Skip to main content

"30 லட்ச ரூபாய் கார் வேணாம், மாட்டு வண்டிதான் வேணும்!" - மாஸ்டர் டிகிரி முடித்த மணமக்களின் 'மாட்டுவண்டி' பயணம்...!

Published on 27/11/2020 | Edited on 27/11/2020

 

 Cow cart ride of educated brides ...!

 

வசதி படைத்தவர்களின் இல்லத் திருமணம் என்றாலே ஆடம்பரமாய், விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு வாகனம் மேலும் பல வகை உணவு வகைகள் எனப் பல லட்சக்கணக்கில் செலவு செய்துதான் பெரும்பாலான திருமணங்களை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் கூட வீடுகளில் திருமணம் நடைபெற்று பல ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இப்போது கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல திருமணங்கள், வீடுகளில் நடைபெற்று வருகிறது. அதிலும் திருமணம் என்றால் ஆடம்பரம் மட்டுமல்ல 'ஃபோட்டோ சூட்' என்ற பெயரில் நடிகர் நடிகை போல மணமக்களை போஸ் கொடுக்க வைப்பது, மணமேடையில் குத்தாட்டம் போடுவது என புதுமை என்ற பெயரில் மாற்றிவிட்டனர். 

 

 Cow cart ride of educated brides ...!

 

நாகரீகம் என்ற முறையில், பல புதுமைகளைக் கொண்டு வந்து திருமணச் சடங்கு என்ற பழமையை வேரோடு அழிந்துவரும் இந்தக் காலகட்டத்தில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் 27 -ஆம் தேதி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மணமகன் கௌதமன், மணமகள் சௌந்தர்யா ஆகியோர் திருமணத்தில் பழமையை நினைவு கூறும் விதமாகவும், பாரம்பரித்தை மீட்டெக்கும் முயற்சியாகவும், திருமண மண்டபத்திலிருந்து மணமகன் வீடு உள்ள வெள்ளாளபாளையம் என்ற கிராம் வரை, சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டனர்.

 

விவசாயக் குடும்பங்களிலிருந்து வரும் புதுமணத் தம்பதிகள் மாட்டு வண்டிப்பயணம் மேற்கொள்வது வழக்கமானது என்றாலும், இந்த மணமக்கள் இருவரும் முதுகலை பட்டயப்படிப்பு முடித்து நகரப் பகுதியில் வேலை பார்த்து நாகரீகத்துடன் வாழ்ந்துவருபவர்கள். அந்தக் காலத்தில் இவர்களது பெற்றோர்கள், திருமணத்தின் போது மாட்டு வண்டியை மட்டுமே போக்குவரத்திற்குப் பயன்படுத்தி வந்ததை அறிந்து, அவர்களது பிள்ளைகளான மணமக்களும் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொண்டு, பழைமையை வெளிப்படுத்தி சிறப்பு சேர்த்தனர். மணமக்கள் மாட்டு வண்டியில் வருவதை வழியில் உள்ள கிராம மக்களும், நகர்ப் பகுதி மக்களும் வியப்புடன் பார்த்ததுடன், ஒரு சிலர் மணமக்கள் மாட்டுவண்டியை நிறுத்தி அவர்களோடு செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

 

 Cow cart ride of educated brides ...!

 

மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்ட தம்பதிகள் இதுகுறித்து கூறுகையில் "எங்களது இரு குடும்பங்களும் விவசாயம் சார்ந்த குடும்பங்கள் என்பதால், வரும் தலைமுறையினருக்கு பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் நினைவு கூறவேண்டும் என்ற  எண்ணத்திலும் நல்ல நோக்கம் கொண்ட சமுதாயத்தை உருவாக்கவும் இந்த மாட்டு வண்டிப்பயணம் மேற்கொண்டோம். எங்களின் திருமணத்தில் புது அனுபவம் ஏற்பட்டதை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது" என மகிழ்ச்சியுடன் கூறினார்கள்.

 

இந்தத் திருணமத்தில் மணமகனுக்குப் பெண் வீட்டார் சீதனமாக ரூபாய் 30 லட்சம் மதிப்பில் புதிய சொகுசு கார் வழங்கியிருந்த நிலையிலும் மணமகள் மாட்டு வண்டியில் பயணம் மேற்கொள்ளவே விரும்பம் தெரிவித்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.