Skip to main content

சிதம்பரம் அருகே சுனாமி நினைவேந்தல்!

Published on 26/12/2018 | Edited on 26/12/2018

 

 tsunami Commemoration in chidamparam

 

சுனாமியில் உயிர் நீர்த்தவர்களின் நினைவு தினமான  இன்று கிள்ளை பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி மலர் துாவி மீனவர்கள் அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

சுனாமி பேரலையில் கிள்ளை பேரூராட்சிக்குட்பட்ட மீனவ கிராமங்கள், டி.எஸ்.பேட்டையைச் சேர்ந்த  குழந்தைகள், ஆண்கள் மற்றும் பெண்கள் என 168 பேர் உயிரிழந்தனர்.

 

ஆண்டு தோறும்  சுனாமியால் உயிரிழந்தவர்களுக்கு மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நேற்று சின்னவாய்க்கால், 

பில்லுமேடு, பட்டரையடி பகுதியில் உயிழந்தவர்கள் புகைப்படம், நினைவு துாண்களுக்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி பெண்கள் கதறி அழுதனர். 

 

பின்னர்  அமைதி ஊர்வலமாக சென்று பிச்சாவரம் உப்பனாற்றில் பால் ஊற்றி, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். 300 க்கும் மேற்பட்டவர்கள் உப்பனாற்றில் பால் ஊற்றியும், மலர் துாவியும் அஞ்சலி செலுத்தினர். 

 

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி துக்கத்தை வெளிபடுத்தினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

Published on 25/02/2022 | Edited on 25/02/2022

 

Powerful earthquake in Indonesia!

 

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

இந்தோனேஷியாவிவின் சுமத்ரா தீவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக நிலநடுக்கம் பதிவான நிலையில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கிருந்த கட்டிடங்கள் குலுங்கின. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.  சுனாமி தொடர்பான எந்த அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை. கடந்த 2004 ஆண்டு இதே சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி அலைகள் உருவாகி பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Next Story

கடலில் 27 மணிநேர போராட்டம்... டோங்கோ சுனாமியில் உயிர் பிழைத்த முதியவர்!

Published on 21/01/2022 | Edited on 21/01/2022

 

27 hours of struggle at sea ... the old man who survived the Tongo tsunami!

 

பசிபிக் பெருங்கடலையொட்டி உள்ள டோங்கோ நாட்டில் கடந்த 14 ஆம் தேதி ஹூங்கோ டோங்கோ என்ற தீவில் கடலுக்கு அடியிலிருந்த எரிமலை வெடித்துச் சிதறியது. கடலுக்குள் 260 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 20 கிலோமீட்டர் உயரத்தில் எரிமலை வெடித்துச் சிதறிய காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எரிமலை வெடிப்பால் கடலுக்கு அடியில் சுனாமி அலை உருவானதை அடுத்து தீவில் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் கடல் நீர் புகுந்தது.

 

டொங்கோ-வில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்துள்ள நிலையில் இதன் பாதிப்பு வருங்காலங்களில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இந்த சுனாமி பேரலையால் 5 நாட்களுக்கு பிறகே டோங்கோ நாடு வெளி உலக தொடர்புக்கு வந்தது. இந்நிலையில் நிலைகுலைந்துபோன டோங்கோ எரிமலை வெடிப்பு மற்றும் அதனைத்தொடர்ந்து உருவான சுனாமியில் சிக்கிய 57 வயது முதியவர் ஒருவர் 27 மணி நேரமாக தொடர்ந்து கடலில் போராடி நீந்தி உயிர்பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

இந்த சுனாமி பேரலையில் 57 வயது மாற்றுத்திறனாளி முதியவர் லிஷாலா ஃபெலாவு அடித்துச் செல்லப்பட்டார். சுமார் ஒன்பது முறை கடல் நீரில் மூழ்கிய போதும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல் தொடர்ந்து நீந்திய மாற்றுத்திறனாளி முதியவர், தொடர்ந்து 27 மணி நேரம் போராடிக் கரை சேர்ந்ததாகத்  தெரிவித்துள்ளார்.