Skip to main content

ஈக்வடாரில் நிலநடுக்கம்;ரிக்டர் அளவுகோலில் 6.3!!

Published on 07/09/2018 | Edited on 07/09/2018
earth

 

ஈக்வடாரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது.

 

தெற்கு அம்பாடோ நகரத்திலிருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் 112 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் குவைட்டோவில் உள்ள  மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதேபோல் அங்கு கடந்த 2016 -ஆம் ஆண்டு ஈக்வடார் பசிபிக் பெருங்கடல் பகுதிகளில் 7.8 என்ற ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தினால் 700-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால் தற்போது நேற்று  திடீரென ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

 Powerful earthquake in Sri Lanka

 

இலங்கையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 

இலங்கையின் தெற்குப் பகுதியில் கடலின் நடுப்பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து தென்கிழக்கே 1,326 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவுகோலில் 6.2 என சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகப் பதிவாகி உள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Next Story

டெல்லியில் நிலநடுக்கம்

Published on 15/10/2023 | Edited on 15/10/2023

 

Earthquake in Delhi

 

டெல்லியில் திடீரென ஏற்பட்ட லேசான நிலநடுக்கத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. ஃபரிதாபாத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லி என்.சி.ஆர், ஆக்ரா, சஜ்ஜார் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில அதிர்வு காணமாக அச்சமடைந்த மக்கள் வீடுகளையும் அலுவலகங்களையும் விட்டு வெளியே ஓடி வந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. முதற்கட்டமாக டெல்லியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது 3.1 என ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.