Skip to main content

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்த மத்திய அரசு

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
The central government released the tax distribution to the states

மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை விடுவித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் 28 மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதி மொத்தம் ரூ. 1,42,122 கோடியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாட்டுக்கு வரிப் பகிர்வாக ரூ. 5,797 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த வரிப்பகிர்வில் அதிகபட்சமாக பா.ஜ.க. ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு ரூ. 25,495 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும் பீகார் மாநிலத்திற்கு ரூ. 14,25 கோடி, மத்தியப் பிரதேசத்திற்கு ரூ. 11,157 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 10,692 கோடி, ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரூ. 8,564 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிப்பகிர்வு நிதி மூலம் மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும், வளர்ச்சிக்கான மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்