Skip to main content

“சாதாரண சாமானியனாக வரும் அஜித்...” - விடாமுயற்சி குறித்து வெங்கட் பிரபு

Published on 06/02/2025 | Edited on 06/02/2025
venkat prabhu about ajith vidaamuyarchi

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இபப்டத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் இன்று(06.02.2025) வெளியாகியுள்ளது. 

இரண்டு படங்களுக்குப் பிறகு அஜித் படம் வெளியாகியுள்ளதால் அவரது ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கின் வளாகத்திற்கு முன் பேனர்கள், மேளதாளம், பட்டாசு என கொண்டாடி படத்தை வரவேற்றனர். இவர்களோடு முதல் நாள் முதல் காட்சியை த்ரிஷா, அனிருத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஆரவ், அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பார்த்து மகிழ்ந்தனர்.  

இந்த நிலையில் வெங்கட் பிரபு இப்படம் குறித்து தனது கருத்தை பதிவு செய்துள்ளார். எக்ஸ் வலைதளத்தில் அவரது பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “விடாமுயற்சி, அதன் ஜானரான ரோட் மூவிக்கு உண்மையாக இருந்தது. சாதாரண சாமானியனாக வரும் அஜித் மிகவும் புதிதாக இருந்தார். படத்தில் செம்ம சர்ப்பரைஸாக இருந்தது அர்ஜுனும், ரெஜினாவும்தான். சூப்பர் டூப்பர் பிளாக்பஸ்டர்” எனக் குறிப்பிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

சார்ந்த செய்திகள்