Published on 03/10/2020 | Edited on 03/10/2020
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்புவுக்கு ரசிகர்கள் ஏராளம். 'மாநாடு' என்னும் படத்தில் நடித்து வந்தார். கரோனா அச்சுறுத்தலால் ஷூட்டிங் தடை பட்டது.
சுசீந்திரன் இயக்கத்தில் ஒரே மாதத்தில் படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார் சிம்பு.
இந்நிலையில், நடிகர் சிம்புவின் ரசிகர்கள் சிலர் ரத்தினகிரி முருகன் கோவிலில் வித்தியாசமான பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். வேலூரைச் சேர்ந்த சிம்பு ரசிகர்கள், சிம்புவுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் கையில் சிம்பு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, மண்டியிட்டுப் படியேறிச் சென்று முருகனை தரிசித்துள்ளனர்.