Skip to main content

திடீர் திருமணம் குறித்து மனம் திறந்த கயல் ஆனந்தி...

Published on 10/01/2021 | Edited on 10/01/2021

 

kayal

 

 

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான படம் 'கயல்'. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் ஆனந்தி. அப்படத்தின் வெற்றி மற்றும் அவரது கதாபாத்திரத்திற்குக் கிடைத்த வரவேற்பையடுத்து, திரையுலகில் 'கயல் ஆனந்தி' என அறியப்படுகிறார். 

 

இந்நிலையில், சாக்ரடீஸ் என்ற இணை இயக்குனருடன் கயல் ஆனந்திக்கு கடந்த வாரம் திடீரென திருமணம் நடைபெற்றது. மணமகன் சாக்ரடீஸ், ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனின் நெருங்கிய உறவினர் ஆவார். இவர் நவீன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். 

 

தெலங்கானா மாநிலம், வாராங்கல் பகுதியில் உள்ள கோடெம் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற இத்திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

 

தற்போது தனது திருமணம் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஆனந்தி. இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறுகையில், “உங்கள் வாழ்வின் எஞ்சிய நாட்களை நீங்கள் விரும்பும் ஒருவரோடு கழிக்க விரும்பும்போது, உங்கள் வாழ்க்கையின் எஞ்சிய நாட்கள் சீக்கிரம் தொடங்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்.

 

பல ஆண்டுகளாக, பல்வேறு கடினமாகச் சூழல்களை ஒன்றாகக் கடந்து, ஒருவரை ஒருவர் தெரிந்துகொண்ட பின்னர், ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இவ்வுலகை வெற்றி கொள்ள முடியும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். கடந்த ஜனவரி 7 அன்று என் குடும்பம் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஒரு சிறிய நிகழ்வாக சாக்ரடீஸ் உடன் நடந்த எனது திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக எங்கள் திருமணத்தில் கலந்துகொள்ள முடியாதவர்களை நாங்கள் மிஸ் செய்தோம்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்