உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளுக்குக் கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. தமிழகத்தில் நேற்று 4,150 பேருக்கு ஒரே நாளில் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நான்காவது முறையாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு என்பது 4 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் இன்று 1,713 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டாவது நாளாக 2 ஆயிரத்திற்குக் குறைவாக கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.
இதனால் தமிழகத்தில் மொத்தம் கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 151 என உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 68 ஆயிரத்து 254 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகின்றது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை 166 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.