Skip to main content

வாகன தயாரிப்புத் துறையில் பிரகாசிக்கும் பெண்கள்! 

Published on 24/07/2022 | Edited on 24/07/2022

 

Women shining in the automotive industry!

 

ஆண்களின் கோட்டையாக இருந்த வாகன தயாரிப்புத் துறையில் தற்போது பெண்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆறு ஆலைகளில் கடினமான கார்கள் உற்பத்திப் பிரிவில் சுமார் 3,000 பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் தற்போது 34% பேர் பெண் ஊழியர்களாக இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டிற்குள் 50% ஆக அதிகரிக்கவிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

 

ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனத்தில் 1,500 பெண்கள் பணியாற்றி வரும் நிலையில், வருங்காலத்தில் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒரு உற்பத்தி பிரிவு முழுவதுமே பெண்கள் மட்டுமே பணியாற்றுவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 

 

வாகனத்துறையில் பாலின சமநிலையை மேம்படுத்துவது நிச்சயமாக சிறந்த முடிவுகளை எடுக்கவும், புதுமையாக யோசனைகளை புகுத்தவும் வழிவகுக்கும் என்று டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரவீந்திர குமார் கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

உழைக்கும் பெண்களுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த ஆரி

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
aari arjunan gift to 10 working womens

நடிகர் ஆரி அர்ஜுனன் திரைப்படங்களை தவிர்த்து ‘மாறுவோம் மாற்றுவோம்’ என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அந்த வகையில் தன்னுடைய தாயின் நினைவாக உழைக்கும் பெண்களுக்கு தங்க நாணயம் கொடுத்து மகிழ்ந்துள்ளார். 10 பெண்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுல்ள அவர், “ஒவ்வொரு மகளிர் தினம் வரும் போதெல்லாம் பெண்களை கொண்டாடுறோம். வாழ்த்து சொல்றோம். அதைத் தாண்டி என்ன செய்றோம் என்ற கேள்வி ஒவ்வொரு மார்ச் மாசம் வரும்போதும் எனக்குள்ளே இருந்திட்டே இருக்கும். அந்த வகையில் இந்த மார்ச் மாசம், இந்த சமூகத்திற்கு வேலை செய்யக்கூடிய பெண்களை நம்ம ஏதோ ஒரு வகையில் மரியாதை செய்யணும் என்ற நோக்கத்தில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் சார்பாக ஒரு சின்ன முயற்சி.

aari arjunan gift to 10 working womens

எங்க அம்மாவின் நினைவாக ஒவ்வொரு வருஷமும் தொடர திட்டமிட்டிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் சர்ப்ரைஸை நோக்கி தான் வாழ்க்கையே நடந்துக்கிட்டு இருக்கு. அந்த வகையில் பெண்களை கௌரவித்து சர்ப்ரைஸாக ஒரு கிஃப்ட் கொடுக்க வேண்டும் என்ற முயற்சி. உழைக்கும் பெண்களையும் சமூக மாற்றத்திற்காக உழைக்கக் கூடிய பெண்களின் வாழ்வை மாற்றும் முயற்சியாக எடுக்க இருக்கோம்” என்றார். பின்பு தூய்மைப் பணியாளர்கள் 3 பேர், பெட்ரோல் பங்கில் பணியாற்றும் 3 பேர், சாலையில் கூழ் கடை வைத்திருக்கும் 2 பேர் மற்றும் அவர் நடித்து வரும் ‘ரிலீஸ்’ படத்தின் படப்பிடிப்பில் பாத்திரம் கழுவும் 2  பேர் என மொத்தம் 10 பெண்களை நேரில் சந்தித்து தங்க நாணயம் பரிசாக வழங்கினார் ஆரி அர்ஜுனன்.