Skip to main content

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியவர் முன்ஜாமீன் தள்ளுபடி!

Published on 26/05/2020 | Edited on 26/05/2020
incident in auditor gurumoorthy house... highcourt

 

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கேட்டு சென்னை மயிலாப்பூரை சேர்ந்த திலீபன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


இந்த மனுவை நீதிபதி வேலுமணி விசாரித்தார்.  அப்போது போலீஸ் தரப்பில்,  கூடுதல் பப்ளிக் பிராசிக்யூட்டர் ஜோதிகுமார் ஆஜராகி,  மனுதாரர் சதியில் ஈடுபட்டார் என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.  புலன் விசாரணை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.  எனவே,  முன்ஜாமீன் தரக்கூடாது என்று கூறினார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி,  இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேருக்கும்  ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே  இவருக்கும் முன்ஜாமீன் தரவேண்டும் என வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வேலுமணி, அந்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.  மனுதாரர்,  முன்ஜாமீனை வாபஸ் பெறுகிறேன் என்று கூறியதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். 
 

சார்ந்த செய்திகள்