Skip to main content

தினகரன் ஒரு விஷ பாம்பு…அதை அடிக்க கம்பு வேண்டும் ”அந்த கம்புதான் நான்”-திவாகரன் ஆவேசம்

Published on 28/10/2018 | Edited on 28/10/2018

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக மூன்றாக உடைந்தாலும் தற்போது எடப்பாடி,பன்னீர் என சேர்ந்து இருந்தாலும் சசிகலா குடும்பத்திலிருந்து மட்டும் ஆளாளுக்கு தினகரன், பாஸ்கரன், மற்றும் திவாகரன், என கட்சி ஆரம்பித்து திரைமறைவில் இருந்தவர்கள் வெளியே வருவது ஏன்? உண்மையில் மக்கள் மீது என்ன அக்கறை?  தினகரன் கட்சி ஆரம்பிக்கும் போது கூட இருந்த திவாகரன் திடீரென அவரை எதிர்ப்பது ஏன்? அவர்களுக்குள் அப்படி என்னதான் பிரச்சனை? இப்படி ஆயிரம் டாலர் கேள்விகள் அனைத்து மக்கள் மத்தியில் இருக்க …

 

மதுரைக்கு மருது பாண்டியர் குரு பூசைக்கு மரியாதை செலுத்த தனது மகன் ஜெய்யானந்த்”துடன் வர நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் மதுரை பாண்டியன் ஹோட்டலில் ஆலோசனையில் இருந்த சசிகலாவின் தம்பி திவாகரனை சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்…

 

thivagaran

 

என்னதான் பிரச்சனை தினகரனோடு?

 

அதிமுக வில் உள்ளவர்கள் விஷப்பாம்பை போன்று படம் எடுக்கும் ”தண்ணிப்பாம்பு” அது தன்னை காப்பாற்றி கொள்ள பயமுறுத்துகிறது. ஆனா இவர் அப்படி இல்லை ”உண்மையிலேயே முழு சுயநலத்தோடு உள்ள விஷ பாம்பு படம் எடுத்து ஆடுகிறது அதை அடிக்க கம்பு வேணும் அந்த கம்புதான் நான்…”தினகரனோடு முதலில் சிறு சிறு பிரச்சனை இருந்தாலும் அக்கா சொன்னதற்காக சேர்ந்து பணியாற்றினேன் கட்சியில் என் ஆதரவாளர்களை உதாசினபடுத்த தொடங்கியவர் என்னையும் தவிர்க்க நினைத்தார். அதை ஒரு கட்டத்தில் அதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. யாருக்கும் இடைஞ்சலாக இருக்க விரும்பவில்லை அக்கா தினகரனிடம் கட்சியை கொடுக்கும் போது 136 எம்.எல்.ஏ வும் இரட்டை இலை என முழு கட்சியாக கொடுத்துவிட்டு போனார் அது இப்ப என்னவா இருக்கு எல்லாமே எங்கள் கையைவிட்டு போய்விட்டது. இதுக்கு காரணம் என்ன ”அக்கா எடுத்த தவறான முடிவு இந்த தினகரன்”அதை முன்பிருந்தே அக்காவிடம் சொன்னேன் அவர் கேட்கவில்லை அதற்கு எல்லோரும் சேர்ந்து அனுவிக்கிறோம்..

 

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்ற தீர்ப்புபற்றி உங்கள் கருத்து?

 

அது எடப்பாடிக்கும் தினகரனுக்கும் விரைவில் ஊதபோகும் சங்கு இப்போதைக்கு சந்தோச பட்டுக்கலாம் முடிவு வேறு மாதிரிதான் இருக்கும்

 

வருகிற இடைத்தேர்தல் 20 சட்டமன்றத்திற்கும் சேர்த்து வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

 

கட்டாயம் அதிமுக வெற்றி பிறாது தினகரனாலும் முடியாது ஏன்னா தினகரனை நங்கள் பார்த்து கொள்வோம்… ”கட்டாயம் திமுக வெற்றி பெறும்..”

 

உங்களை பாஜகதான் இயக்குகிறது தினகரனின் செல்வாக்கை குறைக்க என்கிறார்களே?

 

நான் பாஜக பின்னால் போனால் அது தற்கொலைக்கு சமம் அதை காட்டிலும் முட்டாள்தனம் கிடையாது. ஏன்னா தமிழகத்தில் மக்களிடம் பாஜக எதிர்ப்பு ஓட்டம் அதிகம் இருக்கிறது. அது நல்லா தெரிகிறது அப்படி இருக்கும்போது நான் எப்படி போவேன்…. இது தினகரனால் கிளப்பிவிடபடுகிறது…

 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு உங்க குடும்பத்தில் இருந்து பாஸ்கரன், தினகரன், இப்ப நீங்க தொடர்ச்சியாக அரசியல் கட்சி தொடங்குவதன் நோக்கம் அதன் அவசியம் என்ன?

 

மற்றவர்களை பற்றி தெரியாது, இவ்வளவு காலம் கட்சி வளர்ச்சிக்காக மறைமுகமாக செயலாற்றினேன் ஆளும் எடப்பாடி அரசும் ”வடபோச்சே என்று இருக்கும் தினகரனும் சரி எல்லோரும் இந்த கட்சியை வைத்து அவர்களின் வளர்ச்சியை முன்னிறுத்தியே செயல்படுகிறார்கள். ஒரு நாள் அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களையும் ”நிர்கதியாக நிர்க்கவைத்துவிட்டு போய்விடுவார்கள் இது நடக்கும்” அப்பதான் என் வேலையை தொடங்குவேன்..அதற்குதான் இந்த கட்சி…

 

அதிமுகவில் யார் தலைவராக வரனும் இல்ல யார் வந்தா ஏற்றுகொள்வீர்கள்?

 

அதுதானே பிரச்சனை ஜெயலலிதா தனக்கு அடுத்த தலைவரை உருவாக்காமல் போனதுதான் ஆளாளுக்கு தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரனாக இருக்கார்கள். அம்மா மறைந்தப்பவே இவர்கள் என்ன செய்திருக்கணும் என்றால் கழகத்தின் பொதுசெயலாலரை மொத்த உறுப்பினர்களும் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்திருக்கவேண்டும் அதுதான் அதிமுகவின் பை-லா. அத செய்யாமல் விட்டுவிட்டார்கள். எனக்கு தெரிந்து இப்ப இருக்கிற தலைவர்களில் யாருமே தேறுகிற மாதிரி தெரியவில்லை

 

சசிகலா வெளியே வந்தால் ஏற்றுகொள்வீர்களா?

 

அக்கா கட்சிக்கு பொதுவானவர்களாக இருந்தால் சரி ஆனா அவர் அப்படி இல்லையே 

 

அதிமுகவிற்கு எதிர்காலம் இருக்கா?

 

இப்ப ஆளுகிற அதிமுக ஆட்சி அதை நினைத்தா ஆளுகிறது என்று நினைக்கிறீர்கள் கொள்ளை, லஞ்சம், பாஜகவிற்கு அடிமைத்தனம் செய்து எப்படியாவது இந்த மே வரை ஆட்சியில் இருந்து எல்லாத்தையும் சுருட்டிகிட்டு போயிடனும். அது போதும் ஏழு தலைமுறைக்கு நமக்கு கிடைத்த ஜாக்பாட் என்றுதானே நினைத்து மக்களிடம் அதிகமான அதிருப்த்தியை கடந்த 50 வருடத்தில் இல்லாத எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்தாலும் இன்னும் ஏழுதலைமுறைக்கு தமிழகத்தில் ஜெயிக்கவே முடியாது அந்தளவுக்கு கெட்டபெயரை சம்பாதித்து வைத்திருக்கிறார்கள்..

 

அமைச்சர் ஜெயக்குமார்…………….?

 

அது அசிங்கத்தின் உச்சம்…என்னத்த சொல்ல…

 

நடிகர்கள் அரசியலுக்கு வருவது பற்றி?

 

எம்.ஜி.ஆருக்கு பிறகு தமிழகம் யாரையும் ஏற்றுகொள்ளாது ..

சார்ந்த செய்திகள்

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.