Skip to main content

தமிழகமெங்கும் கனமழை; கொத்துக் கொத்தாய் மடியும் கால்நடைகள்

Published on 13/11/2022 | Edited on 13/11/2022

 

Heavy rains all over Tamil Nadu; Herds of livestocks

 

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

பெரு நகரங்களில் கனமழையின் காரணமாகத் தண்ணீர் தேங்காமல் மழைநீர் வடிகால்களைச் சீரமைக்கும் பணிகள் ஒரு புறம் தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

 

அந்த வகையில் இன்று சென்னை கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மழை பெய்யும் பொழுது மழைநீர் தேங்குவது இயல்பு. மழை நின்றவுடன் தண்ணீர் வடிந்துவிடும். அடுத்தடுத்து கனமழை வரும் எனச் சொல்லுகிறார்கள். அதை எதிர்பார்த்துத்தான் பணிகளைச் செய்து வருகிறோம். எந்த ஆபத்தும் நேராது. அனைத்துப் பணிகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இன்று இரவு சீர்காழி, மயிலாடுதுறை ,கடலூர் போன்ற இடங்களில் ஆய்வு செய்ய இருக்கிறேன்” எனக் கூறினார்

 

அதே வேளையில் மழையின் பாதிப்பால் நேற்று (12.11.22) மட்டும் 83 கால்நடைகளின் இறப்புகள் பதிவாகியுள்ளன. அன்று ஒருநாள் மட்டும் தமிழகம் முழுவதும் 538 வீடுகள் சேதமடைந்துள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் 25 வீடுகள் சேதமடைந்ததுள்ளது. இது மட்டுமல்லாமல் 8 மாடுகள் உள்ளிட்ட 10 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 9 மாவட்டங்களில் மழை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Rain in 9 districts in Tamil Nadu by 10 am

 

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது.

 

கேரள கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

நீலகிரி, ஈரோடு, கோவை, தேனி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

கனமழை காரணமாக விருதுநகர், தேனி என இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விருதுநகரில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Next Story

கனமழை எதிரொலி; 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

Heavy rain echoes; Holidays for schools in 2 districts

 

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம்  தெரிவித்திருந்தது.

 

கேரள கடலோரப் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் இதன் காரணமாக இன்று முதல் டிசம்பர் 2 ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில், கனமழை காரணமாக மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

கனமழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி அறிவித்துள்ளார். அதேபோல், தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் முரளீதரன் அறிவித்துள்ளார்.