Skip to main content

காட்டுக்கு ராஜா சிங்கமா?

Published on 21/03/2018 | Edited on 22/03/2018

எப்படி காட்டுக்கு சிங்கம் மட்டும் ராஜாவாக இருக்க முடியும்? சிங்கம்தான் காட்டிற்கு ராஜா என்று  சொல்லியவர் கண்டிப்பாக ஒரு முரட்டு சோம்பேறியாகத்தான் இருக்க வேண்டும். ஆம், சிங்கத்தின் தோற்றம் வேண்டுமானாலும் பார்க்க தோரணையாக இருக்கலாம், ஆனால் தன் சாப்பாட்டை வேட்டையாடக் கூட பெண் சிங்கங்கள்தான் உதவுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? ஆனால் அந்த உணவை ஆண் சிங்கம் தான் முதலில் சாப்பிடுமாம். சரி, இதெல்லாம் ஒரு காரணமே இல்லை என்று வைத்துக்கொள்ளுவோம். காட்டின் ராஜா என்று சொல்லப்படும் சிங்கம் தமிழ்நாட்டில் எந்த காட்டில் வாழ்கிறது. வண்டலூரில் வேண்டுமானாலும் பார்க்கலாம் மற்றபடி இந்த பகுதிகளில் புலிகள் வாழ்வதுபோன்று  சிங்கங்கள்  வாழ்வது கிடையாது. அப்போது நம் பகுதிகளில் இருக்கும் காடுகளுக்கெல்லாம் யார் தலைவனாக இருப்பார்கள். 

 

amazon



காட்டின் வளர்ச்சிக்கு விலங்குகளின் பங்களிப்பு நிறைவே இருக்கிறது. தற்போதைய மாடர்ன் சூழலில், இயற்கை மாசடைந்து, புவி வெப்பமயமாகிவிட்டது. மேலும் காட்டில் இருந்துதான் மனிதனுக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது (ஆக்சிஜன் முதல் மூலிகை வரை). அமேசான் காடுகளில் எடுக்கப்படும் அரியவகை மூலிகை என்றும் வியாபாரம் செய்கிறார்கள் மனிதர்கள். அதேபோன்று மனிதனின் வாழ்வாதாரம் என்பது காட்டிலிருந்துதான் தொடர்ந்திருக்கிறது. அப்படிப்பட்ட காட்டுக்கு யார் முதல்வராக இருக்க முடியும். கண்டிப்பாக அதிக தொகையை கொண்டவராகவும், அந்த நிலப்பகுதியில் தனித்து வாழும் ஒரு வகை விலங்காகத்தான் இருக்க முடியும். சிங்கமே வாழமுடியாத காட்டிற்கு பின் வேறு ஒருவர் தான் ஆள முடியும். (தமிழ்நாட்டை எடுத்துக்கொள்ளுங்கள்). யார், யார் அவங்க காட்டுல வெயிட்டு, கெத்துனு பார்ப்போம். 

 

sundarban tiger



இந்தியாவில் பல காடுகள் இருக்கின்றன. இந்திய நிலப்பரப்பின் 35 சதவீத நிலப்பரப்பை காடுகள்தான் சூழ்ந்துள்ளன. இந்தியாவில் வெயிட் கை என்று சொல்லப்படும், வங்காள புலிகள் வாழ்வது சுந்தரவன சதுப்புநில காடுகளில்தான். ஆங்கிலத்தில்கூட இந்த வங்காள புலிகளின் பெயர்களுக்கு முன் ராயல் என்று சேர்க்கப்படுகிறது. அப்படி ஒரு கெத்து இவருக்கு, இந்திய நாட்டின் தேசிய விலங்காக இருக்கும் புலிகளினத்தின் எண்ணிக்கையோ குறைவுதான். அதிலும் சுந்தரவன காட்டில் வாழும் இந்த புலிகள் எண்பதுக்கும் குறைவுதான். உலகிலேயே மிகப்பெரிய சதுப்புநில காடு சுந்தரவன சதுப்புநில காடுதான். இந்தியாவின் பெரிய டெல்டாவாகவும் இது திகழ்கிறது. சுந்தரவன காடுகளில் உள்ள ஒரு கிராமத்தின் பெயர் விதவை கிராமம், அதற்கு முழுக்க, முழுக்க வங்காள புலிகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. அந்தளவிற்கு சேதாரத்தை ஏற்படுத்தியள்ளன இந்த புலிகள்.

 

gir forest



கிர் காடு இதுவும் இந்திய நாட்டில் தான் உள்ளது. இங்கு  யார் ராஜாவாக இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள். சிங்கம்தான் காட்டின் ராஜா என்ற பழமொழி இங்குதான் பலிக்கிறது. இந்த காட்டில்தான் ஆசிய சிங்கங்கள் வாழ்கிறது. ஆசிய கண்டத்திலேயே இந்த காட்டில்தான் சிங்கம் இருக்கிறது. மற்ற அனைத்தும் ஆப்ரிக்க கண்டத்தில் தான் உள்ளன. இந்த கிர் காடு குஜராத் மாநிலத்தில் உள்ளது. ஆப்ரிக்க சிங்கங்களைப் போல் பார்க்க பெரிதாகவும், பிடரி முடி அதிகமாகவும் இருக்காது. இருந்தாலும் இந்தியாவில் இருக்கிறதல்லவா அதனால் மண்ணின் மைந்தன் எப்போதும் கெத்துதான். அதேபோன்று இந்தக் காட்டில் 2500க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் இருக்கின்றன.  இந்த காட்டில் தேக்கு மரங்கள் சூழ சிங்கங்கள் வாழும் ஒரு சின்னகோட்டையாகவே இந்த கிர் காடு இருக்கிறது.

 

amazon forest



மனிதனுக்கு தேவையானது ஆக்சிஜன், அந்த ஆக்சிஜனின் மொத்த விழுக்காட்டில் இருபது சதவீதம் ஆக்சிஜனை இந்த உலகுக்கு அளிக்கும் ஒரு கொடை வள்ளல் காடுதான் அமேசான் காடு. அமேசான் காடுகளில்தான் பெரும்பாலான விலங்குகள், விஷ ஜந்துக்கள் வாழும் இடமாக இருக்கிறது, இருந்தாலும் ஜாகுவார் என்ற விலங்கினம் தான் இங்கு அரிதிலும் அரிது. ஜாகுவார் பார்ப்பதற்கு சிறுத்தையை போன்று இருந்தாலும் அதற்கும், ஜாகுவாருக்கும் சிறு வித்தியாசம் உண்டு. ஜாகுவாருக்கு புள்ளிகள் பெரிதாக இருக்கும், சிறுத்தைக்கு சிறியதாக இருக்கும். சில ஜாகுவார்களுக்கு ரோஜா பூ போன்றும் இருக்கும், அதிலும் சில ஜாகுவார்களை பிளாக் பேந்தர் என்று அழைப்பார்கள். அந்த புள்ளிகள் அதன் உடலில் அலைந்து கருப்பான நிறத்தில் இருப்பது போன்று இருக்கும். அதனால் அந்த வகைகளை பிளாக் பேந்தர் என்று அழைக்கின்றனர். ஜாகுவார் நதிகளின் ஓரத்திலும், மரக்கிளைகளிலும் வாழும் ஒரு விலங்கினம். அமேசான் காட்டில் எத்தனையோ வெயிட்டுக்கைகள் இருந்தாலும் ஜாகுவார் அவையனைத்திற்கும் மேலானதுதான்.

 

rhinoceros



ஆப்ரிக்க கண்டத்திலுள்ள பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் என்பது பெரும்பாலும் விலங்குகள் சரணாலயங்களின் மூலமாகத்தான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட ஆப்ரிக்க கண்டத்தில் நிறைய விலங்குகள் பார்க்க தோரணையாகவே இருக்கும். இங்கு இருக்கும் காடுகள் அடர்த்தியான காடுகள் இல்லை, பார்க்க புல்லும் விலகிய மரங்களாகவும்தான் இருக்கும், ஒருவேளை இது பாலைவனமாக இருக்குமோ என்று கூட பார்ப்பவர்களுக்கு தோன்றும். இங்கிருக்கும் காடுகளில் யானைகளும், சிங்கங்களும் இருந்தாலும் பார்க்கவே ராட்சசனை போன்று தோற்றம் கொண்ட காண்டாமிருகம்தான் இங்கு வெயிட்டு. யானையாக இருந்தாலும், சிங்கமாக இருந்தாலும் மூக்கில் இருக்கும் கொம்பை வைத்து ஒத்தைக்கு ஒத்தை நின்று பார்க்கும். ரைனோவிலேயே பல வகைகள் உண்டு, ஆசியாவிலும் கூட இது இருக்கிறது. இருந்தாலும் இந்த நிலப்பரப்பில் இருக்கும் ஒரு தோரணையான விலங்கு என்றால் அது வெள்ளை நிற ரைனோ தான், ரைனோவிலேயே பார்க்க பெரியதும், நிமிர்ந்த ஒரு தோற்றத்திலும் இருக்கும். உலகில் அழித்துக்கொண்டு வரும் விலங்குகளில் ரைனோ முன்னிலையில் இருக்கிறது.

 

elephant



இவற்றையெல்லாம் தாண்டி பல காடுகளில் உண்மையான ராஜாவாகத் திகழ்வது யானைகள் தான். காடுகளின் ஒவ்வொரு வழித்தடத்தையும் முழுமையாக அறிந்து பல தலைமுறைகளாக மனதில் வைத்திருப்பதை யானைகள். காடுகளின் ராஜாவாகக் கூறப்படும் சிங்கங்கள் கூட, யானைகளைக் கண்டால் சற்று மரியாதையாகத்தான் அணுகுவார்களாம். வேறு உணவேயில்லாத சமயத்தில் யானைகளை இரையாக்கத் துணியும் சிங்கங்கள் கூட்டமாகச் சென்றுதான் ஒரு தனி யானையைத் தாக்குவார்கள். அதுவும் இளம் யானையாகத் தான் இருக்குமாம். முழுமையாக வளர்ந்த யானையைத் தாக்க சிங்கங்களுக்கு தைரியம் போதாது. உலகிலேயே ஆப்பிரிக்காவின் 'போத்ஸ்வானா' சரணாலயத்தில் தான் யானைகள் எண்ணிக்கை அதிகம். கிட்டத்தட்ட 50000 - 60000 யானைகள் வரை இருக்கின்றன.     

இப்படி ஒவ்வொரு காட்டிலும் ஒவ்வொரு விலங்கு ராஜாவாகத் திகழ்கிறது. காட்டுக்கு எந்த விலங்கு தலைவனாக இருந்து என்ன பிரயோஜனம்? இந்த மனிதர்களிடம் சிக்கிக்கொண்டு இரண்டும் தானே அழிகிறது.

Next Story

ஆண்மை நீக்கம் செய்ய அதிரடி நடவடிக்கை; சட்டத்தை நிறைவேற்றிய மடகாஸ்கர் அரசு!

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
Madagascar government passed the law Action to remove the male factor who misbehave

உலகெங்கிலும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிராக பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இந்த குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகப் பல்வேறு நாடுகள் அதிரடி சட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மடகாஸ்கர் என்ற நாடு, பெண் குழந்தைகளுக்கு எதிராகப் பாலியல் வன்கொடுமை செய்வோருக்கு மிகக் கடுமையான ஒரு சட்டத்தை இயற்றியுள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடு மடகாஸ்கர். இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இதனிடையே, இந்த நாட்டில் வாழும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதாவது, கடந்த 2023ஆம் ஆண்டு மட்டும் சிறுமிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக 600 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் மட்டும் 133 பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது. அதன்படி, குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.

மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில், குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்ற பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட உள்ளது. ஜனாதிபதி ஒப்புதல் அளித்த பின்னர் அந்த சட்டம் அமலுக்கு வர உள்ளது.

Next Story

சென்னையில் விர்ச்சுவல் ஷாப்பிங்; அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

 Amazon brings its much-celebrated Amazon Xperience Arena to Chennai

 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  அமேசான் எக்ஸ்பீரியன்ஸ்  அரங்கை சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறது;  வணிக வாடிக்கையாளர்களுக்கு மொத்த கொள்முதல் மீது கூடுதல் சேமிப்பை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 வழங்கியிருக்கிறது

 

பண்டிகைக் காலத்தில் சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் வாகனம், ஃபர்னிச்சர்ஸ், லேப்டாப் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அவர்களுக்கு அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா (Amazon Xperience Arena)  மூலம் சென்னையில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஷாப்பிங் செய்வதில் பெரும் மகிழ்ச்சியைக் கொண்டுவந்திருக்கிறது. அதாவது,  Xperience Arena  என்பது அமேசானில் இடம்பெறும் பொருட்களுக்கு உயிர்கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு விர்சுவல் இடமாகும். 

 

இந்நிகழ்வானது, சென்னை எஸ்ஆர்எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. அமேசான் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வையை அனைவருக்கும் வழங்கியது. தவிர, ஊடகங்கள், இணைய பிரபலங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்த பிராண்டுகளை ஆராய்வதற்கும், தற்போது நடைபெற்று வரும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளைப் பெறுவதற்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கியது.

 

அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரீனா ஏழு கவர்ச்சிகரமான மற்றும் இண்டர்ஆக்டிவ் மண்டலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களுக்கு உற்சாகமான போட்டிகளில் பங்கேற்கவும், அற்புதமான அமேசான் பரிசுகளை வெல்லவும் உதவியது. ஸ்மார்ட்ஃபோன்கள், மடிக்கணினிகள், பெரிய உபகரணங்கள், தொலைக்காட்சிகள், நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட வகைகளில் பரந்த தேர்வுகளில் இதுவரை பார்த்திராத ஒப்பந்தங்களை அனுபவிக்கும் வாய்ப்பையும் இது வழங்கியது.

 

இதுகுறித்து அமேசான் இந்தியா இயக்குநர் சுசித் சுபாஸ் பேசுகையில், “அமேசான் கிரேட் இந்தியா ஃபெஸ்டிவல் 2023-ல் சென்னையில் உள்ள அமேசான் எக்ஸ்பீரியன்ஸ் அரங்கில் கிடைக்கும் அற்புதமான சலுகைகள் மற்றும் சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.  சென்னையில் வணிக வாடிக்கையாளர்கள் அமேசான் பிசினஸிலிருந்து கடந்த ஆண்டுகளில் தொடர்ந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர். இந்த பண்டிகைக் காலத்தில், வணிக வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகைகள், அற்புதமான சலுகைகளை வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் எங்களது அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023-ன் போது அவர்கள் அதிகமாக ஷாப்பிங் செய்யவும் மேலும் சேமிக்கவும் உதவுகிறோம்" என்றார்.