Skip to main content

நடிகை சாவித்திரி வழியில் ஜெயலலிதா...

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
jayalalitha

 

 

 

திரையுலகில் தற்போது வாழ்க்கை வரலாற்று படங்கள் சீசன் உச்சத்தில் உள்ளது. சில்க் ஸ்மிதாவின் 'டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் ஆரம்பித்து சமீபத்தில் ரிலீசான நடிகை சாவித்திரியின் 'நடிகையர் திலகம்' படம் வரை இது தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அந்த வரிசையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தை, இயக்குனர்கள் பாரதிராஜா, மற்றும் விஜய் ஆகியோர் இயக்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில் இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தயாரித்து, இயக்கவுள்ளதாக அறிவித்தார். இந்நிலையில் பிரியதர்ஷினி இயக்கவுள்ள ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் தலைப்பு இன்று ‘தி அயர்ன் லேடி’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. இதன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த போஸ்ட்டரில் படத்தின் தொடக்க விழா மிகப்பெரிய அளவில் விரைவில் நடக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் பிரியதர்ஷினி வரலட்சுமி சரத்குமார் நடித்த ‘சக்தி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''யாருங்க சொன்னா, நான் இதுக்காகத்தான் அப்படி செஞ்சேன்னு'' - கீர்த்தி சுரேஷ் விளக்கம்

Published on 10/08/2019 | Edited on 10/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகைக்கான விருதை மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றார். இவருக்கு பல்வேறு தரப்பிலுருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் இவர் தன்னை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி தெரிவித்தும், தன் உடல் எடை மெலிவு குறித்தும் நேற்று அளித்த ஒரு பேட்டியில் பேசியபோது....  

 

keerthy suresh

 

 

''எனக்கு தேசிய விருது கிடைத்ததற்காக பாராட்டிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி. நான் 'நடிகையர் திலகம்' படம் முடித்த பின் ஒரு 5 மாதம் ஓய்வில் இருந்தேன். அந்த சமயம் என்னை பலரும் ஏன் குண்டாக இருக்கிறாய், சப்பியாக இருக்கிறாய் என்றெல்லாம் கேட்டார்கள். நானும் சரி இனிமேல் சில காலம் ஒர்கவுட் எல்லாம் செய்து பார்ப்போம் என ஆரம்பித்து 5, 6 மாதங்கள் உடற்பயிற்சி செய்தேன். அதன் பலன்தான் நான் இருக்கும் தற்போதைய தோற்றம். யார் கிளப்பிவிட்டாரகள் என தெரியவில்லை. நான் எந்த படத்திற்காகவும் என் உடலை குறைக்கவில்லை. சொல்லப்போனால் சில தமிழ் படங்களுக்காக என்னை அணுகிய சிலர், இன்னும் கூட வெய்ட் போட சொல்கிறார்கள்'' என்றார்.

 

Next Story

கீர்த்தி சுரேஷிற்கு தேசிய விருது ஏன்...? தேர்வுக்குழு சொன்ன அசத்தல் காரணம்!

Published on 09/08/2019 | Edited on 09/08/2019

66வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி விருதுகள் வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Keerthy

 

 

இதில் சிறந்த நடிகைக்கான விருதை ''மகாநதி (நடிகையர் திலகம்)'' படத்திற்காக நடிகை கீர்த்தி சுரேஷ் பெற்றுள்ளார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தெலுங்கில் ‘மகாநதி’ என்ற பெயரிலும், தமிழில் 'நடிகையர் திலகம்' என்ற பெயரிலும் வெளியான இப்படத்தில் சாவித்திரியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்கியதற்கான காரணத்தை தேர்வு குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 'ஒரு வாழ்க்கை வரலாற்று படத்தின் வெவ்வேறு காலகட்டங்களுக்கு ஏற்ற வகையில், பலவிதமான உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்தியதற்காக' இந்த தேசிய விருதை கீர்த்தி சுரேஷிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.