ அல்லது லக்னத்தில் இரண்டாம் வீட்டிலோ இப்படி இருந்தால் ஏற்படலாம். 

சனி புத்தி என்பது திருமணம் ஆகி ஒரு இரண்டு மூன்று வருடத்தில் நடந்தால் அந்த குறிப்பிட்ட காலத்தில் ஒரு சில காரணங்களுக்காக மனைவியிடம் இருந்து கருத்து வேறுபாடு ஏற்பாடும், அல்லது பிரிந்து வாழும் படி ஏற்படும். அதே போல பத்து வருடம் கழித்து அது போல ஏற்பட்டால் அந்த தசாபுத்தி வருகிற பொழுது குடும்பத்தில் எல்லோரும் வேறொரு ஊரில் பிரிந்து இருப்பார். இந்த மாதிரி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது என்ற பாவ கிரகங்கள் அமையப்பெற்று இருப்பவர் பெரும்பாலும் மருத்துவர் துறையிலே இருப்பார்கள்

பொதுவாக இந்த தசாபுத்தி என்பது எந்த வயதில் அந்த ஜாதகருக்கு நடக்கிறதோ அப்போது அவர் யாருடன் இருக்கிறாரோ அதை பொறுத்து பலன்கள் மாறுபடும். அதுபோல குறிப்பாக ராகு அல்லது சனி அமையப்பெற்று இருந்தால் பேச்சை குறைக்க வேண்டும்.  இரண்டில் ராகு, சனி இருந்தால் பேசுவது ஒரு பெரிய பிரச்சனையாகி விடும் அதனால் பேச்சை குறைப்பது நல்லது. அடுத்து ஒரு ஆண் ஜாதகருக்கு ராகு தசை அல்லது சனி தசை ஒரு இரண்டு வருடம் நடக்கிறது என்றால் அந்த இரண்டு வருடத்தில் எத்தனை முறை திருமணம் ஏற்பாடு நடந்தாலும் அது தடங்கல் கொடுக்கும். இப்படி இரண்டாம் வீட்டில் சனி ராகு கேது இருந்து அதற்கான தசை நடக்கும்போது தேவையற்ற பேச்சை குறைத்துக் கொண்டாலே நல்லது.