Skip to main content

கர்னல் பென்னிகுவிக் கல்லரையை அவமதித்து சர்ச்சையை ஏற்படுத்திய ஓ.பி.எஸ்சின் மகன்!

Published on 21/06/2018 | Edited on 21/06/2018
ops son


தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையை கர்னல் பென்னிகுவிக் கட்டியதின் மூலம் தேனி மாவட்டம் மற்றும் மதுரை, சிவகங்கை, ராமநாதபும், திண்டுக்கல் என ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விவசாயத்திற்கும் பெரிதும் பயன்பட்டு வருகிறது. இப்படி ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழி வகுத்து கொடுத்த கர்னல் பென்னிகுவிக்கை அப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடவுளாக நினைத்து அவரது பிறந்த நாள் அன்று லோயர் கேம்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பொங்கள் வைத்து வழிபாடு செய்வார்கள்.

அதுபோல் நகரம் முதல் பட்டிதொட்டி அங்கங்கே பென்னிகுவிக்கின் பெயரில் விளையாட்டு போட்டிகளையும் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பென்னிகுவிக் பெயரில் பரிசுகளை கொடுத்து பாராட்டி வருவதும் வழக்கம். அதுபோல் தேனி மாவட்டத்தில் உள்ள நகரம் முதல் குக்கிராமங்கள் வரை உள்ள வியாபார ஸ்தலங்களிலும் தங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பென்னிகுவிக் பெயர் வைத்து இருக்கிறார்கள். இப்படி தங்கள் முன்னோர்களையும் தங்களையும் வாழவைத்த கர்னல் பென்னிகுவிக் மறைந்தாலும் கூட அவரை இன்று வரை தேனி உள்பட ஐந்து மாவட்ட மக்களும் தெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

 

 

இப்படி மக்கள் மனதில் தெய்வமாக இருந்து வரும் பென்னிகுவிக்கின் கல்லறை லண்டனில் உள்ள சென்ஜோசப் தேவாலயத்தில் உள்ளது. இந்த நிலையில் தான் சமீபத்தில் அரசியலில் குதித்த நமது துணை முதல்வர் ஒபிஎஸ் மகனான ரவீந்திரநாத்துக்கு மாவட்ட ஜெ பேரவை செயலாளர் பதவியையும் ஒபிஎஸ் வழங்கினார். இதையடுத்து ரவீந்திரநாத் திடீரென மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் மனதில் தெய்வமாக இருக்க கூடிய பென்னிகுவிக்கின் கல்லறைக்கு போய் ஆசி வாங்குவற்காக லண்டன் சென்று அங்குள்ள செயின் ஜோசப் தேவாலயத்திற்கு சென்ற ரவீந்திரநாத்துக்கு அங்கு இருந்த பென்னிகுயிக்கின் உறவினர்களும் வரவேற்பு கொடுத்தனர்.

அதன் பின் அந்த தேவாலய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு இருந்த பென்னிகுவிக்கின் கல்லறைக்கு சென்ற ரவீந்திரநாத் தான் அணிந்திருந்த சூவை கலட்டாமலையே பென்னிக்குக்கின் கல்லறை மேலையே நின்று பென்னிகுவிக்கு மரியாதை செலுத்துவது போல் மலர் கொத்துகளை வைத்து வணங்கினார். அதன் பின் தேவலாய நிர்வாகிகளுடன் கல்லறை அருகே நின்று புகைபடங்களையும் எடுத்து கொண்டார். இப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக் மூலம் அனுப்பியுள்ளார். இதை கண்ட தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மக்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர். துணை முதல்வரான ஒபிஎஸ்சிடம் இருக்க கூடிய மரியாதையில் துளி அளவு கூட அவரது மகனுக்கு இல்லை இப்படியா பென்னிகுவிக்கின் கல்லறை மேல் நின்று போட்டாவுக்கு போஸ் கொடுத்து நாங்கள் குலதெய்வமாக வணங்க கூடிய கர்னல் பென்னிகுக்கயே அசிங்கப் படுத்தி இருக்கிறார் என்ற பேச்சு அங்கங்கே உள்ள மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டும் வருகிறது.

இதுபற்றி கம்பத்தை சேர்ந்த கர்னல் பென்னிகுவிக் அமைப்பை சேர்ந்த சிலரிடம் கேட்ட போது..
  ops son


கடந்த 2011ல் கேரளா அடாவடியை கண்டித்து முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்காக தேனி மாவட்டத்தில் உள்ள ஒட்டு மொத்த மக்களும் கொதித்து எழுந்து ஒரு மாதம் போராட்டம் நடத்திய போது ஒபிஎஸ் கண்டு கொள்ளாமல் கடைசியில் கேரள குமுளியை மக்கள் முற்றுகையிட போகிறார்கள் என்ற விஷயம் தெரியவும் தான் ஒபிஎஸ் ஓடி வந்து பேச்சு வார்த்தை நபத்தினார். அதனால் டென்ஷனான மக்கள் ஒபிஎஸ் மேல் செருப்பை வீசினார்கள். அதிலிருந்தே ஒபிஎஸ் முல்லைபெரியாறு பிரச்சனையை கண்டு கொள்வதில்லை.

கர்னல் பென்னிகுவிக் சிலைக்கும் மாலை மரியாதை செய்யமாட்டார். இது அனைவருக்கும் தெரியும். அதுபோலதான் மரியாதையின்னா என்னனானு தெரியாமல் தற்பொழுது அரசியலில் உலாவிவரும் மகன் ரவீந்திரநாத் பென்னிகுயிக்கு மரியாதை செய்கிறேன் என்று அவர் கல்லறை மேல் நின்று பென்னிகுவிக்கயே அவமானப்படுத்தி விட்டார். இப்படி சின்ன பிள்ளை தனமாக இருக்க கூடிய ஒபிஎஸ் மகனை எல்லாம் எப்படி அரசியல் வாதினு ஏற்றுக்கொள்ள முடியும். அதிலையும் வரக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் தனது மகனான ரவீந்திரநாத்தை தான் ஒபிஎஸ் தேர்தல் களத்தில் நிறுத்த போவதாக பேச்சு அடிபட்டு வருகிறது. ஆனால் இப்பவே பென்னிகுயிக் கல்லறை விஷயத்தில் மக்கள் மத்தியில் ஒரு கெட்டபெயரை ஏற்படுத்தி விட்டார் என்று கூறினார்கள். ஆக பென்னிகுயிக்கின் கல்லறை சர்ச்சை மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.