Skip to main content

'ஸ்வாதி கொலை வழக்'கை ஏன் மாற்றினீர்கள்? - விஷால் 

Published on 22/05/2018 | Edited on 23/05/2018
irumbu thirai.jpeg

 

 

vishal


ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரித்திருக்கும் படம் 'நுங்கம்பாக்கம்'. நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் போலீசாக அஜ்மல், நடிக்கிறார். மேலும் புதுமுகம் ஆயிரா, மனோ ஆகியோர்  முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். 'சுவாதி கொலை வழக்கு' என முதலில் தலைப்பு வைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பெயரை தற்போது 'நுங்கம்பாக்கம்' என படக்குழுவினர் மாற்றியுள்ளனர். எஸ்.டி. ரமேஷ் செல்வன் இயக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் நடிகர் விஷால், இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குனர் விக்ரமன், அஜ்மல், சினேகன், கதிரேசன்  உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

 

vishal

 

அப்போது விழாவில் நடிகர் விஷால் பேசியபோது.... "இந்த படத்தின் முந்தைய டைட்டிலான ஸ்வாதி கொலை வழக்கு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நான் கலந்து கொண்டேன். ஒரு நிஜ சம்பவத்தை படமாக்கும் போது அது சம்மந்தமான டைட்டில் வைப்பது தானே நியாயம். அப்புறம் எதுக்கு இப்போ 'நுங்கம்பாக்கம்' என்று டைட்டிலை மாற்றினீர்கள். சென்சாருக்காகவோ, இல்லை யாருடைய நெருக்குதலுக்காகவோ, டைட்டிலை மாற்றினீர்கள். ஏன் பயப்படனும், இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கு அதே எதிர்பார்ப்பு எனக்கும் இருக்கு. என்னோட இரும்புத்திரை படத்துக்கு போராட்டம் நடத்தி இரண்டு காட்சிகளை கேன்சல் செய்த கொடுமையையும் சந்தித்தேன். டிஜிட்டல் இந்தியா ஆதார் கார்டு பற்றி சொல்லப் பட்டதால் நானும் பிரச்சனையை சந்தித்தேன். பிரச்சனையை சந்திப்போம்" என்றார்

 

 

 

மேலும் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ்செல்வன் தொடர்ந்து பேசும் போது... "ஒரு கொலை பற்றிய கதையை படமாக எடுத்து விட்டு நான் ஊர் ஊராக ஓடி ஒளிய வேண்டியதாகி விட்டது. ஜெயிலுக்கு மட்டும் தான் போகவில்லை.  அந்தளவுக்கு பிரச்சனைகளை சந்தித்து விட்டேன். எனக்கு வேறு வேலை தெரியாது சினிமா மட்டும் தான் தெரியும். அதுக்காக தான் போராடிக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் நுங்கம்பாக்கம் நல்ல படமாக வரும்" என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்டன்ட் யூனியன் 2019 ஆண்டிற்கான நிர்வாகிகள் பதவியேற்றனர் 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
stunt union

 

 

தென்னிந்திய திரைப்பட சினி & டிவி ஸ்டன்ட் இயக்குனர்கள், ஸ்டன்ட் நடிகர்கள் யூனியன் 1966 ஆம் ஆண்டு  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு,கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் கடந்து, இன்று வரை சிறப்பாக செயல்பட்டு வரும் சங்கம் 52 வது ஆண்டு கடந்து தற்போது 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சென்ற முறை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு.S.G.சோமசுந்தரம் (எ ) S.D சுப்ரீம் சுந்தரே இந்த ஆண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.   

 

திரு.தவசிராஜ். S.D          –       உபதலைவர்

திரு.K.ராஜசேகர். S.D        –      துணைத்தலைவர்

திரு.G.பொன்னுசாமி S.A    -      செயலாளர்

திரு.V.மணிகண்டன் S.A    -      துணைச்செயலாளர்

திரு.S.S.M.சுரேஷ் S.A        -      இணைச்செயலாளர்

திரு.C.P.ஜான் S.A            -       பொருளாளர்

செயற்குழு உறுபினர்கள்

திரு.S.M.ராஜ் S.A 

திரு.P.ரவிக்குமார் S.A 

திரு.R.நாராயணன் S.A 

திரு.R.பாபு S.A 

திரு.A.வெங்கடேஷன் S.A 

திரு.U.ஆனந்தகுமார் S.A 

திரு.V.காசி S.A 

திரு.M.வெற்றிவேல் S.D

திரு.M.சுகுமார் S.A

திரு.B.K.பிரபு S.D

திரு.E.பரமசிவம் S.A

திரு.K.சதாசிவம் S.A

 

மேலே குறிப்பிட்டுள்ள நிர்வாகிகள் இந்த ஆண்டின் பொறுப்பாளர்கள் ஆவார்கள். அதுமட்டுமல்லாமல் 2019 ம் ஆண்டு தேர்தலை நல்ல முறையில் நடத்திக் கொடுத்த தேர்தல் அதிகாரி M.சாகுல் அமீர் S.D அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் பதவியேற்பு விழா இன்று (05.01.2019) காலை ஸ்டன்ட் யூனியனில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் கலைபுலி.S.தாணு, எஸ்.ஆர்.எம் குழுமத்தின் நிறுவனர் பாரிவேந்தர், மற்றும் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்கண்ணா, மனோஜ்குமார், வி.பிரபாகர், சண்முகசுந்தரம் உட்பட ஏராளமான பிரமுகர்கள் கலந்துகொண்டனர். வெற்றிபெற்ற உருப்பினர்களுக்கு 24 சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் ஏராளமான ஸ்டன்ட் கலைஞர்களும், ஸ்டன்ட் இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.

 

Next Story

தெலுங்கிலும் மாஸ் காட்டிய விஷால்

Published on 09/06/2018 | Edited on 09/06/2018
vishal


அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்கதில் விஷால் நடித்த 'இரும்புத்திரை' படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது. நாயகியாக சமந்தா நடித்துள்ள இப்படத்தில் வில்லனாக அர்ஜுன் நடித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் இப்படம் நல்ல வசூலை ஈட்டி தந்ததையடுத்து தெலுங்கில் 'அபிமன்யுடு' என்ற பெயரில் இப்படத்தை டப் செய்து வெளியிட்டனர். இதைத்தொடர்ந்து தற்போது எதிர்பார்த்தது போலவே தெலுங்கிலும் இப்படம் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதுவரை இப்படம் அங்கு 12 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இனிவரும் நாட்களிலும் இந்த வசூல் இன்னும் அதிகரிக்கும் எனவும் நம்பப்படுகிறது. மேலும் கிட்டதட்ட நேரடி தெலுங்கு படங்களுக்கு நிகரான வசூலை விஷால் அங்கு பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.