Skip to main content

பொன்முடியின் ஃபார்முலாவை உடைத்தெறிவாரா கலிவரதன்..?  

Published on 30/03/2021 | Edited on 30/03/2021

 

Thirukovilur constituency dmk admk computation

 

2011 தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக சி.வி. சண்முகத்துடன் போட்டியிட்டு தோல்வி கண்டார் பொன்முடி. அதன் பிறகு 2016 சட்டமன்றத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதிக்கு மாறி களமிறங்கினார். இந்தத் தொகுதியில் வெற்றிபெற்று தற்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ளார் பொன்முடி. இந்த தொகுதியில்தான் அவரது பிறந்த ஊரான இடையார் என்ற கிராமம் உள்ளது.  

 

Thirukovilur constituency dmk admk computation

 

மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் கட்சித் தலைமையின் ஆதரவுடன் களம் காண்கிறார். இந்தமுறை இங்கு மும்முனைப் போட்டி என்று கூறப்படுகிறது. பொன்முடியை எதிர்த்து, அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. கட்சியின் மாவட்டத் தலைவராக உள்ள கலிவரதன் வேட்பாளராக களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். தினகரனின் அமமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசனும், நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன் என்பவரும் மோதுகின்றனர். 

 

Thirukovilur constituency dmk admk computation

 

இதில் கலிவரதன், 2006இல் முகையூர் தொகுதியாக இருந்தபோது எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர். தேமுதிக வெங்கடேசன், அதிமுக கூட்டணியில் 2011இல் திருக்கோவிலூர் தொகுதியாக மாறிய பிறகு வெற்றிபெற்றவர். இரண்டு முன்னாள் எம்.எல்.ஏ.க்களும் இன்னாள் எம்.எல்.ஏ.வான பொன்முடியுடன் மோதுகின்றனர். இதில், பொன்முடி மற்றும் வெங்கடேசன் இருவரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கலிவரதன் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர். தொகுதியில் வன்னியர்கள் அதிக அளவில் உள்ளனர். அடுத்து தலித் மக்கள். அடுத்து உடையார், யாதவர்கள், நாயுடு  மக்கள் பரவலாக உள்ள தொகுதி. பாமக, அதிமுக கூட்டணியில் இருப்பது பிஜேபி கவிவரதனுக்கு கூடுதல் பலம். அதே நேரத்தில் இவர் ஏற்கனவே பாமக எம்.எல்.ஏ.வாக இங்கு வெற்றிபெற்று பதவிக்காலம் முடிந்த பிறகு, திமுக, அதன் பிறகு விவசாயிகள் சங்கம், தற்போது பிஜேபி என கட்சி மாறி சென்றவர். அதனால் பாமக ஒத்துழைப்பு என்பது எந்த அளவுக்கு இருக்கும் என்பதைக் கூறமுடியவில்லை. இருந்தும் அதிமுக, பாமக கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக பிஜேபி கட்சி தலைமையிலிருந்து தொகுதிக்குள் ஆறு பேர் கொண்ட குழுவினர் களமிறக்கப்பட்டு, அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து பரபரப்பாக தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளனர். 

 

தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட்டிருந்தால் இந்த தொகுதியில் தற்போதைய தேமுதிக வேட்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ.வாக வெற்றிபெறுவது உறுதி. அந்த அளவுக்கு தொகுதியில் தனித்த செல்வாக்கை வளர்த்து வைத்துள்ளார் வெங்கடேசன் என அத்தொகுதியினர் தெரிவிக்கின்றனர். மேலும், இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த மும்முனைப் போட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முருகன் என்பவரும் களத்தில் உள்ளார். இருந்தும் திமுக பொன்முடி, பிஜேபி கலிவரதன், தேமுதிக வெங்கடேசன் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. 

 

இறுதிகட்டத்தில் திமுக பொன்முடி எந்தெந்த பகுதிகளில் வாக்காளர்களைக் கவர முடியுமோ, அதற்கான பணிகளை தன் குடும்பத்தினர் மூலம் பக்காவாக செய்வதற்கு தகுந்த ஏற்பாடு செய்து வைத்துள்ளார். எனவே பொன்முடியின் ஃபார்முலாவை உடைத்தெறிய கலிவரதன், வெங்கடேசன் ஆகியோர் முனைப்பு காட்டிவருகின்றனர். தங்களது தேர்தல் பணிகள் மூலம் ஒருவரை ஒருவர் முந்திச் செல்வதில் வேகம் எடுத்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்