Skip to main content

விஜயின் புதிய தலைவலி!

Published on 03/03/2018 | Edited on 05/03/2018

vijay


மெர்சல் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் .ஆர்.முருகதாஸ் விஜயை இயக்குகிறார். .ஆர்.ரகுமான் இசையமைத்து வரும் இப்படத்தின் போட்டோ சூட்டின்போது புகைப்படங்கள் வெளியானது. பின்னர் முதல் கட்ட படப்பிடிப்புகள் சமீபத்தில் கொல்கத்தாவில் நடந்து முடிந்த நிலையில் விஜய் சண்டையிடும் காட்சியும் படங்களாகவும், வீடியோவாகவும் வெளியே கசிந்து சமூகவலைத்தளங்களில் வைரலானதால் பட குழுவிற்கு தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் படப்பிடிப்பு தளத்தில் செல்போன் தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சன் பிக்சர்ஸ் நிறுவனம் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்ற நிலையில் மறுபடியும் இந்த படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் இந்த புகைப்படங்களை அதிகமாக பகிரப்பட்டு டிரெண்டாக்கி வருவதால் படக்குழுவினர் செய்வதறியாமல் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களுக்கு நடிகர் விஜய் திடீர் அறிவிப்பு! 

Published on 14/09/2019 | Edited on 14/09/2019

ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என திரைப்பட நடிகர் விஜய் தன் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
 

Vijay instructs to fans

 

சென்னை பள்ளிக்கரணையில் அரசியல் பிரமுகர் வைத்திருந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி இறந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும் இனி வரவேற்பு பேனர்கள் வைக்க கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய்யும் தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். அதில்,

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது. பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

 

 

Next Story

விஜய் தான் மாஸ்... மற்றவர்களெல்லாம் அப்புறம் தான்; எம்.எல்.ஏ பரபரப்பு பேச்சு...

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

dfdgdf

 

நடிகர் விஜய் தான் கேரளாவில் தற்போது பெரிய நடிகர் என கேரள எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசியுள்ளது அங்குள்ள ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் அவர் கலந்துகொண்டு பேசும்போது, “கேரள தியேட்டர்களில் விஜய்க்கு மிகப்பெரிய கட் அவுட்கள் வைக்கப்பட்டு, அவரது ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்வதை நான் உள்பட பலரும் பார்த்து இருக்கிறோம். கேரளாவில் உள்ள முன்னணி மலையாள நடிகர்களை விட விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்” என கூறினார். மம்மூட்டி, மோகன்லால் படங்களை விட விஜய் படங்களுக்கு வர்த்தகம் அதிக அளவு உள்ளது எனவும் கூறினார். அவரது இந்த கருத்துக்கு மலையாள சினிமா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விஜய்க்கு ரசிகர்கள் இருப்பது உண்மைதான், ஆனால் மம்மூட்டி, மோகன்லால் அளவுக்கு இல்லை என கூறி எம்.எல்.ஏ ஜார்ஜுக்கு எதிராக மலையாள ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களது கருத்துக்களை பதிவிட்டுவருகின்றனர்.