Skip to main content

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த பொதுமக்கள்....(படங்கள்)

Published on 30/03/2020 | Edited on 30/03/2020

நேற்று (29/03/2020) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன்களை வாங்குவதற்கு சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பொது மக்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை மறந்து மீன்களை வாங்குவதற்கு மக்கள் அலை மோதின. 

இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று பொதுமக்களிடம் அரசு அறிவித்த நேரம் நிறைவடைந்ததால் கலைந்து செல்லுமாறு கூறினர். இருப்பினும் அங்கு அதிக மக்கள் திரண்டிருந்ததால் இடைவெளி விட்டு வரிசையில் நின்று மீன்களை வாங்கி செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியதன் பேரில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அளவு மீன்களை வாங்கி சென்றனர்.  ஒரே நேரத்தில் பொது மக்கள் கூடியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 
 

சார்ந்த செய்திகள்