பணம் கொடுப்பதாக இருந்தால் பிரதமர் ஏன் இத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும்? என பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா தேர்வு செய்யப்பட உள்ளார். கர்நாடகாவில் பாஜக வெற்றிக்காக உழைத்த கட்சியினர் அனைவருக்கும் நன்றி. பாஜக மீதும் மோடி மீதும் மக்கள் அபரீதமான நம்பிக்கை வைத்துள்ளனர். காங்கிரஸ் எவ்வளவு தான் பிரித்தாலும் சூழ்ச்சியை செய்தாலும், அவர்கள் ஆண்டு கொண்டிருந்த மாநிலத்தையே அவர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியால் இனி எதிர்காலத்தில் வேறு எந்த மாநிலத்தையும் பிடிக்க முடியாது.
தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கிறது. காங்கிரசும், பாஜகவும் போட்டியிடும் இடங்களில் பாஜக வெற்றி பெறுகிறது. அதேப்போல் காங்கிரசும், மதசார்பற்ற ஜனதாதளமும் போட்டியிடும் இடங்களில் மதசார்பற்ற ஜனதாதளம் முன்னிலை வகுக்கிறது.
ராகுல், சோனியா பிரச்சாரம் அங்கு எடுபடவில்லை. மதத்தையே பிறித்து எப்படி இவ்வளவு நாட்கள் இந்தியாவை பிரித்தாலும் சூழ்ச்சியை மேற்கொண்டார்களோ, அதே சூழ்ச்சியை அவர்கள் கர்நாடகாவிலும் நடைமுறைப்படுத்த முயற்சி செய்தார்கள். ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதற்காக எங்களுக்கு வாய்ப்பை கொடுத்திருக்கிறார்கள்.
கர்நாடகாவில் பாஜக ஆட்சி வந்தால், கர்நாடகாவிற்கு நண்மை கிடைக்கும். இங்கு தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கும். ஏனென்றால், உச்சநீதிமன்றம் திறந்து விட கூறிய தண்ணீரைக் கூட சித்தராமையா ஒரு போதும் திறந்துவிட்டதில்லை. ஆனால் எடியூரப்பா ஆட்சி செய்தபோது நியாயமாக நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு கிடைத்துக்கொண்டிருந்தது.
பணம் கொடுப்பதாக இருந்தால் பிரதமர், அமித்ஷா ஏன் இத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்? கர்நாடக வெற்றி தென்னகத்தில் பாஜகவின் வெற்றி வாசலாக இருக்கும் என்று அமித்ஷா கூறியுள்ளார். அதைத்தான் நானும் கூறுகிறேன் என அவர் கூறினார்.
பணம் கொடுப்பதாக இருந்தால் பிரதமர் ஏன் இத்தனை தொகுதிகளில் பிரச்சாரம் செய்ய வேண்டும்? தமிழிசை கேள்வி
சார்ந்த செய்திகள்
Next Story
“தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்” - ஆளுநர் தமிழிசை பெருமிதம்
தற்போது செயல்பட்டு வரும் நாடாளுமன்றக் கட்டடம் 96 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்களால் 1927 ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்றக் கட்டடத்தின் கட்டுமானம், பாதுகாப்பு வசதிகள் குறைவு மற்றும் இட வசதி குறைவு காரணமாக புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த நிலையில் புதிய கட்டடம் கட்டுவதற்கான திட்டத்திற்கு பிரதமர் மோடி கடந்த 2020 டிசம்பர் 10 ஆம் தேதி அடிக்கல் நாட்டினார்.
கட்டுமானப் பணிகள் முடிந்த நிலையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் சவார்க்கர் பிறந்த தினமான இன்று (மே28) பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற கட்டடத்தை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா முன்னிலையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சபாநாயகர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். கட்டடம் திறக்கப்பட்டதை அடுத்து, அங்கு அனைத்து மத குருமார்களின் முன்னிலையில் வழிபாடுகள் நடத்தப்பட்டது. மேலும் புதிய நாடாளுமன்றக் கட்டடப் பணியில் ஈடுபட்டவர்களுக்கு பிரதமர் மோடி சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இந்நிலையில் புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டதை வரவேற்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழச்சி தமிழிசையின் மனம் நிறைந்த நன்றிகள்’ எனக் குறிப்பிட்டு ஆரம்பித்துள்ளார். அதில், “நம் நாடாளுமன்றத்தில் நம் மனதை ஆளும் தமிழ் ஒலித்தபடியே நம் தமிழ் அரசர்கள் பயன்படுத்திய செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது. புதிய பாராளுமன்றத்தில் முதன்முதலில் புகுந்தது நம் தமிழ். மிகப் பிரமாண்டமாக கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றத்திற்குள் எளிய சிவனடியார்கள் புடைசூழ நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கரங்களால் முதல் நிகழ்வாக தமிழகத்து செங்கோல் நிறுவப்பட்டிருக்கிறது.
நீதி வழுவாத செங்கோல் என்று சொல்லப்படும் செங்கோல் நம் பாராளுமன்றத்தை முதன்முதலில் அலங்கரிக்கிறது. இந்த நிகழ்வை உலகம் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மிகப்பெரிய பெருமையை தமிழுக்கும்,தமிழர்களுக்கும் கொடுத்தது தமிழச்சி என்ற வகையில் மெய்சிலிர்த்து கண்டேன். அதற்காக மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடியார்கள் அரசாள்வர் என்ற திருஞானசம்பந்தரின் வார்த்தைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்பு மக்கள் அரசாளும் பாராளுமன்றத்திற்குள் ஒலித்திருப்பது தமிழக ஆன்மீகம் எவ்வளவு தொலைநோக்கு பார்வை கொண்டது. அன்று பாடியது பாராளுமன்றம் மூலம் இன்று மக்களை நாடியது.
யார் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தமிழக மக்கள் அனைவரும் மனதிலும் செங்கோல் நிறுவிய காட்சி பசுமரத்தாணி போல் பதிந்து இருக்கிறது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழுக்கும் தமிழக மக்களுக்கும் வரலாற்றுப் புகழ் சேர்த்திருக்கிறது. இதை புறக்கணித்தவர்கள் தமிழுக்கும், தமிழ் கலாச்சாரத்திற்கும் துரோகம் செய்து மிகப் பெரிய வரலாற்றுப் பிழையை ஆற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு என் தமிழுக்கு கிடைத்த பெருமையை தமிழுக்கு சூட்டிய மகுடமாக நினைத்து பாரதப் பிரதமருக்கு கோடான கோடி தமிழக மக்கள் சார்பில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story
“கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” - தமிழிசை எச்சரிக்கை
கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சிக்கிம் மாநில உதய தினம் கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரியில் கல்வி பயிலும் சிக்கிம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி. கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புதுச்சேரியில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வந்தாலும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.