Published on 08/08/2022 | Edited on 08/08/2022

டி.என்.பி.எஸ்.சி மூலம் தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைக்கான இளநிலை வரைதொழில் அலுவலர் பதவிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் சிறந்த நெசவாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.