Skip to main content

ரகுல் ப்ரீத்துடன் மீண்டும் இணைந்த சிவகார்த்திகேயன் 

Published on 19/02/2019 | Edited on 19/02/2019
sivakarthikeyan

 

 

ஒரே நேரத்தில் 'மிஸ்டர் லோக்கல்' படத்திலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் ரவிக்குமார் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு நேற்று துவங்கியது. இதை அறிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்குமார், ரகுலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் விவசாயியாக நடிக்கும் இப்படத்தில் கருணாகரன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோ சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘வேற லெவல் சகோ’ - பிறந்தநாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

vdsgs

 

'இன்று நேற்று நாளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் இயக்குனர் ரவிக்குமார். இவர், நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து 'அயலான்' என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 

பணப்பிரச்சனை காரணமாக, பாதியில் முடங்கிய இப்படத்தின் பணிகள், கரோனா நெருக்கடிநிலை காரணமாக நீண்ட நாட்களாகவே கிடப்பில் இருந்தது. பின் மீண்டும் படப்பிடிப்பைத் துவங்கிய படக்குழு, படத்தின் மொத்தப் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளது. படத்தில் கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் சார்ந்த காட்சிகள் நிறைய உள்ளதால், படப்பிடிப்பு நாட்களுக்கு இணையான நாட்கள் படத்தின் சி.ஜி. பணிகளுக்குத் தேவைப்படுகிறது. எனவே, படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டாலும், இந்த ஆண்டு இறுதியில்தான், 'அயலான்' திரைப்படம் வெளியாக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. 

 

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை (17 பிப்.) முன்னிட்டு ‘அயலான்’ படத்தின் 'வேற லெவல் சகோ..' என்ற சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. 

 

Next Story

"என்னை ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி!" - சிவகார்த்திகேயன் ட்வீட்!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

fdhfdhb

 

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் இணைந்து நடிக்கும் 'அயலான்' படத்தை 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் ஃபிக்சன் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே ஆரம்பித்து பின்னர் பாதியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து இதன் படப்பிடிப்புகள் தற்போது மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில், நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'அயலான்' படத்தில் தன்னுடைய பகுதி படப்பிடிப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்... "அயலான் திரைப்படத்தின் கிட்டத்தட்ட கடைசிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கிறேன். எனக்கு கடைசி 3 நாட்கள் மட்டுமே உள்ளது. என்ன ஒரு உணர்ச்சிமிக்க இயக்குனர் ரவிக்குமார். இனிமையாகப் பழகக்கூடியவர் சிவகார்த்திகேயன்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பதில் ட்வீட் செய்த சிவகார்த்திகேயன், "உங்களுடன் பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி ரகுல் பிரீத். என்னை எப்போதும் ஆங்கிலத்தில் பேச வைத்ததற்கு நன்றி" எனப் பதிவிட்டுள்ளார். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி ராஜா பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.