Skip to main content

'லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை' - சாய்பல்லவி அதிரடி !

Published on 30/12/2018 | Edited on 30/12/2018
saipallavi

 

 

'மாரி 2' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'என்.ஜி.கே' படத்தில் நடித்து வரும் சாய் பல்லவி தன் வாழ்க்கை குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசியபோது...."நான் புத்தகங்கள் மற்றும் சினிமாவை காதலித்துக் கொண்டிருக்கிறேன்.என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரை லிவிங் டூகெதர் உறவு எனக்கு தேவையில்லை. இப்படி சொல்வதால் அதற்கு எதிராக இருக்கிறேன் என்பதல்ல. இது எல்லாமே அவரவர்களின் செயல்பாடுகளை பொறுத்தது. நான் திருமணம் செய்துகொண்டு வாழ்வதையே விரும்புகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாய் பல்லவிக்கு பதில் ஆலியா பட்

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

alia bhatt replace sai pallavi in ranbir kapoor ramayana movie

 

ராமாயணக் கதையைக் கொண்டு தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் முன்னரே வெளிவந்துள்ள நிலையில் ராமாயணத்தின் ஒரு பகுதியை மையமாக வைத்து 3டி தொழில்நுட்பத்தில் பிரபாஸ், க்ரீத்தி சனோன், சையிப் அலிகான் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  'ஆதிபுருஷ்' திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இதனிடையே 2019 ஆம் ஆண்டு மது மந்தனா தயாரிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் ராமாயணம் கதையை எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதற்கான ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் ரன்பீர் கபூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. மேலும் சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் கே.ஜி.எஃப் புகழ் யஷ் ராவணன் கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டது. 

 

இந்நிலையில் சாய் பல்லவிக்கு பதிலாக ஆலியா பட் சீதை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ப்ரீ-ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளதாகவும் இந்தாண்டு இறுதியில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 


 

Next Story

பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்வித்த சாய்பல்லவி

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

Saipallavi delights fans on her birthday

 

2015-ல் மலையாளத்தில் வெளியான 'ப்ரேமம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இந்த படத்தில் 'மலர்' கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தை ஈர்த்து பிரபலமானார். தமிழில் 'என்ஜிகே', 'மாரி 2' படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான 'ஷியாம் சிங்க ராய்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அடுத்து ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'விரத பர்வம்' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம்  ஜூலை மாதம் 1-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் சாய் பல்லவி தனது 30-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளன்று ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக போஸ்டர் ஒன்றையும் கிளிம்ஸ் விடியோவையும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 'கார்கி' என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கவுதம் ராமசந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட நான்கு பேர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.