Skip to main content

யாரு... டாஸ்மாக் மணியா...? -தினகரன் 

Published on 02/06/2018 | Edited on 02/06/2018
ttv dinakaran 450.jpg


ஜெயலலிதா கடந்த 2016 தேர்தல் அறிக்கையில் 6,672 மதுக்கடைகளை படிப்படியாக குறைப்பேன் என்று தெரிவித்தப்படி ஆட்சிக்கு வந்தபிறகு 500 மதுக்கடைகள் மூட உத்தரவிட்டார். அதைதொடர்ந்து தற்போதைய அரசு கடந்து ஆண்டு பிப்பவரியில் 500 கடைகளை மூடியது. அதற்கு பிறகு நீதிமன்றங்களின் தீர்ப்பின்படி கிட்டதட்ட 3,321 மதுக்கடைகள் மூடப்பட்டன. தற்பொழுது 3,866 கடைகள் உள்ளன என்று அமைச்சர் நேற்று சபையில் தெரிவித்தார். 810 கடைகளை மீண்டும் திறப்பதற்கு காரணம் என்ன? என்று சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை ஆர்.கே.நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் கேள்வி எழுப்பினார்.
 

அதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் தங்கமணி, 6,700 என்று இருந்த டாஸ்மாக் கடைகள் இன்று 3,862 கடையாக குறைக்கப்பட்டிருக்கிறது. 2002ஆம் ஆண்டிலிருந்து தமிகத்தில் இதுவரை 25 சதவீதம் மதுபான ஆலை யாருடையது? எந்த குடும்பத்தை சார்ந்தது? ஜெயலலிதா மறைந்த பிறகு அவருடைய கொள்கையை ஏற்று இருந்தால் அவர்கள் இங்கே வந்து கேள்வி கேட்பதற்கு தகுதி உள்ளது. ஆனால் அங்கே வருமானம் வர வேண்டும். இங்கே மக்களுக்கு மத்தியில் வந்து ஜெயலலிதா உடைய அரசுக்கு விரோதமாக இந்த அரசு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டுவதா? என்றார். 

 

minister thangamani.jpg


இதனைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்த டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, 
 

எனக்கு சாராய ஆலை எதுவும் கிடையாது. எனது மனைவி, எனது குழந்தைதான் எனது குடும்பம். வேறு யாரவது உறவினர்கள் வைத்திருந்தால் அந்த ஆலை எல்லாம் எங்கு இருக்கு என்று எனக்கு தெரியாது. 2016ல் ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார்? டி.டி.வி. தினகரன் உள்பட ஜெயலலிதாவால் விலக்கப்பட்டவர்கள். ஆகையால் அவர்கள் ஆலையில் இருந்து அரசாங்கத்துக்கு மதுபானங்கள் வாங்க கூடாது என்று சொல்லியிருக்கலாமே? 
 

அண்ணன் தங்கமணி, கட்சியில் ஒதுக்கப்பட்ட, ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்ட டி.டி.வி. தினகரன் துணைபொதுச்செயலாளர் என தேர்தல் ஆணைய்ததில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? ஆர்,கே.நகர் தொகுதியில் நான் போட்டியிட்டபோது அண்ணன் தங்கமணி உள்பட இந்த மந்திரிகள் ஆட்டோவில் தொத்திக்கொண்டு வந்தவர்கள். 
 

திடீரென்று இந்த குடும்பம் மது ஆலையை மூடினார்களா என்று கேட்கிறார். என்னிடம் மது ஆலை இருந்தால்தான் நான் மூட முடியும். உறவினர்கள், நண்பர்கள் வைத்திருந்தால் அதுக்கு நான் பொறுப்பாக ஆக முடியுமா? 2011ல் ஜெயலலிதா இவர்கள் பேச்சை கேட்டு கட்சியில் இருந்து எங்களை எடுத்தார்கள். 2016ல் இவர்தானே டாஸ்மாக் மந்திரியாக இருந்தார். அப்ப சொல்ல வேண்டியது தானே? தினகரன் குடும்பத்தை சேர்ந்த தொழிற்சாலையில் இருந்து நாம் சரக்கு வாங்க வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே? அப்புறம் ஏன் வாங்கிகொண்டு இருக்கிறார். 
 

யார் யார் எந்தெந்த தொழிற்சாலையில் பினாமி பெயரில் பாட்னர் வைத்து இருக்கிறார்கள் என்று கோயம்புத்தூர் பக்கம் போய் கேட்டால் தெரியும். எந்த பொய்யும் நிக்காது. எந்த உண்மையும் நிக்காது. உறுப்பினரின் குடும்பம் என்று சொன்னார். சபையில் அரசியல் மேடை போல் பேசிய அமைச்சருக்கு பதில் வேண்டியது கடமை. 

குடும்ப உறுப்பினர் என்று சொன்னால் அதற்கு பதில் சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. பேச அனுமதி தரவில்லை என்றால் அவர் நடுநிலை தவறிவிட்டார் என்று தானே அர்த்தம். 
 

கேள்வி : நேற்று அமைச்சர் தங்கமணி பதில் அளிக்கும்போது உங்களை குறிப்பிட்டு பேசினார்.
 

பதில் : யாரு டாஸ்மாக் மணியா?
 

கேள்வி : உங்கள் ஆதரவாளர்கள் போன் போட்டு மிரட்டியதாக சொல்கிறார்களே?
 

பதில் : அண்ணன் தங்கமணி, சும்மா பொய்யா சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர்களிடம்தானே காவல்துறை இருக்கிறது. அதை வைத்து கண்டுபிடிக்க வேண்டியதுதானே? தமிழ்நாட்டில் எங்கள் கட்சி தொண்டர்களும், பொதுமக்களும் ஆட்சியாளர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. டாஸ்மாக் அமைச்சரை டாஸ்மாக் அமைச்சர் என்று தான் சொல்ல முடியும். அவர் கோபத்தில் நிதானம் இல்லாமல் பேசுகிறார். அவர் குற்றவுணர்வில் அம்மாவுக்கு தெரியும் கடவுளுக்கு தெரியும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார். அடுத்த தேர்தல் வரும், அதில் எப்படி ஜெயிக்கிறர் என்று பார்ப்போம். என்னை, இவர் ஒரு தனி உறுப்பினர். இவரால் ஆட்சியை பிடிக்கமுடியாது. சரி அப்படியே வைத்துக்கொள்வோம். இந்த தனி உறுப்பினருக்கு ஏன் ஒரு மே தின கூட்டம் நடத்த கூட இந்த காவல் துறை அனுமதிக்கவில்லை. இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.