'ஒரு அடார் லவ்' படத்தின் பாடல் சமீபத்தில் வெளியாகி இணயதளங்களை தெறிக்க விட்டு கொண்டிருக்கிறது. இப்பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ள நடிகை பிரியா வாரியார் கண்ணடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி இளைஞர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.இதன் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக பிரபலமாகி விட்டார் பிரியா வாரியர். இதுவரை பாடலை யுடியூப்பில் பார்த்தவர்கள் எண்ணிக்கை மட்டும் ஒன்றரை கோடியை தாண்டி உள்ளது. இந்நிலையில் 'ஒரு அடார் லவ்' படத்தை மற்ற மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிட தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் போட்டா போட்டி ஏற்பட்டு உள்ளது. தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் கேரளாவில் முகாமிட்டு டப்பிங் உரிமைக்கு விலைபேசி வருகிறார்கள். தெலுங்கில் வெளியிட படக்குழுவினர் இரண்டு கோடி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலையாளத்தில் இந்த படத்துக்கு ஆன மொத்த செலவே இரண்டு கோடிக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஆனால் கண்ணடிக்கும் பாடல் காட்சிக்காக மற்ற மொழிகளில் வெளியிட அதிக விலை பேசுகின்றனர் என்றார் ஒரு மலையாள தயாரிப்பாளர். இந்த படம் திரைக்கு வரும் முன்பே கோடிக்கணக்கான லாபம் கொட்டுவதால் தயரிப்பாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பிரியா வாரியாருக்கு இத்தனை கோடியா...!
சார்ந்த செய்திகள்
Next Story
சினிமாவை விட்டு விலகும் பிரியா வாரியர்...? ரசிகர்கள் கவலை !
கண் சிமிட்டல் மூலம் பிரபலமான பிரியா வாரியர் நடிப்பில் வெளியான ‘ஒரு அடார் லவ்’ படம் எதிர்பார்த்த வெற்றி பெறாததால் தயாரிப்பாளருக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியை அவதூறு செய்வதுபோல் காட்சிகள் உள்ளது என்று அவரது கணவர் போனிகபூர் எதிர்த்து வருகிறார். இதனால் கடும் வருத்தத்திலும், கவலையிலும் இருக்கும் பிரியா வாரியர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
Next Story
அப்போது கண்சிமிட்டல் முத்தம்...இப்போது மோதல்...சண்டையிட்ட ஒரு அடார் லவ் நடிகை
'ஒரு அடார் லவ்' படத்தில் கண் சிமிட்டல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர். இவர் நடிப்பில் வெளியான இப்படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. படத்தில் நடித்த சக நடிகை நூரின் ஷெரீப்பிற்கு முன்னுரிமை அளித்து படத்தை உருவாக்க திட்டமிட்டுருந்ததாகவும், பிரியா வாரியர் கண்சிமிட்டல் வைரலானதும் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும்படி தயாரிப்பாளர் வற்புறுத்தியதால் பிரியாவாரியரை முதன்மையான கதாபாத்திரமாக்கியதாகவும் பட இயக்குனர் ஓமர் லூலு சமீபத்தில் அறிவித்தார்.
இதையடுத்து நடிகை நூரின் ஷெரீப், தனக்கு முதன்மை கதாபாத்திரம் என்று சொல்லி பின்னர் பிரியா வாரியருக்கு முக்கியத்துவம் கொடுத்து என்னை ஓரம் கட்டி துணை நடிகையாக்கிவிட்டனர் என வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த சம்பவம் காரணாமாக பிரியா வாரியருக்கும், நூரின் ஷெரீப்புக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.
மேலும் நூரின் ஷெரீப்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் பிரியா வாரியர் பேசியபோது.... "கதையை எனக்காக மாற்றியதாக குற்றம்சாட்டுகின்றனர். கண்சிமிட்டல் பாடலுக்கு பிறகு எனக்கு முக்கியத்துவம் அளிப்பதுபோல் கதையை மாற்றியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. படத்தில் தனக்கு முக்கியத்துவம் இல்லாமல் செய்துவிட்டதாக நூரின் ஷெரீப் குறை கூறி உள்ளார். அவரை படத்தில் ஓரம்கட்டவில்லை. முதலில் சொன்ன கதையைத் தான் அப்படியே படமாக்கி இருந்தனர்" என்றார் காட்டமாக.