Skip to main content

ரிலீஸ் சிக்கலால் முடிவை மாற்றிக்கொண்ட சிம்பு படக்குழு!

Published on 12/01/2021 | Edited on 12/01/2021

 

simbu

 

சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால், பாரதிராஜா, பாலசரவணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஈஸ்வரன். இப்படத்தில் ஒளிப்பதிவாளராக திரு, இசையமைப்பாளராக தமன் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். மாதவ் மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

அக்டோபர் மாதம் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு 30 நாட்களுக்குள் படத்தின் ஷூட்டிங் முடிக்கப்பட்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாகும் என்று படக்குழு முன்னரே அறிவித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து படக்குழு அதற்கான விளம்பரப் பணிகளில் ஈடுபட்டு படத்தை புரோமோட் செய்துவந்தது. இதனிடையே, ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் அதே நாளில், வெளிநாட்டு வாழ் மக்களுக்காக ஒலிஃப்ளெக்ஸ் என்ற ஓடிடி தளத்திலும் ஈஸ்வரன் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது.

 

இந்த அறிவிப்பால் ஈஸ்வரன் படக்குழு மீது திரையரங்க உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஓடிடியில் வெளியாவதால் திரையரங்குகளில் 'ஈஸ்வரன்' படத்தை வெளியிடப் போவதில்லை எனப் போர்க்கொடி தூக்கினர். இதனால் திட்டமிட்டபடி 'ஈஸ்வரன்' வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது.

 

திரையரங்க உரிமையாளர்களின் அறிவிப்பால், 'ஈஸ்வரன்' படக்குழு தங்களுடைய முடிவை மாற்றிவிட்டது. ஒலிஃப்ளெக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகாது என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் 'ஈஸ்வரன்' வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் தீர்ந்துள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்