Skip to main content

7 இடங்களில் கரை உடையும் அபாயம்...எழுச்சி போராட்டம் நடத்துவோம்-விவசாய சங்க செயலாளர் துரைமாணிக்கம்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018

 

kadaimadai

 

 

 

கடைமடை பாசனப் பகுதிகளுக்கு இதே போல தண்ணீர் குறைத்தே அனுப்பினால் ஒரு போகம் சாகுபடி கூட செய்ய முடியாத நிலை ஏற்படும். போர்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, கிளை வாய்க்கால்களை மராமத்து செய்து தண்ணீரை அனுப்பவில்லை என்றால் விவசாகளை திரட்டி எழுச்சி போராட்டம் நடத்தப்படும் என்று மேற்பனைக்காட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் துரைமாணிக்கம் பேட்டி அளித்தார்.

 

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. அதனால் மேட்டூர் அணை நிரம்பி அதிக அளவில் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் பல கரையோர கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு வழக்கம் போல தண்ணீர் வரவில்லை என்று விவசாயிகள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். 

 

 

 

இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் துரைமாணிக்கம் தலைமையிலான குழுவினர் ஆற்றுக்கரை வழியாக ஆய்வுகள் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக் கிழமை புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்லனை கால்வாய் கடைமடைப் பாசன பகுதிகளாக மேற்பனைக்காடு, வல்லவாரி, நாகுடி வரை பார்வையிட்டு ஆய்வு செய்தனர் இந்தக்குழுவினர். இந்த குழுவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும் இந்திய விவசாயிகள் சங்க உறுப்பினருமான மாதவன், திருரங்குளம் ஒன்றியச் செயலாளர் சொர்ணகுமார், அறந்தாங்கி ஒன்றியச் செயலாளர் ராசேந்திரன் மற்றும் பலர் சென்றனர்.

 

மேற்பனைக்காடு கல்லனை கால்வாயை ஆய்வு செய்த பிறகு துரைமாணிக்கம் செய்தியாளர்களிடம் பேசும் போது.. ஜூலை 19 ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடைமடைப் பாசனப்பகுதிகளுக்கு சில முறை தண்ணீர் வந்ததுடன் நிறுத்தப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்தி 100 கனஅடி தண்ணீர் திறக்கப்பட வேண்டும். ஆனால் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுவதால் கடைமடைக்கு தண்ணீர் வராமல் அதிகமாக வரும் தண்ணீர் கடலில் கலக்கிறது. செங்கிப்பட்டிக்கு வடக்கே 7, 8 இடங்களில் கரை பலவீனமாக உள்ளதால் உடைப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அரசும் அதிகாரிகளும் விவசாயிகள் பிரச்சணையில் கவணம் செலுத்தவில்லை. 

 

அரசு போர்கால அடிப்படையில் செயல்பட்டு ஆறுகள் மற்றும் துணை வாய்க்கால்களை இயந்திரம் உதவியுடனாவது மராமத்து செய்ய வேண்டும். அதாவது கல்லனை கால்வாய் கோட்டம் மராமத்துக்காக ரூ. 2.78 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த இடத்திலும் எந்த பணியும் நடக்கவில்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர். அதனால் தான் இப்போது முழு கொள்ளளவு தண்ணீர் செல்ல முடியாமல் உடைப்பு ஏற்படுகிறது. மேலும் நிலத்தடி நீர்மட்டமும் 400 அடிக்கு கீழே சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் ஒரு போகம் சாகுபடி கூட செய்யமுடியாத நிலை ஏற்படும். 

 

 

 

தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மராமத்துப் பணிகளை மேற்கொண்டு கரைகளை பலப்படுத்துவதுடன் ஆறுகளை தூர்வாரி முழு கொள்ளளவில் தண்ணீரை திறக்க வேண்டும். தண்ணீர் பற்றாக்குறையாக திறந்து அந்த தண்ணீரும் வீணாகும் நிலையில் விவசாயிகளை இணைத்து எழுச்சி போராட்டம் நடத்துவோம். மேலும் மேட்டூரில் தூர்வாரததால் ஒரு லட்சம் கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு தண்ணீர் இருந்தும் கூட கடைமடைக்கு முறை தண்ணீர் விடப்படுகிறது. அதனால் பாசன குளங்கள், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“மழை வெள்ளத்தினால் சேதமடைந்த வீட்டின் உரிமையாளர்களின் கவனத்திற்கு” - முதல்வர் முக்கிய உத்தரவு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
Attention of owners of houses damaged by rain and flood 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெரும் புயல், மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர்ப்புற பகுதிகளில் உள்ள மக்களின் சேதமடைந்த வீடுகளைப் பழுது நீக்கம் மற்றும் கட்டுமானத்திற்காக நிவாரணம் வழங்குதல் தொடர்பாகத் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முதன்மைச் செயலாளர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாகச் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.

இவ்வாறு மழை வெள்ளத்தினால் பகுதியாகச் சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்ப்பதற்கு ரூ. 2 இலட்சம் வரையும் முழுமையாகச் சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ. 4 இலட்சம் வரையும் நிவாரணமாக வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளிலுள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் பகுதியாக மற்றும் முழுமையாகச் சேதமடைந்த 955 வீடுகளுக்குப் பழுது நீக்கம் செய்யவும் மற்றும் புதிய கட்டுமானத்திற்கும் ரூபாய் 24.22 கோடியும், பேரூராட்சி பகுதிகளில் உள்ள 577 சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 21.62 கோடியும் ஆக மொத்தம் ரூ. 45.84 கோடி வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

''அதெல்லாம் சரி... ''- எதிர்பார்த்து ஏமாந்த தூத்துக்குடி

Published on 28/02/2024 | Edited on 28/02/2024
Modi did not open his mouth about it; Tuticorin is a disappointment

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்திருக்கும் பிரதமர் மோடி நேற்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், இன்று இரண்டாவது நாளாக தூத்துக்குடியில், நடைபெற்ற திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு  நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கப்பல் சேவையை தொடங்கி வைத்தார். அதேபோல் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவு தளத்திற்கு அடிக்கல் நாட்டினார். ரூபாய் 4,586 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு சாலை திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, 'இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.  தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது. முன்னேற்றம் அடைந்த இந்திய வரைபடத்தின் எடுத்துக்காட்டு தான் இந்த நிகழ்ச்சி. மத்திய அரசின் துறைமுகம் சார்ந்த திட்ட முதலீடுகளால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோரிக்கைகளாக மட்டுமே இருந்த திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று தொடங்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் படகு சேவை காசியில் கங்கை நதியிலும் பயணிக்க இருக்கிறது. தூத்துக்குடியில் வ.உ.சி துறைமுகம் விரிவுபடுத்தப்படும் என்ற எனது வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. ரயில் மற்றும் சாலை பணிகளையும் இன்று தொடங்கி வைத்துள்ளது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனது சாதனைகளை வெளியிட விடாமல் தொலைக்காட்சிகளை தமிழக அரசு தடுக்கிறது. எவ்வளவு தடைகள் வந்தாலும் எதிர் கொண்டு தமிழக வளர்ச்சிக்கு பாடுபடுவேன். மத்திய அரசால் தமிழகத்திற்கு ஏராளமான திட்டங்கள் கொடுக்கப்படுகின்றன' என்றார்.

அண்மையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள பேரிடர் காரணமாக மக்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தமிழக அரசு இதற்கான நிவாரணத்தை அறிவித்திருந்த போதிலும் மத்திய அரசிடமும் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்து, அதற்கான நிவாரண பணிகளுக்கு நிதி வழங்கிட வேண்டும் என்று பல்வேறு வகைகளில் கோரிக்கை வைத்திருந்தது.

ஒரு கட்டத்தில் கோரிக்கையானது மோதலாக உருவெடுக்கும் வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் தேதிக்காக அனைத்து கட்சிகளும் காத்திருக்கும் சூழலில் தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, தேர்தல் கவனத்திற்காவது மத்திய அரசு சார்பில் வெள்ள நிவாரணம் குறித்து அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது குறித்து எந்த அறிவிப்பும் பிரதமரின் பேச்சில் இடம் பெறாதது தூத்துக்குடி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்றொரு மாவட்டமான நெல்லைக்கு தற்போது சென்றுள்ள மோடி, அங்கு உரையாற்றி வரும் நிலையில் 'அதெல்லாம் சரிதான்.. அங்காவது வெள்ள நிவாரணம் குறித்து வாய் திறப்பாரா?' என எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.