
இயக்குனர் சசிகுமார் நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ். நந்தகோபால் தயாரிக்கும் நாடோடிகள் 2 படத்தை முதல் பாகத்தை இயக்கிய சமுத்திரகனியே இயக்குகிறார். மேலும் இதில் சசிகுமார் நாயகனாக நடிக்க, அஞ்சலி நாயகியாக நடிக்கிறார். மற்றும் பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி, ஸ்ரீரஞ்சனி, சூப்பர் சுப்புராயன், ராம்தாஸ், கோவிந்த மூர்த்தி மற்றும் சமுத்திரகனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகிற 9 ம் தேதி மதுரையில் துவங்கி ஒரே கட்டமாக நடைபெற்று முடிவடைய உள்ளது.இதை தொடர்ந்து 11ம் தேதி பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட உள்ள ஒரு பாடல் காட்சியில் படத்தில் உள்ள அனைத்து நட்சத்திரங்களும் பங்கேற்கிறார்கள்.