Skip to main content

கதாப்பாத்திரமாக மாறி காதலோடு வைரமுத்து எழுதிய பாடல்; விஜய் படத்தில் நடந்த சுவாரசியம் பகிரும் இயக்குநர் பாலசேகரன்

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Songs written by Vairamuthu with love as a character; Director Balasekaran shares about  Vijay film

 

நடிகர் விஜய்யின் சினிமா வாழ்க்கையில் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும் படம் 1997-ஆம் ஆண்டு வெளியான 'லவ் டுடே'. இந்த படத்தின் இயக்குநர் பாலசேகரன் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' நிகழ்ச்சி மூலம் தன்னுடைய திரைத்துறை அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் 'லவ் டுடே' படத்தில் இடம்பெற்ற 'என்ன அழகு எத்தனை அழகு' மற்றும் 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' பாடல்கள் உருவான விதம் பற்றி அவர் கூறியவை பின்வருமாறு...

 

 

"படத்திற்கு புது மியூசிக் டைரக்டர் சிவா. சௌத்ரி சார் சிவாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். அந்த நேரத்துல நானே சின்ன பையன். சிவா என்னை விட சின்ன பையனா இருந்தார். ஆனா, அவர்கிட்ட ஒரு ஃபயர் இருந்தது. அது பார்க்கும் போதும் பேசும் போதும் தெரிந்தது. பிறகு பாடலோட சூழல சொன்னோம். கதாநாயகியை எப்படியாவது கிட்ட நெருங்க முடியுமா என யோசித்து கொண்டிருக்கும் கதாநாயகன். கதாநாயகன் தடுமாறி கீழ விழுகிறான், கதாநாயகி அவன் கையை பிடித்து தாங்குகிறாள்.  முதல் முறையாக  கதாநாயகி அழகை பக்கத்தில் பார்க்கிறான். தூரத்தில் இருந்தே பார்த்து கொண்டிருந்த கதாநாயகன் தற்போது பக்கத்தில் பார்க்கும் அந்த தருணம். இந்த சூழலுக்கு ஒரு டியூன் கேட்டோம் . அதற்கு சிவா கொடுத்த  டியூன் நல்லாயிருந்தது. பாடலுக்கு வரிகள் எழுத வைரமுத்து சாரை அழைத்தோம். அவர் டியூனை கேட்டுட்டு வரிகள் எழுதி முடித்தார். அவர் எப்போதுமே வரிகளை எழுதி முடித்தவுடன் இயக்குநருக்கு படித்து காண்பிப்பார். அப்போது என்னிடம் இந்த பாட்டு பெரிய வெற்றியடையும், எனக்கும் ஒரு வித்தியாசமான பாடலா இருந்தது என்று சொன்னார். இப்படி உருவான பாட்டு தான்  'என்ன அழகு எத்தனை அழகு'."

 

 

இதனை தொடர்ந்து 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்' பாடல் உருவான விதம் பற்றி கூறினார். அவை பின்வருமாறு, "இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 'ஏன் பெண்ணென்று பிறந்தாய்'. இசையமைப்பாளர் சிவா இந்த டியூனை 2 வினாடி போட்டு காட்டினார். உடனே ஓகே ஆச்சு. 'ஹே கிருஷ்னாரே...என்று ஒரு ஸ்டார்ட் எடுத்து கொடுத்தார். நல்லாருக்கே, இதையே வைச்சிடலாம்ன்னு சொன்னேன். நான் வைரமுத்து சார்கிட்ட சூழலை சொன்னேன். நல்ல சூழல் என்று பாராட்டினார். நான் எப்போதும் பாடல் சூழலை சொல்லும் போது பழைய பாடல்களை சொல்லி இதுபோல் வேணும் என்று கேட்பேன்(அவர்களுக்கு உதவியாக இருக்குமென்று). அந்த வகையில் இந்த சூழலுக்கு நான் எடுத்துக்காட்டாக சொன்ன பாடல் வானம்பாடி படத்தில் இருந்து 'கடவுள் மனிதராக பிறக்க வேண்டும், அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்' பாடல். நல்ல வெற்றி பெற்ற பாடல். அந்த படத்தை இரண்டாவது முறை, மூன்றாவது முறை பார்க்க திரையரங்கிற்கு போவோம். இரவு மற்றும் மேட்னி காட்சிகள் தான் அதிகமாக பார்போம். அந்த பாடல் வரும் போது எழுப்பிவிடு என்று தூங்கிவிடுவோம்.

 

ஆனால் தற்போது பாட்டு வந்தால் திரையரங்கை விட்டு வெளியே போகிறார்கள். அந்த காலத்தில் ஒலியும் ஒளியும் கிடையாது. திரையரங்கில் மட்டும் தான் பாடலை கேட்க முடியும். பாடல் வரும்போது எழுப்பிவிடுவார்கள் எழுந்து பாடலை பார்த்துவிட்டு திரும்பி தூங்கிவிடுவோம். அப்படி இந்த 'கடவுள் மனிதராக பிறக்க வேண்டும்' என்ற பாடல் வரும்போது மக்கள் அனைவரும் கைதட்டினார்கள். 'அவன் பெண் என்றால் என்னவென்று உணரவேண்டும்' என்று கடைசியாக முடித்திருப்பார். பெண்களுக்கு எதிராக பாட்டு அந்த காலத்திலிருந்து வந்துகொண்டுதான் இருக்கிறது. அந்த ஆணின் வலியை 'இமயம் கேட்கும் என் துடிப்பு ஏனோ உனக்குள் கதவடைப்பு' என்று முடித்திருப்பார். இது போன்ற வரிகள் வைரமுத்து சாரால் மட்டும் தான் எழுத முடியும். அதனை எடுத்துக்காட்டாக சொன்னோம். ஆனால் அவர் அந்த கதாபாத்திரமாய் மாரி காதலோடு எழுதி இருப்பார். காதல் இல்லாவிட்டால் வார்த்தைகள் இந்த அளவிற்கு வீரியமாய் வரமுடியாது" என்று கூறி இருந்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்த முறை காரில் வருகை; கையில் பிளாஸ்திரி’ - ஜனநாயக கடமையாற்றிய த.வெ.க. தலைவர் விஜய்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
casted his vote at Neelankarai polling station. T.V.K. Leader Vijay

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது வீட்டிலிருந்து வந்து சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தனது வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு வந்த நிலையில் தற்போது தனது வீட்டில் இருந்து கார் மூலம் வாக்குச்சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையாற்றியுள்ளார்.  சமீபத்தில் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் த.வெ.க. தலைவராக முதல்முறையாக வாக்களித்துள்ளார். காயம் காரணமாக கையில் ப்ளாஸ்திரி ஒட்டியுள்ள நிலையில் தற்போது வாக்கினை செலுத்தியுள்ளார்.முன்னதாக கோட் படப்பிடிப்பிற்காக துபாயில் இருந்த விஜய் இன்று காலை விமானத்தின் மூலம் சென்னை வந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.